6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 1 ST WEEK

  6.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 02-01-2024 முதல் 06-01-2024        

மாதம்          ஜனவரி    

வாரம்     :   முதல் வாரம்                                                    

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. பாரதம் அன்றைய நாற்றாங்கால்

1.கற்றல் நோக்கங்கள்   :

         ü  இந்திய நாட்டின் சிறப்புகளை அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        உங்களுக்குப் பிடித்த தேசத்தலைவர் யார்?

    என்ற வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து ஓவியங்களை அறிமுகம் செய்தல்

4.படித்தல்  :             

  • செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

பாரதம் அன்றைய நாற்றாங்கால்



6.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • பூமியின் கிழக்கு வாசலாகைத் திகழும் நமது இந்தியநாடு

  • இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடை.

  • காளிதாசர் பாடல்கள் கங்கைக் கரை வரை எதிரொலிக்கின்றன.

  • கம்பரின் கவிதை வரிகளுக்கு கங்கையின் அலைகள் இசை அமைக்கின்றன.

  • குமரி ஆகிய பெண்ணின் கூந்தலுக்கு காஷ்மீரத்து மலர்கள் சூட்டப்படுகின்றன.

  • இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தாராபாரதி ஆவார்.

  • இவர் கவிஞாயிறு என்று போற்றப்படுகிறார்.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

      1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் யாது? 

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

     2. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

    3. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

  •  ”நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள்” என்ற தலைப்பில் படங்களுடன் கூடிய தகவல் தொகுப்பேடு ஒன்றை மாணவர்கள் ஒவ்வொருவரையும் உருவாக்கி வரச்சொல்லுதல்.

  • ”நாட்டு  முன்னேற்றத்தில் நம் பங்கு என்ற தலைப்பில் பேசுவதற்கு உரைக் குறிப்புகளை உருவாக்கி வரச்சொல்லுதல்.

12.கற்றல் விளைவு:

   Ø 612 - பல வடிவங்களில் எழுதப்பட்ட  இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்றஇறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை