ANNUAL EXAM 9 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY 2024 TIRUVANNAMALAI DISTRICT

முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 , 

திருவண்ணாமலை மாவட்டம்


திருவண்ணாமலைமுழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்  2023 - 2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்     

விடைக்குறிப்புகள்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

. தொல்காப்பியம்

1

 

2.

. கெடுதல்

1

 

3.

. செய்தித் தொடர்

1

 

4.

. சிற்றிலக்கியம்

1

 

5.

. தொகைச்சொற்கள்

1

 

6.

. பிப்ரவரி 21

1

 

7.

. புகார்

1

 

8.

. கணியன் பூங்குன்றனார்

1

 

9.

. மாமல்லபுரம்

1

 

10.

.மோகன்சிங்

1

 

11.

. வீரமாமுனிவர்

1

 

12.

. ஓரெழுத்து

1

 

13.

. திருக்குறள்

1

 

14.

. தொடு உணர்வு

1

 

15.

. 1856

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16.

, ஆ ஆகிய வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

17.

எனைத்தானும்  நல்லவை  கேட்க  அனைத்தானும்

ஆன்ற   பெருமை  தரும்.

1

1

 

18.

இரண்டு அடிகளுடன் எதுகையால் தொடுக்கப்படுவது.

2

 

19

தன்னை இகழ்பவரிடம்

2

 

20.

பந்தலின் கீழ் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது

2

 

21

பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

வேற்றுமைத்தொடர் , விளித்தொடர்

2

 

23

. அகழ்வாராய்ச்சி   . நடுகல்

2

 

24

வந்தான்வா() +த்(ந்)+த்+ஆன்

வாபகுதி , வ எனக்குறுகியது விகாரம், த்சந்தி , ந்- விகாரம், த்இறந்தகால இடைநிலை

ஆன்ஆண்பால் வினைமுற்று விகுதி

2

 

25.

.    .

2

 

26.

பொருந்திய விடைகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

 

27.

ü  திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாக திகழ்கின்ற தமிழ், பிற திராவிட

      மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.

ü  மூலத் திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.

ü  காலந்தோறும் தன்னைப்புதுப்பித்துக் கொள்கிறது.

2

 

28.

. பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்  . குழலிக்குப் பாடத் தெரியும்.

2

 

பகுதி – 3

பிரிவு - 1

29

. இராமேசுவரம்  . அப்துல்கலாம்  . பாரத ரத்னா

3

 

30

       நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

3

 

31.

  • 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை
  • மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
  • அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.

3

 

பகுதி – 3

பிரிவு - 2

32

1.. சிறுபஞ்சமூலம்  2. . எதிர்மறைத் தொழிற்பெயர் 3. . காரியாசான்

3

 

33.

  • சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
  • மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
  • மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்

3

 

34.

.

      காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

 மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை

 கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

     நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாநலமெல்லாம்.

.

     ஒன்றறி வதுவே  உற்றறி  வதுவே

     இரண்டறிவதுவே  அதனொடு நாவே

     மூன்றறிவதுவே  அவற்றொடு மூக்கே

     நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

     ஐந்தறி வதுவே  அவற்றொடு செவியே

     ஆறறி  வதுவே  அவற்றொடு மனனே

     நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

3

 

பகுதி – 3

பிரிவு - 3

35

பொருந்திய விடைகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

3

 

36.

அணிகளில் இன்றியமையாதது உ வமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

மலர்ப்பாதம் மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.

பாதம் - பொருள் (உவமேயம்)

மலர் - உவமை போன்ற -உவம உருபு. இதில் உவமையணி அமைந்துள்ளது.

3

 

37

சீர்

அசை

வாய்பாடு

தன்குற்றம்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

நீங்கிப்

               நேர்+நேர்           

தேமா

பிறர்குற்றம்

நிரை +நேர்+நேர்

புளிமாங்காய்

காண்கிற்பின்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

என்குற்றம்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

ஆகும்

               நேர்+நேர்           

தேமா

இறைக்கு

நிரைபு

பிறப்பு

3

 

பகுதி – 4

38

ü  அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு 

ü  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

5

 

   தமிழக உழவர்கள், தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவின்போது, மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடிகயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டுவர். பின்னர் பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர். இதன் தொடர்ச்சியாக வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.

5

 

39

. .    விளி-1/2  மதிப்பெண்,இடம் நாள்-1/2 மதிப்பெண்,இப்படிக்கு-1/2 மதிப்பெண், உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண்,கடிதத்தின் உடல்-3 மதிப்பெண்

. அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2 மதிப்பெண்.

5

 

40

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

 

41

      ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

      என்னை எழுது என்று

      சொன்னது இந்த காட்சி

      இது அர்த்தமுள்ள காட்சி

      விழிப்புணர்வுக்கான காட்சி

5

 

42

1)  இனிய    2) கொடிய    3) நல்ல   4) மெதுவாக  5) அழகாக

5

 

 

பகுதி – 5

 

 

43 .

மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

 

முன்னுரை:
   தமிழக மக்களைப் பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச் சென்றவர் பெரியார். இந்தியாவின் பழமையான மொழி தமிழ். பழமையான இலக்கியமும் தமிழிலே உள்ளன. இலக்கியத்திலும், மொழியிலும் பெரியார் செய்த சீரமைப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.

மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் கருத்து:
       மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும், மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராய் இருந்தார் தந்தை பெரியார்.

இலக்கிய சீர்திருத்தம்:
       அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும். மதம் கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற, யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியமே அதிகளவில் வேண்டும். திருக்குறளில் அறிவியல் கருத்துக்களும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால், அதை மதிப்புமிக்க நூலாகக் கருதியதோடு, திருக்குறளைப் போன்ற இலக்கியம் உருவாக வேண்டும் என்ற சீர்திருத்தத்தை உருவாக்க முனைந்தார். இலக்கியமானது அரசியல், சமூகம், பொருளாதாரம், சுயமரியாதை உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.

மொழியில் சீர்திருத்தம்:
       ஒரு மொழியின் பெருமையும், மேன்மையும், அவை எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க தயங்கக் கூடாது என்று கருதினார் பெரியார். மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்றார்.

      அதற்கேற்ப, உயிர் எழுத்துக்களில்என்பதைஅய்எனவும்என்பதைஅவ்எனவும் சீரமைத்தார். மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார். கால வளர்ச்சிக்கு மொழி சீரமைப்புகள் தேவை என்று கருதினார். அவரது சீரமைப்புக் கருத்தின் சில கூறுகளை 1978ம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

முடிவுரை :    

    மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் சிந்தனைகள், அறிவுலகின் திறவுகோலாய்த் திகழ்ந்தது எனில் மிகையாகாது.

8

 

44.

.

முன்னுரை :   

      கடித செய்தி என்பது உயிர்ப்புள்ள மொழி. செய்தியை அளிப்பவருக்கும், பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை உறுதியாக்குகிறது. தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம்.

குழந்தைப் பருவமும்உலக வாழ்வும் :
       என் செல்லப் பூங்குட்டியே! நீ குழந்தையாய் இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து, சாகசம் கொண்டாடினாய். தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய்; எழுந்தாய்; விழுந்தாய்; நடந்தாய்; ஓடினாய்.

       இந்த உலக வாழ்வும் இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும் சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும் எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும்.

அனுபவமே கல்வி :
         கல்வியில் தேர்ச்சி கொள்ள வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன் வாழ பயன்படும் சூத்திரம் ஆகும்.

அன்பாக இரு:
          எங்கும், எதிலும் எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே, உன் அன்பால் நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும்.

உனக்கான காற்றை நீயே உருவாக்கு :
            என் மகனே மாநகரத்தில் நீ வாழ்க்கை முழுக்கக் கோடைகாலங்களையும், வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறி கொண்டிருக்க முடியாது. உனக்கான காற்றை நீயே உருவாக்கு.

புத்தகங்களை நேசி :   புத்தகங்களை நேசிக்கத் தவறாதே. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

முடிவுரை:                     
             இக்கருத்துக்கள் அனைத்தும் முத்துக்குமாரின் மகனுக்கு மட்டுமல்ல. இதனைப் படிக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், வளர்வதற்கும், உயர்வதற்கும், ஏற்ற கருத்துக்கள் ஆகும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

8

 

இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம்.

      இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.

         இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் 'ரோகினி' ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.

      1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

8

 

45 .

மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

 

45. .

மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

 

 

பதிவிறக்கம் செய்ய 

 

 

 

 

 

 


  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை