7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 23-10-2023 முதல் 27-10-2023
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.இன்பத்தமிழ்க் கல்வி
2.அழியாச் செல்வம்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதை உணர்தல்
@ எளிய பாடல்களைச் சீர்பிரித்துப் படித்துப் பொருள்புரிந்து கொள்ளுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø உங்களுடைய தாய்மொழி யாது? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுட்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
இன்பத்தமிழ்க் கல்வி
பாவேந்தர் பாரதிதாசன் பன்முக ஆற்றல் கொண்டவர்.
இவருடைய பிசிராந்தையார் எனும் நாடக நூலுக்கு சாகித்திய அகாதமி பரிசு கிடைத்தது.
தமிழ்ப்பேறு எனும் தலைப்பில் இடம்பெற்ற கவிதை இங்கே தரப்பட்டுள்ளது.
சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் எனும் நூலிலிருந்து பாடல் தரப்பட்டுள்ளது.
உண்மையான செல்வம் எது? என இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என்று வகுப்பில் கல்ந்துரையாடுதல்
12.கற்றல் விளைவு:
Ø 703- தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில்/ சைகை மொழியில் வெளிப்படுத்தல்
@ 702- ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும், அக்கருத்துகளைத் தமது சொந்தக் கருத்துகளுடன் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்