7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 2 ND WEEK

7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        05-02-2024 முதல் 09-02-2024           

மாதம்          பிப்ரவரி  

வாரம்     :   இரண்டாம் வாரம்                                                        

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. அறம் என்னும் கதிர் 2. ஒப்புரவு நெறி

1.கற்றல் நோக்கங்கள்   :

  • அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும், அறநெறிக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினை அறிதல்

  • ஒரு கருத்தை மையப்படுத்தியகட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • விளைநிலங்களை நேரில் சென்று பார்த்ததுண்டா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும பருவமாகும். இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாமல் பொது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேணடும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும்

  • பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படா வண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும் . அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெயநறியாகும் .

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. அறநெறிச்சாரத்தை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. அறநெறிச்சாரம் கூறும் அறநெறிகள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. உங்கள் வாழ்வில் ஒப்புரவு நெறியைக் கடைப்பிடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்கிறீர்கள்?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வருக.

12.கற்றல் விளைவு:

   Ø 704 - தாங்கள் படித்தவற்றைப் பற்றிச்  சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல்கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின்  மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

Ø 712 - பல்வேறுவகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள் சொற்றொடர்கள் ஆகியனவற்றையும் புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை