திருச்சி மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு
அரையாண்டுப்பொதுத்தேர்வு-2023, திருச்சி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஈ. சருகும், சண்டும் |
1 |
2. |
இ. அன்மொழித்தொகை |
1 |
3. |
ஈ. சிற்றூர் |
1 |
4. |
ஈ. வானத்தையும், பேரொலியையும் |
1 |
5. |
அ. அருமை+துணை |
1 |
6. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
7. |
இ.
இடையறாது அறப்பணி செய்தல் |
1 |
8. |
அ. அகவற்பா |
1 |
9. |
இ. தேவநேயப்பாவாணர் |
1 |
10. |
இ. காடு , வாட |
1 |
11. |
ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
12. |
இ. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் |
1 |
13. |
அ. குமாரசாமி |
1 |
14. |
ஆ. வயிறு |
1 |
15. |
இ. எண்ணும்மை |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
செய்யுளும் உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது |
2 |
17 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
18 |
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும்
காலம் கடந்து உணர்த்த
,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.
|
2 |
19 |
இடையறாது
அறப்பணி செய்தல் |
2 |
20 |
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர்
ம.பொ.சி. |
2 |
21 |
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை. |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
அ.
மூன்று+வேந்தர் - ௩ ஆ.
எட்டு+தொகை - அ |
2 |
23 |
அ. குடந்தை. ஆ. மன்னை |
2 |
24 |
அ. கந்தன் தொழில் ஆரம்பித்ததும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என
மனக்கோட்டைக் கட்டுகிறான் ஆ. கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்ததால் வெற்றி பெற்றாள். |
2 |
25 |
சேர்ர்களின்
பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன்’,
‘மலையமான்’ போன்றவை குறிப்பிட்த்தக்கவை.
கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்’
எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான்’
எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க
இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. |
2 |
26 |
அ. விதி அவனை வீதியில் கொண்டு வந்து சேர்ந்தது. ஆ. மலை மீது மாலையில் ஏறினான் |
2 |
27 |
அ.
நம்பிக்கை ஆ. ஆவணம் |
2 |
28 |
வெண்பாவின்
பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
அ)நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ)கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ)பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ)வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
30 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று
முழங்கினார். |
3 |
31 |
அ. அரசனின்
அறநெறி ஆட்சிக்கு ஆ. மதுரைக்காஞ்சி இ. அவையம் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
|
33 |
இடம்: நாகூர்
ரூமியால் எழுதப்பட்ட “சித்தாளு”
கவிதையின் வரிகள் இவை பொருள்: சித்தாளு
அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது விளக்கம்: உடலுக்கு
ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும்
புரியாது. |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர்
மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற
தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில்
முடியும் |
3 |
36 |
நிரல்நிரை
அணி நிரல்
= வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும்
பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொ ருள் கொள்வது
நிரல்நிறை அணி எனப்படும். |
3 |
37 |
புளிமாங்காய்
கூவிளம் தேமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா மலர் |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
38 அ. |
மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். (அல்லது) ஆ) கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய
மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய
தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல்
மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன் தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின் தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான்
இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு
நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. |
5 |
||||||||||||
39 |
ஆ) @ அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற
அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் (அல்லது) ஆ) v அனைவருக்கும்
வணக்கம். v நாட்டு
நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன். v சேவை
மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி. v மாணவர்களின்
உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும். v சேவை
மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும்,
பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.
|
5 |
||||||||||||
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||||
42 |
அ)
ஆ) 1. Education is what remains after one has forgotten
what one has learned in school – Albert Einstein ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில்
கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட் ஐன்ஸ்டின் 2. Tomorrow is often the busiest day of the week –
Spanish proverb பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ்
பழமொழி 3. It is during our darkest moment that we must
focus to see the light – Aristotle இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில் 4. Success is not final,failure is not fatal.It is
the courage to continue that counts – Winston Churchill வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது
மரணம் இல்லை. தொடர்ந்து
செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது – வின்ஸ்டன்
சர்ச்சில் |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை
நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும். # மருத்துவத் துறையில் மாபெரும்
புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும். # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம்
காண அறிவியல் உதவும். # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும். # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும்
செய்ய இயலும். # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம்
போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும். (அல்லது) ஆ) கருத்துச்செறிவு , பிழையின்மை ,
மேற்கோள்கள், நிகழ்காலச் சான்றுகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண்
வழங்குக |
8 |
44 அ. |
முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர்
,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்:
கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது
வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக
மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ
ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு
துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள்
சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ) முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும்
இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும்
இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு
30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம்
: அரசின் சாதனைகள் கூறும்
பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும்
நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன்
விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும்
நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை
இக்கட்டுரையில் கண்டோம். ஆ) முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம்
தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர்
எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில்
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள்
அரங்கேற்றப்பட்டன. சிற்றிலக்கியங்கள்: 96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க காலம்
தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு
வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
8 |
விடைக்குறிப்பை PDF வடிவில் பதிவிறக்க