இரண்டாம் திருப்புதல் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
இ.
உருவகம் |
1 |
2.
|
இ.
உழவு,ஏர்,மண்,மாடு |
1 |
3.
|
ஈ.
அங்கு வறுமை இல்லாததால் |
1 |
4.
|
அ.
தேவநேயப் பாவாணர் |
1 |
5.
|
இ.
அன்மொழித்தொகை |
1 |
6.
|
ஈ.
சிற்றூர் |
1 |
7.
|
அ.
மலைபடுகடாம் |
1 |
8.
|
இ.
முல்லை |
1 |
9.
|
இ.
சிலப்பதிகாரம் |
1 |
10. |
இ.
சரயு நதி |
1 |
11.
|
அ.
இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது |
1 |
12. |
ஆ.
சிலப்பதிகாரம் |
1 |
13. |
அ.
பகர்வணர், பட்டினும் |
1 |
14. |
ஈ.
நெசவாளர் |
1 |
15. |
ஈ.
இளங்கோவடிகள் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ. உலகத்திலேயே
ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு யாது? ஆ. தமிழ்த்தென்றல்
என்று அழைக்கப்படுபவர் யார்? |
2 |
17 |
2 |
|
18 |
அருளைப்பெருக்க
கல்வி கற்போம்,அறிவைத்திருத்த கல்வி கற்போம் |
2 |
19 |
நோயாளிக்கு பயத்தைப் போக்குதல், நோய் குணமாகும்
என்ற நம்பிக்கையை ஏற்படுத்தல். |
2 |
20 |
நூல்
வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச்
சென்று விருப்பமான புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள்
உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு பட்டினி கிடந்திருக்கிறார்.
இவையே மா.பொ.சி வறுமையிலும் படிப்பின் மீதும் நாட்டம் கொண்டவர் என்பதற்குச் சான்றாகும் |
2 |
21 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
பொருந்திய
கருப்பொருள்களை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
23 |
முதல்நிலை
,இடைநிலை,கடைநிலை |
2 |
24 |
அ. மறுமலர்ச்சி
ஆ. மெய்யெழுத்து |
2 |
25 |
அ.
வளியை வாளியில் அள்ள முடியாது. ஆ.
பள்ளி விட்டதும் வீட்டுக்குச் சென்றான். |
2 |
26 |
1.
புதுவை 2. தஞ்சை |
2 |
27 |
திருமால்-
செய்யுளிசை அளபெடை. |
2 |
28 |
உரை+த்+த்+அ உரை-பகுதி , த்-சந்தி , த்-இறந்தகால இடைநிலை
, அ-பெயரெச்ச விகுதி |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
3 |
|
30 |
பித்தளைச் செம்பையோ, சிறிய
குடத்தையோ தலையில் வைத்து ஆடுவது. |
3 |
31 |
அ.
வீரமற்றோர் , புறமுதுகிட்டோர் , சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமை. ஆ. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார். இ. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்ட “சித்தாளு”
கவிதையின் வரிகள் இவை பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத்
தெரியாது விளக்கம்: கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை
உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின்
மனச்சுமை யாருக்கும் புரியாது. |
3 |
|
33 |
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது. ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர். ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும் ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர். |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
3 |
36 |
கருவிளங்காய் கூவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் தேமா
பிறப்பு. |
3 |
37 |
சொல்லையும்
பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறைஅணி எனப்படும். |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: ”பூமித் தாயே என்
அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” எனக் கருணையன் வேண்டினான்.
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன்
அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல் மலர்களையும் தன்
கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: என் தாய் கூறும் உண்மையான
சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில் ஒரு மணிமாலைபோல் அசைந்து அழகுற
வாழ்ந்தேன்.இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி
இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று
கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: ”எனது
மனம் பரந்த மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது.
தீயையும்,நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின்
வலியால் வருந்துவது போன்றது எனது துயரம்.துணையைப் பிரிந்த பறவையைப் போல்
நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே
விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். தனித்து
விடப்பட்ட கருணையன்: “எனக்கு
உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான்
உணர்கிறேன்.உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளை என்னால் அறிய
முடியவில்லை. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன். எனது தாய் தன்
கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு
விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே” என்று அழுது புலம்பினான் பறவைகளும்,வண்டுகளும்
கூச்சலிட்டன: நவமணிகள் பதித்த மணி
மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை மாலையாக அணிந்த கருணையன்
இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே
கூச்சலிட்டன. (அல்லது) ஆ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
5 |
39 அ. |
அனுப்புநர் ப.இளமுகில், 6,காமராசர் தெரு, வளர்புரம், அரக்கோணம்-631003 பெறுநர் உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 ஐயா, பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல்
சார்பாக. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள்
வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில்
இருள் மிகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்படுகின்றனர்.எனவே பழுதடைந்த
மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன் நன்றி!! இப்படிக்கு, தங்கள் பணிவுடைய,
ப.இளமுகில். இடம்:அரக்கோணம்,
(அல்லது) ஆ) அ. (மாதிரிக்காகத் தரப்பட்டுள்ளது) நூலின் தலைப்பு: பரமார்த்தகுரு கதை நூலின் மையப் பொருள்: சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள். மொழிநடை: நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில்
எழுதப்பட்டுள்ளது. வெளிப்படுத்தும் கருத்து: பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு
இருக்கிறது. நூலின் நயம்: விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது. நூல் கட்டமைப்பு: சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு
உள்ளது. சிறப்புக்கூறு: ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக
உள்ளது. நூல் ஆசிரியர்: வீரமாமுனிவர். |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
நூலக உறுப்பினர் படிவம் வேலூர்
மாவட்ட நூலக ஆணைக்குழு மைய /
கிளை / ஊர்ப்புற நூலகம் ஊசூர் உறுப்பினர் சேர்க்கை
அட்டை அட்டை எண்: 1234
உறுப்பினர் எண்:321 1. பெயர் : ர. தமிழ்ச்செல்வன் 2. தந்தை பெயர் : ரவி 3. பிறந்த நாள் : அ அ – அ அ- அ அ அ அ 4. வயது : ஆ ஆ ஆ 5. படிப்பு : 10.ஆம் வகுப்பு 6. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210
7. முகவரி :
7 பாரதி தெரு , ஒலக்கூர், வேலூர் - 632105 (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) நான் ஊசூர் ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ.
100 சந்தா தொகை ரூ. 25 ஆக மொத்தம் ரூ. 125 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். இடம்: ஊசூர் நாள்: 19-01-2023 தமிழ்ச்செல்வன்
தங்கள் உண்மையுள்ள திரு
/ திருமதி / செல்வி / செல்வன்
தமிழ்ச்செல்வன் அவர்களை எனக்கு
நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.
ஆஆஆ
பிணையாளர் கையொப்பம் அலுவலக
முத்திரை (பதவி மற்றும் அலுவலகம்) |
5 |
42 |
1.
தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில்
வைத்துக்கொள்வேன். 2.
குடிநீரைச்
சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3.
உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 4.
நீரைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 5.
வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி
நடப்பேன். ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக்
கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை
உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
# செயற்கைக் கோள் ஏவுதலில்
செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும். # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட
செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும். # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல்
உதவும். # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத்
துறைகளிலும் பயன்படும். # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய
இயலும். # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற
இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும். (அல்லது) ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின்
வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்
உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். |
8 |
44 அ. |
ü
அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால.
கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü
கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü
வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü
மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü
கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து
இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று
கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். ஆ) வீரப்பனும், ஆறுமுகமும் ( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின்
குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 அ. |
நாட்டு விழாக்கள்: நமது நாட்டை
எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள்
விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட்
15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்காக தனியான சட்ட திட்டங்கள்
வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை குடியரசுநாள்
விழாவாக ஜனவரி 26இல் கொண்டாடுகிறோம். விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம் நூற்றாண்டு
காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில்
நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த
ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான
சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை ஆளத்தொடங்கினர்.இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை
ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர். எண்ணற்றோர்
சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன்,
தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன்,
சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி
ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது கடுமையான
போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது. நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக
மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள்.
இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும்.
துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத
வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல்
கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள்
மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை
நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக்
கொள்ள வேண்டும். மரம்
நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய
அறிவுறுத்தல் மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில்
மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.கல்வியறிவில் முக்கியத்துவத்தைப் பொது
மக்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், காந்தி பிறந்த தினம்,ஆசிரியர் தினம்,
குழந்தைகள் தினம், கொடி நாள், விடுதலை நாள், வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத்
தாமே முன்னின்று நடத்திய முனைய வேண்டும். ஆ) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண்
வழங்குக. |
8 |