6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 3 RD WEEK

         6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 30-10-2023 முதல் 03-11-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  முதல் வாரம்                                           

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.தமிழர் பெருவிழா   2. மனம் கவரும் மாமல்லபுரம்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø தமிழர் திருநாளின் சிறப்பை உணர்தல்

      # தமிழரின் சிற்பக்கலையையும், பிற கலைகளையும் அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø பொங்கல் திருவிழாவின் போது உங்கள் வீட்டில் என்னவெல்லம் செய்வார்கள்? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • உரைநடைப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

தமிழர் பெருவிழா

மனம் கவரும் மாமல்லபுரம்

6.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • காலமறிதல்,அழியாச்செல்வம்,ஒளி விளக்கு,கற்றவரும் கல்லாதவரும்

  • மாமல்லபுரச் சிற்பங்களின் சிறப்புகளும் கலைநயமும்

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.பொங்கல் விழா எப்போது கொண்டாடப்படும்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.பொங்கல் விழா ஏன் கொண்டாடப் படுகிறது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. பொங்கல் விழா ஏன் அவசியம் கொண்டாட வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பொங்கல் திருநாள் தொடர்பான படங்கலைத் தொகுத்துவரச்செய்தல்

12.கற்றல் விளைவு:

   Ø 610 - பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

@ 620பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள்தொடர்கள்சொற்றொடர்கள்மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை