6TH STD TAMIL MODEL NOTES OF LESSONS -JULY WEEK 3 (2023-24)

   6. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு 

வகுப்பு: 6 .ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: முதலெழுத்தும்,சார்பெழுத்தும் (கற்கண்டு)

திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)

நாள் : ஜூலை மூன்றாம் வாரம்

17-07-2023 முதல்  21-07-2023    


1.கற்றல் நோக்கங்கள்:

     @ எழுத்து வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

       @ நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

2.கற்பித்தல் துணைக்கருவிகள்:

       சொல்லட்டைகள், வலையொளிப்பதிவுகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம்:

தமிழ் எழுத்து வகைகளைப் பற்றித் தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்:

                   செய்யுள் மற்றும் இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

5.மனவரைபடம்:
முதலெழுத்தும்,சார்பெழுத்தும்

திருக்குறள்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  @ எழுத்து முதலெழுத்து,சார்பெழுத்து என இருவகைப்படும்.
@ முதலெழுத்தைச் சார்ந்து வருபவை முதலெழுத்துகள்
@ ஆய்தம் தனிநிலை என்று அழைக்கப்படும்
@ திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
@ திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • முதலெழுத்து என்றால் என்ன?

  • சார்பெழுத்து என்றால் என்ன?

  • உலகப்பொதுமறை எது?

9. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

10.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

11.தொடர்பணி:

  • பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல்


12.கற்றல் விளைவு:

   @ எழுத்து வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

    @ நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை