6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -OCTOBER 2 ND WEEK

      6 ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 10-10-2022 முதல் 14-10-2022      

மாதம்          அக்டோபர்         

வாரம்     :  இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.மூதுரை

                                             2.துன்பம் வெல்லும் கல்வி

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø கல்வியின் சிறப்பையும்,பயனையும் உணர்தல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø யாருக்கெல்லாம் படிப்பது பிடிக்கும்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :



6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • கற்றவர் - மன்னன் இருவரில் கற்றவரே சிறந்தவர்.

  • கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • கற்ற கல்வியின் வழி நிற்க வேண்டும்

  • கல்வி துன்பத்தைப் போக்கக் கூடியது.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.மூதுரையின் ஆசிரியர்  யார்?
2தேசம் என்ற சொல்லின் பொருள் யாது?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.ஔவையார் இயற்றிய  நூல்கள் யாவை?
2.மக்கள் கவிஞர் யார்?அவ்வாறு அழைக்கப்படக் காரணம் என்ன?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.நீங்கள்  படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

பாடப்பகுதியில் உள்ள மனப்பாடப்பாடல்களை மனப்பாடம் செய்துவரச் சொல்லுதல்

12.கற்றல் விளைவு

    Ø கல்வியின் சிறப்பையும்,பயனையும் உணர்தல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை