ஒட்டக்கூத்தர்-வாழ்க்கை வரலாறு

ஒட்டக்கூத்தர் வாழ்க்கை வரலாறு
பெயர் : ஒட்டக்கூத்தர்
இயற்பெயர் : கூத்தர்
இடம் : திருவரம்பூர், திருச்சி
புத்தகங்கள் : காங்கேயன் நாலாயிரக் கோவை, மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், ஈட்டியெழுபது, அரும்பைத் தொள்ளாயிரம், தக்கயாகப் பரணி, எழுப்பெழுபது, நாலாயிரக் கோவை
வகித்த பதவி : தமிழ் புலவர்


வரலாறு:-வாழ்க்கை வரலாறு

நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பரின் பிறந்த நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக வாழ்ந்த செங்குந்தர் குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கொள்ள இடம் தருகிறது. காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடிய பாடல்கள் சுவை மிக்கவை. 

இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர் பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.

பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் ‘ஒட்டம்’ (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை