ANNUAL EXAM 9 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY 2024 TIRUPPATHUR DISTRICT

முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 , 

திருப்பத்தூர் மாவட்டம்


வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய

இங்கே சொடுக்கவும் 

திருப்பத்தூர்  – முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்  2023-2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்     

விடைக்குறிப்புகள்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

. சிற்றிலக்கியம்

1

 

2.

. புலரி

1

 

3.

. தொகைச்சொற்கள்

1

 

4.

. மாமல்ல்புரம்

1

 

5.

. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

1

 

6.

. அள்ளல் - சேறு

1

 

7.

. பண்புத்தொகை , வினைத்தொகை

1

 

8.

. அறிவு

1

 

9.

. தொகைச்சொற்கள்

1

 

10.

. பிறப்பு

1

 

11.

. சேக்கிழார்

1

 

12.

. நாச்சியார் திருமொழி

1

 

13.

. ஆண்டாள்

1

 

14.

. மாலை

1

 

15.

. இரண்டாம் வேற்றுமைத்தொகை

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16.

, ஆ ஆகிய வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

17.

இரண்டடிகளால் பாடப்படும் செய்யுள் வகை

1

1

 

18.

எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.

2

 

19

பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது

2

 

20.

தமிழ், மலையாளம், கன்னடம்,துளு

2

 

21

எனைத்தானும்  நல்லவை  கேட்க  அனைத்தானும்

ஆன்ற   பெருமை தரும்.

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

. ஆசிரியர் நடத்திய பாடம்    பசுமரத்தாணிபோல மனதில் பதிந்தது

. அத்திபூத்தாற்போல கோடையில் மழை பெய்தது

2

 

23

வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்

வளர் – பகுதி

 ப் - சந்தி,

 ப் - எதிர்கால இடைநிலை

ஆய் – முன்னிலை  ஒருமை  வினைமுற்று விகுதி

2

 

24

. கலந்துகொள்வாள்    . பேசப்படுகின்றனர்

2

 

25.

. மொழியியல்    . இலக்கியம்

2

 

26.

. வனைய   . வீசியது

2

 

27.

இடவாகுபெயர்

2

 

28.

நல்ல தமிழில் எழுதுவோம்

2

 

பகுதி – 3

பிரிவு - 1

29

  • 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை
  • மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
  • அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.

3

 

30

ஏரி , குளம், குட்டை, கண்மாய்

3

 

31.

.. உடம்பினைத் தூய்மை செய்தல்   

ஆ. சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் 

இ. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி 

3

 

பகுதி – 3

பிரிவு - 2

32

ü  திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாக திகழ்கின்ற தமிழ், பிற திராவிட

      மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.

ü  மூலத் திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.

ü  காலந்தோறும் தன்னைப்புதுப்பித்துக் கொள்கிறது.

3

 

33.

ü  அறிவியல் என்றும் ஊர்தியின் மீது ஆட்சி செய்கின்ற தமிழை நிறுத்துங்கள்.

ü  கல்லணையை கவினுற கட்டிய கரிகாற் சோழனின் மேன்மையையெல்லாம் கணிப்பொறி உள்ளே சேகரித்து வையுங்கள்.

ü  ஏவுகின்ற திசையில் பாய்ந்த அம்பைப் போல நம் இனத்தை வீரமுடையதாக்குங்கள்.

ü  அறிவியல் முன்னேற்றத்தால் நாம் ஏவுகின்ற ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும் ஏற்றுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர் வைரமுத்து.

3

 

34.

.

      காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

 மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை

 கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

     நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாநலமெல்லாம்.

.

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமைநாறுவ வித்துஉள; மேதைக்கு

     உரையாமைசெல்லும் உணர்வு.

3

 

பகுதி – 3

பிரிவு - 3

35

   முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறுபொருள் உணர்த்துவது   சொல் பின்வருநிலை அணியாகும்.

(எ.கா.)

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

    துப்பாய தூஉம் மழை.

       இக்குறளில்துப்புஎன்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது. துப்பார்க்கு உண்பவர்க்கு; துப்புநல்ல, நன்மை; துப்பு உணவு என்று பல பொருள்களில்  வருவதைக்  காணலாம்.

3

 

36.

உரிய விடையைச்சான்றுடன் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

3

 

37

சீர்

அசை

வாய்பாடு

பிறர்நாணத்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தக்கது

              நேர்+நிரை          

கூவிளம்

தான்நாணா

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

வாயின்

               நேர்+நேர்            

தேமா

அறம்நாணத்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தக்க

               நேர்+நேர்            

தேமா

துடைத்து

நிரைபு

பிறப்பு

3

 

பகுதி – 4

38

முன்னுரை :

     நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

களை பறிக்கும் பருவம்:

     நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும்  பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும் கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன.

வானவில் :

    அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும். இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.

பொன்மாலைச் சாரல் :

     நெல்கற்றைகள் போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான எருமைக் கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும் இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சி போல உள்ளது.

செழித்து வளர்ந்துள்ளவை :

    சோழ நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம், அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குளிர்ந்த மலரையுடைய குரா மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம், நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன.

முடிவுரை :

     காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது.

5

 

முன்னுரை:

     இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவணகாவியம் தமிழகக் காண்டத்தில் அமைந்துள்ள ஐந்து நில அழகுக் காட்சிகளைக் காண்போம்.

அருவியின் அற்புதக்காட்சி:

   அருவிகள் ஆர்ப்பரித்து பறையாய் ஒலிக்க பசுமையான கிளிகள் நாங்கள் அறி விழிசையை பாட இனிமையாகப் பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகுக வீர்த்து ஆடும். இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கு ஆசியுடன் பார்க்கும்.

    தீயில் இட்ட சந்தனமரக்கட்டைகளின் மணமும், அகிலின் நறுமணமும், உலையில் மலை நெல்லின் சோற்றின் மணமும் ஆற்றிடைப் பள்ளங்களில் உள்ள காந்தள் மலரின் மணமும் எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் ணம் கமழ்ந்து குன்று முழுவதும் நிறைந்திருந்தது.

முல்லையின் எல்லையில்லா அழகு:

      நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்து இனித பாட, மா, பலா, வாழைப் பழங்களோடு தேனும் தந்து இசைப்பாடி மகிழ்ந்தனர் புகழ் முல்லை நில மக்களான ஆயர் முக்குழல் இசையோடு மேயும் பசுக் கூட்டங்களை அ ஒன்றிணைத்தனர்.

    முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவால் நெல் ஆகியவற்றைக் கதிரம த்தில் குன்று போலக் குவித்து வைத்திருப்பர் இடையர்கள் அழகு மிகு கதிர்களை அடித் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள் பயத்துடன் அஞ்சி ஓடும்.

பாலையின் வெம்மை காட்சி :

     கொடிய பாலைநிலத்தில் வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குப் வாய் மிகவும் உலர்ந்து குழறியது. இதனை கண்டு அதன் தாய் வருந்தியது. இளைப்பாறவும் நிழவில்லாததால் கடும்வெயிலில் தான் துன்புற்று நின்று தனது நிழலில் கு நிளைப்பாறச் செய்தது.

மருத நிலத்தின் காட்சி:

    மலையிடையே தோன்றும் அழகிய ஆறும், கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தல் பாய்ந்தோடும். அங்கு நெய்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும் பெருகி வரும் நீரினைக் கால்வாய் வழி வயலி, தேக்கி வளம் பெருக்கும். இத்தகு வளம் நிறைந்த மருத நில வயலில் காஞ்சி வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

    தாமரை மலர்கள் நிறைந்திருந்த குளத்தில் சிறுவர்கள் ஆடி மகிழ்ந்து நீராடினர் அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து அதன் வடிவழகு சுண்டு மகிழ்ந்தனர். சிறுகழல் அணிந்த சிறுவர்கள் வைக்கோல் போர் குலுங்கிடும். படி ஏறி தென்னை இளநீர்க்காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்..

குறிஞ்சி தரும் குன்றா அழகு:

    தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி கடற்கரை மணவிடை உலவி காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும் பின்னர் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

முடிவுரை :

     இராவண காவியம் தரும் அழகு காட்சிகள் நம் கண்முன் இனிய காட்சிகளைத் தருகின்றன. தமிழரின் ஐந்நிலக்காட்சிகள் நம் நாட்டின் வளமான காட்சிகளை நம் கண்முன் காட்டுகின்றன.

5

 

39

. அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2 மதிப்பெண்.

5

 

39

.    விளி-1/2  மதிப்பெண்,இடம் நாள்-1/2 மதிப்பெண்,இப்படிக்கு-1/2 மதிப்பெண், உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண்,கடிதத்தின் உடல்-3 மதிப்பெண்

5

 

40

      ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

      என்னை எழுது என்று

      சொன்னது இந்த காட்சி

      இது அர்த்தமுள்ள காட்சி

      விழிப்புணர்வுக்கான காட்சி

5

 

41

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

 

42

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

)

இணைய வணிகம்

  இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.

இணைய பயன்பாடு :

    தற்காலத்தில் பேருந்து, விமானம், தொடர்வண்டி. தங்கும் விடுதி போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப் பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது கூட இணையம்  மூலம் நடைபெறுகின்றது.

வரி செலுத்துதல்

       அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய வழியில்

செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது.

         ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின் வழியாகச் செயல்பட்டு வருகிறது.

5

 

 

பகுதி – 5

 

 

43 .

முன்னுரை :
            “நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்முதலிய வரிசையில்தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        “எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       “உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  “நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

8

 

முன்னுரை:
       எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.

அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:
     தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.
செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கையில் உணவுடன் வந்த கணவனைத் தன் கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். இவ்வாறு கண்டிப்பும் அன்பும் கலந்து அந்த ஏழைத்தாய் வறுமையிலும் தன்மானம் உள்ளவளாகக் காணப்படுகிறாள்.

குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:
    குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். பசிமுள் அவள் வயிற்றைக் குத்தியது. சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள் அவள் அனுதாபத்துடன் குழந்தைகளைப் பார்த்து, இப்போ இப்படிச் சாப்டுகிறீர்கள் ராத்திரி என்ன செய்வீர்கள்? என்று உள்ளத்துள் வருந்துவதால் அன்புத்தாய் ஆகிறாள்.

மனிதநேயம் புரிந்தாள்:
        அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.

நாய்க்குட்டிகளை விரட்டுதல்:
     சாப்பிடும் நேரத்தில் தொந்தரவு செய்த நாய்க்குட்டிகளைக் குரலிட்டபடியே கையைத் தூக்கி துரத்தினாள். ஒரு காலைத் தூக்கியபடியே ஓடின. நாய்க்குட்டி ஒலி எழுப்பியது.

சுவைத்து உண்டாள்:
     தட்டை குழந்தையைப் போல மடியில் வைத்துக்கொண்டு உணவை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. உண்டு உண்டு அந்த சுவையில் சொக்கி லயித்துக்கொண்டிருந்தாள். நாயின் ஒலி அவளைச் சுண்டி இழுத்தது. பாசத்தில் பரிதவித்து ஓடுகிறாள்.

நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:
          எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது

முடிவுரை :   வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.

8

 

44.

.

முன்னுரை:

   பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்தும் போது, பெர்கல்வி குறித்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும், இன்றைய சூழலையும் பார்ப்போம்..

தலைவியின் பேச்சு:

     கல்வி இல்லாத பெளர்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள். அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த புதல்வர்கள் உருவாவதில்லை, கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள் அவர்கள் மூலமே சிறத்த அறிவார்ந்த மக்கள்  உருவாகின்றனர்.

      பெண் கல்வி இல்லாததினால், இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது. கல்வியறிவு இல்லாத பெண். மின்னலபோல் ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவன் வாழ்வு ஒளிர்வதில்லை.

            "கல்வி இல்லா மிள்னாள்

            வாழ்வில் என்றும் மின்னாள்"!

       சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கார் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

இன்றைய சூழல்:

     கல்வி கற்ற பெர் குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கடபேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.

       வானூர்தியைச் செலுத்துதல் விளர்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறள் உடையவளாய் இருக்கிறாள் என்பதை  மறுக்க இயலாது.

      “வானூர்தி செலுத்தல் வைய

       மாக்கடல் முழுது மனத்தல்

      ஆனஎச் செயலும் ஆண்பெண்

     அனைவர்க்கும் பொதுவே ஆகிவிட்டது.

சமையல்பணி

    சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை மாறிவருகிறது.ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும்காலம் வந்துகொண்டிருக்கிறது எளில் மிகையாகாது, குடும்ப விளக்கு தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு  வளர்ந்திருக்கிறது..

முடிவுரை:

   "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பெண்கள் நடத்த வந்தோம்". என் பாரதியின் களவு கரிகள் தனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

8

 

முன்னுரை:
    மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலைஎன்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.

நூலகம்:
     ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .

     “வீட்டிற்கோர் புத்தகசாலைஎன்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.

நூல்கள் :
      நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.

     பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர்திருக்குறள்கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.

  • நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
  • மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
  • தொலைதேசங்களைக் கண்டவர்கள்
  • வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை

ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .

முடிவுரை :
     கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.

                    “புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
                    புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்

என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.

8

 

45 .

உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 

45. .

முன்னுரை:

    கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினாள், உணர்வுகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின் வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.

சிற்பங்களின் கலைநயம்:

     "கற்கவிஞர்கள்" என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும்

கலைநயம் மிக்கலையாய் மிளிர்கின்றன. சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றுளர்கள், கற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிரச் செதுக்கினர்

       புதுக்கோட்டைமாவட்டம்நார்த்தாமலையில் உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுடபத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில்   வெளிப்படும் முக பாவனைகள் சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.

     கோவில் கோபுரங்களில் கதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை அணிகலன்கள் அரிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு. நகஅமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

     கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை,

சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்:

     சிற்பக் கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது. பல்லவர் காலச் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பங்கள், சோழர் காலச் சிற்பங்கள் ,விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள், நாயக்கர் காலச் சிற்பங்கள் என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது. என்பதை மறுக்க இயலாது.

     மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம். திருமயம் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

     கங்கை கொண்ட சோழபுரம், தாராகரம், திரிபுவனம், தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.

    விஜயநகர மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில் கதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர், சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.

     நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

முடிவுரை:

    'சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும். என்னய உருவங்கமைக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறியில் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.

8

 

பதிவிறக்கம் செய்ய 

 

 

 

 

 



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை