இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு-மாதிரி வினாத்தாள்(2022-23)
ஆறாம் வகுப்பு பாடம்-
தமிழ்
மதிப்பெண்கள்: 60
அ)பலவுள்தெரிக:
10X1=10
1)போர்க்களத்தில் வெளிப்படும்
குணம்----------
அ) மகிழ்ச்சி ஆ) துன்பம் இ) வீரம் ஈ) அழுகை
2) மாசற
என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) மாசு + அற ஆ) மாசு + அற இ)மாசு + உற ஈ) மாசு + உற 3)வீட்டுப்பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________ அ) நுகர்வோர் ஆ) தொழிலாளி இ) முதலீட்டாளர் ஈ) நெசவாளி 4)பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம். அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை ஈ)பேருந்து வசதியில்லை 5) அ,இ,உ ஆகியன------எழுத்துகள்
அ) வினா ஆ)சுட்டு இ)அகவினா ஈ)இடையின 6) 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது---- அ)கண்+உறங்கு ஆ) கண்ணு+உறங்கு இ) கண்+றங்கு ஈ) கண்ணு+றங்கு 7) பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ------- ஆகும். அ) வம்பு ஆ) அமைதி இ) அடக்கம் ஈ)பொறை 8)கதிர் முற்றியதும்------செய்வர். அ) அறுவடை ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ) களையெடுத்தல் 9)பழையன கழிதலும்------ புகுதலும். அ) புதியன ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான 10)நிலையான செல்வம் ......................... அ) தங்கம் ஆ) பணம் இ) ஊக்கம் ஈ) ஏக்கம்
ஆ)ஐந்தனுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக 5X2=10
11) சுட்டு எழுத்துகள் என்றால் என்ன ? அவை யாவை ?
12)எதை நம்பி வாழக் கூடாது?
13)எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?
14)பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
15)கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
16)போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
17)காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட
கல்வி நிறுவனங்கள் யாவை ?
இ)மூன்றனுக்கு
மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி 3X4=12
18)காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
19) தமிழன் தான் வாழ்ந்த
நாட்டினை
எவ்வாறு உருவாக்கினான்?
20)கல்வியின் சிறப்பாக நீங்கள் கருதுவன யாவை?
21)தாய் தன்
குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறார்?ஏன்?
22)சிறுவணிகம், பெருவணிகம்
- வேறுபடுத்துக.
ஈ)அடிமாறாமல்
எழுதுக
4+2=6
23) “பாயும்புயல்”
எனத்தொடங்கும் பாடலை எழுதுக.
24)”வெள்ளத்து” எனத்தொடங்கும் திருக்குறளை எழுதுக.
உ)அனைத்து
வினாக்களுக்கும் விடையளி
5X2=10
25)சொற்களைச்
சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக.
அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு அரசு) 26) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
அ.என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே )
ஆ.நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே )
27) கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது குழந்தைகள் நாள், மாணவர் நாள், ஆசிரியர் நாள், தேசிய இளைஞர் நாள்)
அ.டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்
பிறந்தநாள் ஆ.அப்துல்கலாம் பிறந்த நாள்
28)கலைச்சொல் தருக : அ.MERCHANT ஆ.VOYAGE
29)சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ)
குழந்தைகள் ------------ விளையாடினர் . (பந்து /பன்து)
ஆ)வீட்டு வாசலில் ---------- போட்டனர்
. (கோலம் / கோளம்)
ஊ)ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி
1X6=6
30)அண்ணா நூற்றாண்டு
நூலகத்தைப்பற்றி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக
31)உழைப்பே
மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக..
எ)கட்டுரை
எழுதுக
1X6=6
32) அ.”பொங்கல் திருநாள்”என்ற
தலைப்பில் கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ.காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை-இளமைக் காலம்-கல்விப்பணி-நிறைவேற்றிய
பிற திட்டங்கள்-முடிவுரை