9 TH STD TAMIL QUARTERLY QUESTION PAPER AND ANSWER KEY (VELLORE, KANCHEEPURAM,THENI,CUDDALORE,NAGAPPATTINAM)


வேலூர் , காஞ்சிபுரம்,தேனி,கடலூர் ,நாகப்பட்டிணம்- காலாண்டுத்தேர்வு

செப்டம்பர் - 2022-2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

வினாத்தாளைப் பதிவிறக்க👇👇

விடைக் குறிப்புகள்

நேரம் : 3.00 மணி                                                                        மதிப்பெண் : 100

பகுதி 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. கீழே

1

2.

ஆ.ஊரக திறனறி தேர்வு

1

3.

. மோனை , எதுகை,இயைபு

1

4.

இ. சிற்றிலக்கியம்

1

5.

ஈ. புலரி

1

6.

ஆ. வந்துவிட்டான் வரவில்லை

1

7.

ஆ. வந்துவிட்டான் ,வரவில்லை

1

8.

ஆ. திருவாரூர் - கரிக்கையூர்

1

9.

ஈ. தொகைச்சொற்கள்

1

10.

ஆ. குறள்

1

11.

அ. புறநானூறு

1

12.

ஈ. தமிழ்விடு தூது

1

13.

ஈ. பெயர் அறிய இயலவில்லை.

1

14.

ஈ. கூறுவதைக் கேட்பாயாக

1

15.

ஈ. இயல்,இசை,நாடகம்

1

பகுதி 2 / பிரிவு 1 (4 மட்டும்)

16.

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

2

17.

அ. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை இயற்றியவர் யார்?

ஆ. தமிழர் நாகரிகத்தை உண்ர்த்தும் விளையாட்டு எது?

2

18.

புல் , மரம்

2

19

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

20.

அலைபேசி , தொலை நகலி, மடிக்கணினி, தேய்ப்பி இயந்திரம்

2

21

 

மிகுதியான் மிக்கவை செய்தாரைத்தாம்தம்

தகுதியான் வென்று விடல்

 

2

பகுதி 2 / பிரிவு 2 (5 மட்டும்)

22

வீணையோடு வந்தாள்செய்தித் தொடர்

கிளியே பேசுகட்டளைத் தொடர்

2

23

பொருந்திய விடை இருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

24

அ. பதிவு செய்தான்

ஆ. தொழிலாளர் விரைவாக இயங்கினர்

2

25

அ . இரு நண்பர்களும் நகமும் சதையும் போல ஒற்றுமையுடன் இருந்தனர்

ஆ. முருகன் கண்ணும் கருத்துமாகப் படித்ததால் வெற்றி பெற்றான்

2

26

அ. ஏவுகணை

ஆ. அகழாய்வு

2

27

எழுதி

2

28

இசையுடன் அமையும் பாடல்

 

 

பகுதி – 3

பிரிவு – 1    (2 மட்டும்)

29

 

    ஏறுதழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருதநிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

3

30

அ. நீர் சுழற்சியின்போது

ஆ. நைட்ரஜன் , ஆக்சிஜன்

இ. மேகத்துகள்கள் மோதுவதால்.

3

31

  • குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டன.
  • சோழர்காலத்தில் நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை (ஏரி நீர்க்கழிவு) அடைந்து குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • குமிழித்தூம்பில் இரண்டு துளைகள் இருக்கும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து
  • நீர் வெளியேறும். கீழே இருக்கும் சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வாரத் தேவையில்லை .

3

பகுதி 3

பிரிவு - 2

32

·       மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

·       இலைகளும் கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

  • பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

3

33

ü   நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.

ü  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பும் முடிந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.

 

3

34

ஆ.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

ஆ.

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்

 

3

பகுதி 3

பிரிவு - 3

35

   தன்வினை :   வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

                         .கா: பந்து உருண்டது.

   பிறவினை :   வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும்.

                        .கா. பந்தை உருட்டினான்

   காரணவினை :  எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது

                         .கா. பந்தை உருட்ட வைத்தான்.

3

36

·       வல்லெழுத்துகள் க,,,ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும், இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.

·       இவ்வாறு எந்த எந்த இடங்களில் அவ்வல்லினம் மிகும் என்பதை விதிகளின் மூலமூம் எடுத்துக்காட்டுகள் மூலமும் அறியலாம்.

   (எ.கா) அச்சட்டை, கதவைத்திற, எனக்கேட்டார், எட்டுத்தொகை மல்லிகைப்பூ

·        நாம் பேசும் போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

3

37

 

உவமை , உவமேயம் ,உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது

3

பகுதி – 4

38 .

ü  அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு 

ü  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்

5

 

அ) எங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:

      1. கோவிலையும், தெருக்களையும் தூய்மைப்படுத்துவார்கள்

      2.தென்னையோலையால் தெருவெங்கும் பந்தல் கட்டுவார்கள்

      3.வாழை மரங்களைக் கட்டிவைப்பார்கள்

      4. நாடகம், இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்திட ஏற்பாடு செய்வார்கள்.

ஆ) இந்திர விழா நிகழ்வுகள்:

      1. தெருக்களிலும், மன்றங்களிலும் பூரணகும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு மற்றும் மங்கலப் பொருட்களைமுறையாக அழகுபடுத்திவைப்பார்கள்.

      2.பாக்கு மரம், வாழை மரம், வஞ்சிக் கொடி, பூங்கொடி, கரும்பு போன்றவற்றை நட்டுவைத்தனர்.

      3. வீடுகளின் முன் தெருத்திண்ணையில் இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத் தொங்கவிட்டனர்.

      4. விழாக்கள் நிறைந்த மூதூரின் தெருக்களிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்பினார்கள்.

      5. சொற்பொழிவு, பட்டிமண்டபம் நடத்தினார்கள்.

5

39.

  • ஐம்பூங்களுள் ஒன்று நீர். அது நிலம், காற்று, நெருப்பு வானம் ஆகிய நான்குடன் தொடர்பு கொண்டு இயங்கவல்லது. நம் முன்னோர் கிடைத்த நீரை அளவோடு பயன்படுத்தினர்.

     அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

  • குளம் தொட்டு வளம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர். இன்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும். இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்

5

40.

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத    

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி!

முயற்சியைப் பற்றி எழுதினேன்!

அனைவரும் இதன் அருமை அறிந்து

நடக்க வேண்டும்!

வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்!

5

42

பொருந்திய விடைகள் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

43

.

 

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாய் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகளுடன் விவரிக்க?

தமிழிலிருந்தே "திராவிடர்" - என்னும் சொல்:

    தமிழிலிருந்தே "திராவிடர்” என்னும் சொல் பிறந்தது என்று மொழியியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். "ஹீராஸ் பாதிரியார்" என்பவர் இக்கூற்றை தமிழ் தமிழா தமிலா டிரமிலா * ட்ரமிலா த்ராவிடா திராவிடா என்று விளக்குகின்றார்.

பிரான்சிஸ் எல்லிஸ் கருத்து :

     தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஆய்ந்து ஒப்புமைப்படுத்தி இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இவை "தென்னிந்திய மொழிகள்" என்றும் பெயரிட்டார்.

ஹோக்கன் - மாக்ஸ் முல்லர் கருத்து :

   ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் "தமிழியன்" என்று பெயரிட்டார். மேலும், இவை ஆரிய மொழிகளினின்று மாறுபட்டவை என்று கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

திராவிட பொழிகளுக்கான ஒப்பீட்டு அளவுகோல் தமிழே!:

   திராவிட மொழிகளுக்கான அடிச் சொல்லை மாற்றமின்றித் தொடர்ந்து வழக்கில் கொண்டுள்ள பொழிதமிழ் எனவே, திராவிட மொழிகளை ஒன்றுக் கொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, தமிழே ஒப்பீட்டு அளவுகோவாகவும் கருவியாகவும் பயன்படுகிறது.

   இவற்றின் மூலம் திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாய் இருக்கிறது என்பதை அறியலாம்.

.

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

   நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

 

8

44

.

முன்னுரை :
            நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்” “ஒவ்வொருகல்லாய்” “கொம்பன்முதலிய வரிசையில் தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும் இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே தண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள் தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த” என்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

 

8

.

      இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம்.

      இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.

         இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் 'ரோகினி' ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.

      1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

8

45

,

வரவேற்பு மடல்

இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

 

"சுத்தம் சோறு போடும்"

 

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு"

 

"கூழானாலும் குறித்துக் குடி"

 

    என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, ட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

   நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I

    ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.

 

                                                                                                                                    நன்றி.

                                                                                 இவண்,

இரா மணிமாறன்,

(மாணவர் செயலர்)

.

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
                                                                                                                                                         

                                                                                   திருத்தணி,
                                                                                                                                          

09-09-2023.

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

            இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                     

                                                                                                                                         முகிலன்.

 

முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

 

8

 விடைக்குறிப்பை PDF வடிவில் பதிவிறக்க



 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை