மரபுச்சொற்கள் அறிவோம்

 மரபுச்சொற்கள் அறிவோம்

          நம் முன்னோர்கள் எந்த பொருளுக்கு (அல்லது) செயலுக்கு என்ன பெயர்களை வழங்கினார்களோ, அப்படியே நாமும் வழ்ங்குவது மரபுச்சொல் ஆகும்.

  • 1.ஒலி மரபு
  • 2.வினைமரபு
  • 3.இருப்பிட மரபு
  • 4.தாவர உறுப்பு மரபு
  • 5.இளமைப்பெயர் மரபு
  •      எனப்பலவற்றின் அடிப்படையில் மரபுப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.அவற்றுள் சில முக்கியச்சான்றுகளை இங்கு காண்போம்.          

இளமை பெயர்கள்
  1. அணிற் பிள்ளை யானைக்கன்று, 
  2. நாய்க்குட்டி, 
  3. கழுதைக்குட்டி, 
  4. கீரிப்பிள்ளை, 
  5. மான்கன்று, 
  6. பூனைக்குட்டி, 
  7. பன்றிக்குட்டி,  
  8. எருமைக் கன்று, 
  9. ஆட்டுக்குட்டி, 
  10. எலிக்குட்டி, 
  11. குதிரைக் குட்டி,
  12.  புலிப் பரழ்,
  13.   குரங்கு குட்டி, 
  14. சிங்கக்குருளை
வாழிடங்கள் :
  1. ஆட்டுப்பட்டி,
  2.  கோழிப்பண்ணை,
  3.  யானைக்கூட்டம்,
  4.  குதிரைக்கொட்டில்,
  5.  மாட்டுத்தொழுவம்,
  6.  வாத்துப் பண்ணை
விலங்கு பறவை இனங்களின் ஒலி மரபு :
  1. ஆந்தை அலறும்,
  2. குதிரை கனைக்கும், 
  3. நரி ஊளையிடும்,
  4. கழுதை கத்தும், 
  5. குயில் கூவும்,
  6. புலி உறுமும், 
  7. காக்கைக் கரையும், 
  8. கோழி கொக்கரிக்கும்,
  9. மயில் அகவும், 
  10. கிளி கொஞ்சும்/ பேசும்,
  11. சிங்கம் முழங்கும், 
  12. யானை பிளிரும்


தாவர உறுப்புகளின் பெயர்கள் :
  1. ஈச்ச ஓலை,
  2.  தாழைமடல், 
  3. பனையோலை, 
  4. சோளத்தட்டை, 
  5. தென்னை ஓலை, 
  6.  பலா இலை, 
  7. மூங்கில் இலை,
  8.  வாழை இலை,
  9. மாவிலை, 
  10. வேப்பந்தலை, 
  11. கமுக்கங்கூந்தல், 
  12. நெற்றாள்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை