பரிதிமாற் கலைஞர்-வாழ்க்கை வரலாறு

பரிதிமாற் கலைஞர்-வாழ்க்கை வரலாறு

பெயர் : பரிதிமாற் கலைஞர்
இயற்பெயர் : வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்
பிறப்பு : 06-07-1870
இறப்பு : 02-11-1903
பெற்றோர் : கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள்
இடம் : விளாச்சேரி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
புத்தகங்கள் : ரூபவதி, கலாவதி, மான விஜயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து, மதிவாணன், 
நாடகவியல், தமிழ் விசயங்கள், தமிழ் மொழியின் வரலாறு, சித்திரக்கவி விளக்கம்
வகித்த பதவி : தமிழறிஞர், கவிஞர்


வரலாறு:-வாழ்க்கை வரலாறு

ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். தமிழ் மொழி வரலாறு போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.

வரலாறு

மதுரை அருகே விளாச்சேரி ஊராட்சி எனும் ஊரில் கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும், தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார். கலாவதி (1898), ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார். தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் .

தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிசுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன.



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை