முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 ,
மதுரை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
மதுரை – முழு ஆண்டுத்தேர்வு
விடைக்குறிப்புகள் 2023-2024
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்குறிப்புகள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
|||||||||||||||||||||||||
1. |
இ. சிற்றிலக்கியம் |
1 |
|
|||||||||||||||||||||||||
2. |
ஆ. வளம் |
1 |
|
|||||||||||||||||||||||||
3. |
ஆ. ஊரகத் திறனறி தேர்வு |
1 |
|
|||||||||||||||||||||||||
4. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
|||||||||||||||||||||||||
5. |
ஆ. எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம் |
1 |
|
|||||||||||||||||||||||||
6. |
ஈ. கெடுதல் |
1 |
|
|||||||||||||||||||||||||
7. |
இ. நேதாஜி |
1 |
|
|||||||||||||||||||||||||
8. |
ஈ. சீவகன் |
1 |
|
|||||||||||||||||||||||||
9. |
அ. முரசு (பனை வினா தவறு, பணை என்று வர வேண்டும்) |
1 |
|
|||||||||||||||||||||||||
10. |
ஈ. பெரியார் |
1 |
|
|||||||||||||||||||||||||
11. |
இ. பாலை |
1 |
|
|||||||||||||||||||||||||
12. |
ஈ. மிக்க வயல் |
1 |
|
|||||||||||||||||||||||||
13. |
அ. வெண்பா |
1 |
|
|||||||||||||||||||||||||
14. |
அ. அரக்கு
+ ஆம்பல் |
1 |
|
|||||||||||||||||||||||||
15. |
ஈ. முத்தொள்ளாயிரம் |
1 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 1 |
||||||||||||||||||||||||||||
16. |
அ, ஆ ஆகிய வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
2 |
|
|||||||||||||||||||||||||
17. |
தென் திராவிட மொழிக்குடும்பம் |
1 1 |
|
|||||||||||||||||||||||||
18. |
நெற்பயிர் |
2 |
|
|||||||||||||||||||||||||
19 |
குறுகிய
அடிகளால் ஆன பாக்களை உடைய நூல் |
2 |
|
|||||||||||||||||||||||||
20. |
எச்செயலையும் அறிவியல்
கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்?
எதற்கு? எப்படி? என்ற
வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து
முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும். |
2
|
|
|||||||||||||||||||||||||
21
|
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
||||||||||||||||||||||||||||
22 |
வேய்ந்தனர் |
2 |
|
|||||||||||||||||||||||||
23 |
அ. ஏவுகணை ஆ. ஆளுமை |
2 |
|
|||||||||||||||||||||||||
24 |
அ. நண்பனின் நினைவு பசுமரத்தாணி போலப் பதிந்தது ஆ. அத்தி பூத்தாற்போல கோடையில் மழை பெய்தது |
2 |
|
|||||||||||||||||||||||||
25. |
அ.இடமெல்லாம் சிறப்பு ஆ. செந்தமிழும் நாப்பழக்கம் |
2 |
|
|||||||||||||||||||||||||
26. |
பொருந்திய விடைகளைச் சரியாகப் பொருத்தினான் |
2 |
|
|||||||||||||||||||||||||
27. |
காண்(கண்) + ட்+ ஏன் காண்- பகுதி , கண் எனக்குறுகியது விகாரம் , ட்-
இறந்தகால இடைநிலை , ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி |
2 |
|
|||||||||||||||||||||||||
28.
|
காலைச்சிற்றுண்டிக்கு
இரண்டு தோசைகள் உணவகத்தில் சாப்பிட்டான். |
2
|
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 1 |
||||||||||||||||||||||||||||
29 |
|
3
|
|
|||||||||||||||||||||||||
30
|
1. அலைபேசி 2. கணிப்பொறி 3. தொலை நகல் 4. அட்டை தேய்ப்பி
இயந்திரம் 5. ஆளறி சோதனைக் கருவி |
3 |
|
|||||||||||||||||||||||||
31. |
அ. பெரியார் ஆ.
குடியரசு , விடுதலை இ. பெரியார் |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||||||||||||||||||||||||||||
32 |
நிலம் குழியான இடங்கள் தோறும்
நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன்
நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும்
பெறுவர் |
3 |
|
|||||||||||||||||||||||||
33. |
|
3
|
|
|||||||||||||||||||||||||
34. |
அ. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே ஆ.
காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம்
கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாநலமெல்லாம். |
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||||||||||||||||||||||||||||
35 |
இயல்புப் புணர்ச்சி
– மாற்றங்களின்றி புணர்வது. விகாரப்புணர்ச்சி
– மாற்றங்களுடன் புணர்வது |
3 |
|
|||||||||||||||||||||||||
36. |
அணிகளில்
இன்றியமையாதது உ வமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
மலர்ப்பாதம்
–
மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக்
கூறப்படுகிறது. பாதம் -
பொருள் (உவமேயம்) மலர் -
உவமை போன்ற -உவம உருபு. இதில் உவமையணி அமைந்துள்ளது. |
3 |
|
|||||||||||||||||||||||||
37 |
|
3 |
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
||||||||||||||||||||||||||||
38 அ |
முன்னுரை : நாடெல்லாம்
நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர் மலையிலிருந்து புதிய
பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால்
வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர் கால்வாய்களில் பரந்து
எங்கும் ஓடுகிறது. களை பறிக்கும் பருவம்: நட்டபின்
வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர்
இதுதான் களை பறிக்கும் பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன. சோலைகள்
எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும் கரிய குவளை
மலர்கள் மலர்ந்துள்ளன. வானவில் : அன்னங்கள்
விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.
அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி
எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும். இக்காட்சியானது நிலையான
வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும். பொன்மாலைச் சாரல் : நெல்கற்றைகள்
போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான எருமைக்
கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும் இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய
பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சி போல உள்ளது. செழித்து வளர்ந்துள்ளவை : சோழ
நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய
நரந்தம், அரச மரம், கடம்ப மரம்,
பச்சிலை மரம், குளிர்ந்த மலரையுடைய குரா
மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம், நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள் நிறைந்த
கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன. முடிவுரை : காவிரியின்
பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம்.
வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது. |
5 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை: இராவணனை முதன்மை நாயகனாகக்
கொண்டு அமைக்கப்பட்டது இராவணகாவியம் தமிழகக் காண்டத்தில் அமைந்துள்ள ஐந்து நில
அழகுக் காட்சிகளைக் காண்போம். அருவியின் அற்புதக்காட்சி:
அருவிகள் ஆர்ப்பரித்து பறையாய் ஒலிக்க பசுமையான கிளிகள்
நாங்கள் அறி விழிசையை பாட இனிமையாகப் பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான
சிறகுக வீர்த்து ஆடும். இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் குரங்கு ஆசியுடன் பார்க்கும்.
தீயில் இட்ட சந்தனமரக்கட்டைகளின் மணமும், அகிலின் நறுமணமும், உலையில் மலை நெல்லின் சோற்றின்
மணமும் ஆற்றிடைப் பள்ளங்களில் உள்ள காந்தள் மலரின் மணமும் எங்கும் பரவித்
தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் ணம் கமழ்ந்து குன்று
முழுவதும் நிறைந்திருந்தது. முல்லையின் எல்லையில்லா அழகு: நாகணவாய்ப் பறவைகளும்
குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்து இனித பாட, மா,
பலா, வாழைப் பழங்களோடு தேனும் தந்து
இசைப்பாடி மகிழ்ந்தனர் புகழ் முல்லை நில மக்களான ஆயர் முக்குழல் இசையோடு மேயும்
பசுக் கூட்டங்களை அ ஒன்றிணைத்தனர்.
முதிரை, சாமை, கேழ்வரகு,
மணி போன்ற குதிரைவால் நெல் ஆகியவற்றைக் கதிரம த்தில் குன்று போலக்
குவித்து வைத்திருப்பர் இடையர்கள் அழகு மிகு கதிர்களை அடித் அதிர்வு தரும்
ஓசையைக் கேட்டு மான்கள் பயத்துடன் அஞ்சி ஓடும். பாலையின் வெம்மை காட்சி : கொடிய பாலைநிலத்தில்
வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குப் வாய் மிகவும் உலர்ந்து
குழறியது. இதனை கண்டு அதன் தாய் வருந்தியது. இளைப்பாறவும் நிழவில்லாததால்
கடும்வெயிலில் தான் துன்புற்று நின்று தனது நிழலில் கு நிளைப்பாறச் செய்தது. மருத நிலத்தின் காட்சி:
மலையிடையே தோன்றும் அழகிய ஆறும், கரையை
மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத
நிலத்தல் பாய்ந்தோடும். அங்கு நெய்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து
நிற்கும் பெருகி வரும் நீரினைக் கால்வாய் வழி வயலி, தேக்கி
வளம் பெருக்கும். இத்தகு வளம் நிறைந்த மருத நில வயலில் காஞ்சி வஞ்சி மலர்கள்
பூத்து நிற்கும்.
தாமரை மலர்கள் நிறைந்திருந்த குளத்தில் சிறுவர்கள் ஆடி
மகிழ்ந்து நீராடினர் அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து
அதன் வடிவழகு சுண்டு மகிழ்ந்தனர். சிறுகழல் அணிந்த சிறுவர்கள் வைக்கோல் போர்
குலுங்கிடும். படி ஏறி தென்னை இளநீர்க்காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர
நிழலில் அமர்ந்து அருந்தினர்.. குறிஞ்சி தரும் குன்றா அழகு:
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத்
தடவி கடற்கரை மணவிடை உலவி காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும் பின்னர் தாமரை
மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு
நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது. முடிவுரை : இராவண காவியம் தரும் அழகு
காட்சிகள் நம் கண்முன் இனிய காட்சிகளைத் தருகின்றன. தமிழரின் ஐந்நிலக்காட்சிகள்
நம் நாட்டின் வளமான காட்சிகளை நம் கண்முன் காட்டுகின்றன. |
5 |
|
|||||||||||||||||||||||||
39 |
அ.
அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல்
முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2
மதிப்பெண். |
5 |
|
|||||||||||||||||||||||||
39 |
பொருந்திய விடை
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
|||||||||||||||||||||||||
40 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
|||||||||||||||||||||||||
41 |
உரிய விடை
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
|||||||||||||||||||||||||
42 |
1) உடலினை உறுதி செய்
2) ருசித்து உண் 3) உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளல் 4) ஒற்றுமையே வலிமை
5) ஏறுபோல் நட |
5 |
|
|||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|
|||||||||||||||||||||||||
43
அ. |
1. இந்தியதேசிய இராணுவத்தின்
தூண்களாகத்திகழ்ந்தவர்கள்தமிழர்கள்என்பதைக்கட்டுரைவழி நிறுவுக. விடை: முன்னுரை: இந்திய தேசிய இராணுவம இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு
ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கண்(ஐபொகள் எனில் மிகையாகாது. நேதாஜி
அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழாகளின் பங்கு
வியந்து போற்றத்தக்கது. தூண்கள்:
1943ம ஆண்டு, நேதாஜி "டெல்லி
சலோ" என்ற முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும்
பசுமரத்தாணி போல பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை,பிரித்தானிய
அரசை எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்தத பெருமைக்குரிய தமிழர் 'பசும்பொன் முத்துராமலிங்கதேவர்' ஆவார்.
'பசும்பொன் முத்துராமலிங்கதேவர்'
அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான என்பவர்,
“இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆதமாவும்
தமிழர்கள் தான" என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய
இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர். இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்: இந்திய தேசிய இராணுவததில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை
உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாகடர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார்.
இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த
பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ்
பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன லட்சுமி இன்றியமையாப்
பொறுப்பு வகிதது பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில்
மிகையாகாது. இரண்டாம் உலகப்போரில் தமிழர்: இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக
கண்டு ஆங்கிலப்
பிரதமா சாச்சில் கோபம் கொண்டார். “தமிழர்களின் இரத்தம நேதாஜி
மூளையில் கட்டியாக உள்ளது" என்றார் சர்ச்சில், அதற்கு
பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை
அழிக்கும் என்றார். மரணம் பெரிதன்று:
1943-45 ஆம்
ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர்.
தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின
பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீதத
முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவாததிதான" என்று கூறி
இன்முகத்துடன் உயிர் நீததனர். நேதாஜியின் பாராட்டு இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செயத தியாகங்களையும்
கண்டு வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு
தௌனிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும்
வண்ணம நம தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது. முடிவுரை: தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம்
போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத
வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாத
வீரத்தையும், நாட்டுப்பற்றையும், என்றென்றும்
போற்றுவதோடு, இராணுவ விராகளையும் அவர்தம்
குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப்
பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமை |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை: பண்டித ரமாபாய்: ஐடாஸ் சோபியா: மூவலூர் இராமாமிர்தம் : சாவித்திரிபாய் பூலே : மலாலா : முடிவுரை : “புவி வளம் பெறவே புதிய
உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே” |
8 |
|
|||||||||||||||||||||||||
44. அ. |
இது, இந்திய
அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை
விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு
மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி
தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப்
பயன்படுத்துவதும் ஆகும்.
இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில்
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக்
காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில்
கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக்
கோள் 'ரோகினி' ஏவப்பட்டது.
இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய
இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.
1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்
கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே
பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு
எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார். |
8 |
|
|||||||||||||||||||||||||
ஆ |
முன்னுரை : இசை மொழியைக் கடந்தது.
அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து
அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும்
மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத்
தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது. இசைக்கு நாடு,
மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி என்னும்
கதை உணர்த்துகிறது. வித்வானின் வருகையும், அறிமுகமும்
: நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து
இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத்
தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார்
நாதசுர வித்வான். வக்கீல் வீட்டில் “பிலிப் போல்ஸ்கா ” என்பவர்
தலைமையில் மேற்கத்திய சங்கீத குழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல்
வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர்
என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து
வைத்தார். கீர்த்தனம் தொடங்கினார் : வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம்
செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக்
கொண்டிருந்தது. போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல்
தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன்
தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும்,
அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது. சாமாராகம் : தஸரிமா……. மா” என்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம் – கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி
போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ….. மொழி தெரியாத போல்ஸ்காவைத்
திரும்பிப் பார்த்தார் வக்கீல். அவன் உடல் ராகத்தோடு இசைந்து
அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து
விட்டான். மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான்.
மேடைக்கருகில் வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்து கையை மேடையோரத்தில்
வைத்து முகத்தைப் புதைத்து தவத்தில் ஆழ்ந்தவன் போல் ஆனான். சாமா ராகத்தை அனுபவிக்க
அவனுக்கு மொழியோ, இனமோ இடையூறு செய்யவில்லை. சாந்தமுலேகா : குழந்தையைக் கொஞ்சுவது போல்,
அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது.
அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக்
கொண்டிருந்தன அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே
ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி உணர்வை வெளிப்படுத்த,
நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கா தடுமாறினான். வக்கீல் மொழி பெயர்த்தல் : தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான்.
இரைச்சல், கூச்சல், அடிதடி,
புயல், அலை, இடி என ஒரே இரைச்சல். அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்;
காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது .இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார்
வக்கீல். வித்வானின் திகைப்பு : அமைதியா , அப்படியா தோணித்து அவருக்கு? நான் வார்த்தையைக் கூடச்
சொல்லவில்லையே! பாராட்டல் : இசையை
வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த
விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்
என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா முடிவுரை : நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும்
இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து
விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும்
செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும். இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி,
இனம் தேவையில்லை. |
8 |
|
|||||||||||||||||||||||||
45
அ. |
உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
|
|||||||||||||||||||||||||
45. ஆ. |
முன்னுரை : நீர்
இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக
எடுத்துரைத்துள்ளார் அவருடைய கருத்துகளைக் காண்போம். வான் சிறப்பு : உணவு
உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய
தூஉம் மழை" என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார் மழையே ஆதாரம் : மழை
நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை
ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச் செய்கிறது. நீரே ஆதாரம் : நீர்
இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால்
ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி,
உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. முடிவுரை: தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த
நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். |
8 |
|
|||||||||||||||||||||||||