10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL-3

10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல்-3


ஒருமதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 1 முதல் 15)

1) பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

2) ’சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்திஎன்னும் அடியில் பாக்கம் என்பது

)புத்தூர்    )மூதூர்   )பேரூர்   )சிற்றூர்

3) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்துவது

)வேற்றுமை உருபு  )எழுவாய்  )உவம உருபு   )உரிச்சொல்

4) காசிக்காண்டம் என்பது-----------

)காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ)காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

)காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  )காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

5) ’விருந்தினரை பேணுவதற்குத் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான்என்கிறது புறநானூறு.இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றும் நிலை

)நிலத்திற்கேற்ற விருந்து  )இன்மையிலும் விருந்து   )அல்லிலும் விருந்து   ) உற்றாரின் விருந்து

6) ’விருந்தே புதுமை என்று விருந்தினருக்கு விளக்கமளித்தவர்

)அதிவீரராம பாண்டியன்  )ஒட்டக்கூத்தர்  )நப்பூதனார்  )தொல்காப்பியர்

7) மலைபடுகடாம்----------நூல்களுள் ஒன்று.

) நீதிநூல்கள்   ) எட்டுத்தொகை    ) பத்துப்பாட்டு    ) பதினெண்கீழ்க்கணக்கு

8) கூத்தராற்றுப்படை என அழைக்கப் படும் நூல்---------

) பட்டினப்பாலை   )மலைபடுகடாம்   )முல்லைப்பாட்டு    )குறிஞ்சிப்பாட்டு

9) தொகாநிலைத்தொடர்--------வகைப்படும்.     

) 6    ) 9    ) 8     ) 10

10) பாடி மகிழ்ந்தனர்எவ்வகைத்தொடர்?

) பெயரெச்சத்தொடர்  ) வினையெச்சத்தொடர்  ) வேற்றுமைத்தொடர்  ) விளித்தொடர்

11) ”குழந்தை வந்ததுஎன்ற எழுவாய்த்தொடரின் விளித்தொடரைத் தேர்க

) குழந்தையுடன் வா   ) வந்த குழந்தை   ) குழந்தையே வா!    ) குழந்தை வந்தது

12) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்  இ) தேமா புளிமா காசு  ஆ) கூவிளம் புளிமா நாள்  ஈ) புளிமா தேமா பிறப்பு

13) மலைபடுகடாம்----அடிகளை உடையது

) 783  ) 583  ) 103  ) 133

14) ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடிவது---

) பெயரெச்சம்  ) முற்றெச்சம்  ) கூட்டுநிலைப் பெயரெச்சம்) வினையெச்சம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

"அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி"

1. அசைஇ -இலக்கணக்குறிப்பைத் தேர்க.

அ) இன்னிசை அளபெடை ஆ) சொல்லிசை அளபெடை  

இ) செய்யுளிசைஅளபெடை ஈ) ஒற்றளபெடை

2. அல்கி என்ற சொல்லின் பொருள் -

அ) சுற்றம்  ஆ) இளைப்பாறி  இ) தங்கி  ஈ) பள்ளம்

3. பாடலின் ஆசிரியர்

அ) பெருங்கௌசிகனார்  ஆ) நக்கீரர்  இ) நத்தத்தனார்  ஈ) அதிவீரராமபாண்டியர்

4. பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) காசிக்காண்டம்  ஆ) மலைபடுகடாம்  இ) நற்றிணை  ஈ)குறுந்தொகை

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 16 முதல் 28) 

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

விடை: வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2. 'தானியம் ஏதும் இல்லாத நிலை யில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்ப து இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விடை: இல்லை,விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை.

3. ' எழுது என்றாள் ' என்பது விரைவு காரணமாக' எழுது எழுது என்றாள் ' என அடுக்குத் தொடரானது. 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

விடை: சிரித்துச் சிரித்துப்பேசினார்.

4.'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

விடை: தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

5. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும்பயனிலைகள் யாவை ?

விடை:  கவிஞர்-பெயர்ப்பயனிலை  ,  சென்றார்வினைப்பயனிலை , யார் - வினாப்பயனிலை

6. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

வினா

குறிப்பு

விடுபட்ட எழுத்து

நூலின் பெயர்

____கு

பறவையிடம் இருப்பது

 

 

 

திருக்குறள்

கு____தி

சிவப்பு நிறத்தில் இருக்கும்

ரு

வா____

மன்னரிடம் இருப்பது

ள்

____கா

தங்கைக்கு மூத்தவள்

க்

_____

அறிவின் மறுபெயர்

தி

பட_____

நீரில் செல்வது

கு

7) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                                              

1

சிலை - சீலை

சிலைக்கு சீலை கட்டினர்

2.

தொடு - தோடு

தோட்டினைத் தொட்டான்

3

மடு - மாடு

மடுவின்மேல் மாடு நின்றது

4

மலை - மாலை

மாலையில் மலைக்குச் சென்றான்

5

வளி - வாளி

வளியை வாளியால் அள்ள முடியாது

6

விடு - வீடு

பள்ளி விட்டதும் வீட்டிற்குச் சென்றான்

 8) பழமொழியை நிறைவு செய்க:-                                        

1

உப்பில்லாப்

பண்டம் குப்பையிலே

2.

ஒரு பானை

சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3

உப்பிட்டவரை

உள்ளளவும் நினை

4

விருந்தும்

மருந்தும் மூன்று வேளை

5

அளவுக்கு

மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

9)  அகராதியைக் கண்டு பொருள் எழுதுக

) ஊண்உணவு  , ஊன்உடல், இறைச்சி

) திணைஒழுக்கம்  , தினைசிறுதானியம்

) அண்ணம்மேல்வாய்  , அன்னம்- சோறு , பறவை

) வெல்லம்இனிப்பு , வெள்ளம்நீர்ப்பெருக்கு

10) கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

     மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

1.     இறங்கினார் முகமதுவினைமுற்றுத்தொடர்

2.    அவர் பாடகர்எழுவாய்த்தொடர்

3.    பாடுவதும் கேட்பதும்இடைச்சொல் தொடர்

4.    கேட்ட பாடல்களையும்பெயரெச்சத் தொடர்

5.    கேட்காத பாடல்களையும்எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்

6.    அடுக்கு அடுக்காக - அடுக்குத்தொடர்

11. வண்ணச் சொற்களின் () அடிக்கோடிட்ட தொடர்வகைகளை  எழுதுக.

1.     பழகப் பழகப் பாலும் புளிக்கும்அடுக்குத்தொடர்

2.    வந்தார் அண்ணன்  - வினைமுற்றுத்தொடர்

3.    வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன்பெயரெச்சத்தொடர்

4.    அரிய கவிதைகளின் தொகுப்பு இதுவேற்றுமைத்தொடர்

5.    மேடையில் நன்றாகப் பேசினான்  - வினையெச்சத்தொடர்

12) 'நச்சப் படாதவன்' செல்வம் இத்தொடரில் நச்சப் படாதவன் என்னும் சொல்லுக்குப் பொருள் தருக.

விடை: பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.

13) கொடுப்பதூஉம்  துய்ப்பதூஉம்  இல்லார்க்கு அடுக்கிய

      கோடிஉண்  டாயினும்  இல்  – இக்குறளில் வரும் அளபெடைகளை எழுதுக

விடை: கொடுப்பதூஉம் , துய்ப்பதூஉம்  - இன்னிசை அளபெடைகள்

14) கலைச்சொல் தருக

1.     செவ்விலக்கியம் - Classical literature

2.    காப்பிய இலக்கியம் - Epic literature

3.    பக்தி இலக்கியம் - Devotional literature

4.    பண்டைய இலக்கியம் – Ancient literature

5.    வட்டார இலக்கியம் - Regional literature

6.    நாட்டுப்புற இலக்கியம் - Folk literature

7.    நவீன இலக்கியம் - Modern literature                       

மூன்று மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 29 முதல் 37)

1. 'கண்ணே கண்ணுறங்கு!

     காலையில் நீயெழும்பு!

     மாமழை பெய்கையிலே

     மாம்பூவே கண்ணுறங்கு!

     பாடினேன் தாலாட்டு!

     ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' -இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

விடை: 'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

            மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

            பாடினேன் தாலாட்டு -வினைமுற்றுத்தொடர்

           ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

2. “ பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – வினவுவது ஏன்?

விடை:

    வீட்டின் முன் உள்ள பெரிய கதவை இரவில் மூடுவதற்கு முன், உணவு தேவைப்படுபவர்கள் இருக்கிறீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை , குறுந்தொகை இவ்வாறு கூறுகிறது.

3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதை சில இடங்களில் காணமுடிகிறது.காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

விடை:

ü  தமிழரின் பண்டைய விருந்தோம்பல் பண்பில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ü  புதிதாக வருபவர் விருந்தினர் என்றநிலை மாறி நன்கறிந்தவர்களே விருந்தினராகக் கருதப்படுகின்றனர்.

ü  வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு மாறிவிட்டன.

4.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

விடை:

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்  என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

5. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.

விடை:

v  உறவினரை முகமலர்ச்சியுடன் நோக்கினேன்.

v   வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன்.

v  உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறினேன்  

v  தலைவாழை இலையில் உணவிட்டேன்.

v  அவர் செல்லும் போது வாயில் வரை சென்று வழியனுப்பினேன்.

6) வாழை இலை விருந்து தமிழர் பண்பாட்டுடன் எங்ஙனம் பிணைந்திருந்தது?

விடை:

v  தமிழர் பண்பாட்டில் முக்கியமானது வாழையிலை விருந்து

v  அது தமிழர் மரபாகக் கருதப்படும்

v  வழை இலையில் உண்பது மருத்துவப் பயன் உடையது

v  அதில் வைக்கப்படும் உணவுகளுக்கேற்ப இடம் வலமாகப் பயன்படுத்துவர்.

7) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

    கோலொடு நின்றான் இரவு   -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை:

-     இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      மக்களிடம் வரி வாங்குவது அரசன் வழிப்பறி செவதற்குச் சமம்.

அணிப்பொருத்தம்:

      உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம்அரசன் வரி வாங்குவது, உவம உருபுபோலும்

8) கவிதையைத் தொடர்க

தண்ணீர் நிறைந்த குளம்

தவித்தபடி வெளி நீட்டும் கை

கரையில் கைப்பேசி படமெடுத்தபடி

உதவாக் கரைகள் நிற்பது போலின்றி

உதவும் கரங்களாய் இருப்போம்!

ஆபத்து உணர்ந்து உதவுவோம்!

 


ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42)

1. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாகமாறியிருப்பதை விளக்குக.

( வினா எண்:38)

விடை:

ü  கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

ü  தற்காலத்தில் ஆசிரியர்களும்,குறிப்பிட்ட துறையின் வல்லுநர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

2) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக (வினா எண்: 40)

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!

3) உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக. (வினா எண்: 39)

அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

    வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                         இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

அ.எழில்வேந்தன்.

இடம்:அரக்கோணம்,

நாள்:08-01-2022.

உறைமேல் முகவரி:

          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,  

          அரக்கோணம்.

4) மொழி பெயர்க்க:-   (வினா எண் : 42)                                                       

            Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

            மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

4) நிற்க அதற்குத் தக    (வினா எண் : 42)

மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

1.      நாகரிகம் கருதி நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது.

2.     நம் நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது.

3.     பாரம்பரிய உணவுகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.

4.     பாரம்பரிய உணவு மிகுந்த சக்தியைக் கொடுக்கும்.

5.     பாரம்பரிய உணவுப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

 எட்டு மதிப்பெண் வினா விடைகள்

1. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

விடை:

விருந்தினரை வரவேற்றல்:

     என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன்.

உணவுண்ண அழைப்பு:

   உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன்.

வாழை இலையில் விருந்து:

    தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன்.

     உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன்.

வெற்றிலை பாக்கு:

     உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.

வழியனுப்புதல்:

    உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன்.

2) அன்னமய்யா  என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               அன்னமய்யா அங்கு இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

முடிவுரை:

            அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

PDF வடிவில் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்



 

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை