10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 25-11-2024 முதல் 29-11-2024
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தேம்பாவணி
2. ஒருவன் இருக்கிறான்
1.கற்றல் நோக்கங்கள் :
@ நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல்
Ø @ மனித மாண்புகளையும் விழுமியங்களை யும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல் .
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்கெல்லாம் அம்மாவைப்பிடிக்கும் ?
Ø உங்கள் நண்பரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன .
@ துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணையொன்று இருப்பதை அறியும்போது நமக்குக் குற்றவுணர்ச்சி தோன்றும் வாய்ப்பிருக்கிறது. எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும
5.ஆசிரியர் செயல்பாடு :
@ தேம்பாவணி பாடலில் வரும் விழுமியங்களை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்க்கு உணர்த்துதல், பகுபத உறுப்பிலக்கணம், இலக்கணக்குறிப்பு போன்றவற்றை விளக்குதல்.
§ ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதையை, உரிய மெய்ப்பாடுகளுடன் விளக்கிக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
தேம்பாவணி
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1047 - மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட பிற்காலக் காப்பிய இலக்கியத்தை படித்தல்.
Ø @ 1048 - நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தல், அது போல எழுதுதல்