6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 30-10-2023 முதல் 03-11-2023
மாதம் : நவம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தமிழர் பெருவிழா 2. மனம் கவரும் மாமல்லபுரம்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø தமிழர் திருநாளின் சிறப்பை உணர்தல்
# தமிழரின் சிற்பக்கலையையும், பிற கலைகளையும் அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø பொங்கல் திருவிழாவின் போது உங்கள் வீட்டில் என்னவெல்லம் செய்வார்கள்? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
உரைநடைப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
தமிழர் பெருவிழா
காலமறிதல்,அழியாச்செல்வம்,ஒளி விளக்கு,கற்றவரும் கல்லாதவரும்
மாமல்லபுரச் சிற்பங்களின் சிறப்புகளும் கலைநயமும்
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பொங்கல் திருநாள் தொடர்பான படங்கலைத் தொகுத்துவரச்செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 610 - பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.
@ 620- பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்