சிறப்புத் திருப்புதல் தேர்வு 1 – இயல் 1,2,3
10.ஆம் வகுப்பு தமிழ் மதிப்பெண்கள்:
100 நேரம்: 3 மணி நேரம்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
2) மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக்கப்பல்களும்ஐம்பெருங்காப்பியங்களும்
ஆ) பெரும்வணிகமும்,பெருங்கலன்களும்
இ) ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக்கப்பல்களும்,அணிகலன்களும்
3) வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் காய்வகை….
அ) குலைவகை ஆ)
மணிவகை இ) கொழுந்துவகை ஈ) இலைவகை
4) கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இத்தொடரில் இடம்பெற்ற தொழிற்பெயரும்,
வினையாலணையும் பெயரும் முறையே
அ) பாடிய; கேட்டவர் ஆ) பாடல்;
பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ) பாடல்;
கேட்டவர்
5) ’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’-
பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்
அ)உருவகம்,எதுகை ஆ)மோனை,எதுகை இ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை
6) பாடு இமிழ் பனிக்கடல்
பருகி என்னும் முல்லைப்பாட்டுஅடி
உணர்த்தும் அறிவியல் செய்தி
அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல்நீர்
ஒலித்தல் ஈ)
கொந்தளித்தல்.
7) பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
8)பொருந்தும் விடைவரிசையைத்
தேர்ந்தெடுக்க.
அ)கொண்டல் - 1.மேற்கு
ஆ)கோடை - 2.தெற்கு
இ)வாடை - 3.கிழக்கு
ஈ)தென்றல் - 4.வடக்கு
அ) 1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
9) பின்வருவனவற்றுள் முறையான
தொடர் எது?
அ)
தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ)
தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ)தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ)
தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
10) ’சிலம்பு அடைந்திருந்த
பாக்கம் எய்தி’ –என்னும் அடியில் பாக்கம் என்பது
அ) புத்தூர் ஆ) மூதூர் இ) பேரூர் ஈ) சிற்றூர்
11) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்துவது
அ)
வேற்றுமை உருபு ஆ) எழுவாய்
இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
தென்னன் மகளே! திருக்குறளின்
மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
12) இப்பாடலில் தென்னன் என்பது யாரைக் குறித்தது?
அ) சோழன் ஆ) பாண்டியன் இ) சேரன் ஈ) பல்லவன்
13) மகளே என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) பெயரெச்சத் தொடர் இ)
விளித்தொடர் ஈ)எண்ணும்மை
14) நற்கணக்கே
-பிரித்து எழுதுக
அ) நற்+கணக்கே ஆ)நல்+கணக்கே இ)நல்க்+கணக்கே ஈ)நல்ல+கணக்கே
15) எதுகை நயத்தைத்
தேர்ந்தெடு
அ)
தென்னன்-இன்னறு ஆ) தென்னன்- மகளே இ)
மன்னும்-சிலம்பே ஈ) முடி-மணி
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)
16) வசன கவிதை என்பது
யாது?
17)
18)
'நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் -
மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு
வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள்
விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
19)
விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
20)
பெற்றோர்
வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை
எழுதுக
21)’அருமை’ எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
22) வேங்கை என்பதைத்
தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
23) தேன், நூல்,
பை, மலர், வா- இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
24) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய
செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
25) 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது.
'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
26) கீழ்க்காணும் சொற்களின்
கூட்டப்
பெயர்களைக் கண்டுபிடித்து
எழுதுக.
அ. கல், ஆ. ஆடு
27) தண்ணீர்
குடி,
தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களைவிரித்து எழுதுக; தொடரில் அமைக்க.
28)கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க : 1. Consonant 2. Land Breeze
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29)புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
-இது போல் இளம்பயிர்வகை ஐந்தின்
பெயர்களை எழுதுக.
30)
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும்
அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும்
புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதை சில இடங்களில்
காணமுடிகிறது.காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில்
ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
31) பத்தியைப்
படித்து விடை எழுதுக
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற
நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு,
இல்லறம், பெண்களுக்குரிய
பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில்
அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. ‘இல்லொழுக்கங்
கூறிய’ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாகஇடம்பெற்றுள்ளது.
முத்துக் குளிக்கும் கொற்கையின்
அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தஇவர்
இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலானவெற்றி வேற்கை
என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்றபட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம்,
லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம் ஆகியனவும் இவர் இயற்றிய
நூல்கள்.
1.
காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் யாது?
2. முத்துக்குளிக்கும் நகரம் எது?
3. சீவலமாறன் என்பது யாருடைய பட்டப்பெயர்?
பிரிவு-2 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34
கட்டாய வினா)
32) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
33) கூத்தனைக் கூத்தன்
ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
34) அ) சிறுதாம்பு…. எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக. (அல்லது)
ஆ) விருந்தினனாக…….
எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-3 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:
செய்க பொருளைச் செறுநர்
செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
36) 'கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' - இத்தாலாட்டுப் பாடலில்
அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
37) தீவக அணியைச்
சான்றுடன் விளக்குக.
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38) அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்,,பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
(அல்லது)
ஆ) முல்லைப்பாட்டு
உணர்த்தும் கார்காலச்செய்திகளை விவரித்து எழுதுக.
39) அ) மாநில
அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசுபெற்ற தோழனை வாழ்த்தி
மடல் எழுதுக. (அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில்
வழங்கப்பட்டஉணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரியசான்றுகளுடன்
உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40)
அ) எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை 2. எறும்புந்தன்
கையால் எண் சாண் 3.ஐந்து சால்பு ஊன்றிய தூண்
4.நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி 5.ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு
வகுப்பது பரணி
(அல்லது)
ஆ)மொழிபெயர்க்க:
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard.
I have come here to say a few words about our Tamil culture. Sangam literature
shows that Tamils were best in culture and civilization about two thousand
years ago. Tamils who have defined grammar for language have also defined
grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils
throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though
our culture is very old, it has been updated consistently. We should feel proud
about our culture. Thank you one and all.
41)நூலக உறுப்பினர்
படிவத்தை நிரப்புக.
42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43) அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான
தேவைகுறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக. (அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு
வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
44) அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்
பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. (அல்லது)
ஆ) புயலிலே
ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும்
ஒலிக்குறிப்புச் சொற்களும்
புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
45) அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை - சாலைப்பாதுகாப்பு உயிர்ப்பாதுகாப்பு-சாலை விதிகள்-ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிமுறைகள்-விபத்துகளைத் தவிர்ப்போம்-விழிப்புணர்வைத்
தருவோம்-முடிவுரை (அல்லது)
ஆ) குமரிக் கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி,கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,கோவை யாத்து,அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாக் கொண்டு ‘சான்றோர் வளர்த்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.