8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 3 RD WEEK

     8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 20-11-2023 முதல் 24-11-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                                           

பாடத்தலைப்பு     :  1. படைவேழம்

                                             2. விடுதலைத்திருநாள்

1.கற்றல் நோக்கங்கள்   :

    Ø சிற்றிலக்கியங்களில் உள்ள இலக்கிய நயங்களை நுகர்தல் 

    Ø தேசிய விழாக்களின் சிறப்பினை உணர்ந்து கொண்டாடுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # திரைப்படங்களில் வரும் போர்க்காட்சிகளைப் பார்த்துள்ளீர்களா?

       # இந்தியா எப்போது விடுதலை அடைந்தது?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

        Ø  தமிழர்கள் அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாகக் கொண்டவர்கள். அவர்தம் வீரமும் போர் அறமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை . பகைவரை அஞ்சச் செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பினை நமக் கு உணர்த்துவன.

         @ பிறந்தநாள், திருமணநாள் போன்றன தொடர்புடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் நாள்களாகும். சமயத் தொடர்பான விழாக்கள் குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும். இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் இன்றியமையா நாள் விடுதலை நாள்

5.கருத்துரு வரைபடம்:

படைவேழம்


விடுதலைத் திருநாள்



6.ஆசிரியர் செயல்பாடு:
  @ செய்யுட்பகுதியை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்.
  @ நிகழ்காலச்சான்றுகளோடு பாடப்பொருளை விளக்குதல்

7.மாணவர் செயல்பாடு:

   Ø  இலக்கிய நயங்களை உள்வாங்கி அதைச் செயல்பாடுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தல்

     Ø  மாணவர்கள் செய்யுட்பகுதியை ஏற்ற இறக்கத்துடன் படித்தல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1. கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் யார்?
 2. இந்தியா எப்போது விடுதலை பெற்றது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
3. பகத்சிங் கண்ட கனவு யாது?
4.கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
5.கலிங்கத்துப்பரணி கூறும் போர்முறையை இன்றைய போர் முறையோடு ஒப்பிடுக.
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

      @ 816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்.)

       @  809- படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை