6 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JUNE WEEK 3

  6. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு 

வகுப்பு: 6.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: கவிதைப்பேழை(இன்பத்தமிழ்)

நாள் : ஜூன் 3 ஆவது வாரம்

             (13-06-2022 முதல் 17-02022 வரை)


1.அறிமுகம்:

  • தமிழர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை உயிராகக் கருதி போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் அத்தகைய பாடல் ஒன்றை இங்கு அறிவோம்.

      மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:

இன்பத்தமிழ்

4.தொகுத்தலும்,வழங்குதலும்:

    இன்பத்தமிழ்:

  • நமது பாடப் பகுதியில் உள்ள இன்பத் தமிழ் பாடலை இயற்றியவர் பாரதிதாசன் ஆவார்.

  •  அவரது இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும்.

  • இவர் பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்

  • இவர் புரட்சிகரமான கருத்துகளைக் கூறியதால் புரட்சிக்கவிஞர் என்றும் போற்றப் படுகிறார்.

  • புரட்சிக் கவிஞர் தமிழ்மொழி பன்முகத்தன்மை கொண்ட இனிய மொழி என்கிறார்.

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • இன்பத் தமிழ் பாடலை இயற்றிவர் யார்?

  • புரட்சிக் கவிஞரின் இயற்பெயர் என்ன?

  • நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

  • மனப்பாடப் பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.

9.தொடர்பணி:

  • இன்பத் தமிழ் பாடலை இசையுடன் பாடி மகிழச் செய்தல்.

 கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை  




 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை