7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 05-02-2024 முதல் 09-02-2024
மாதம் : பிப்ரவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. அறம் என்னும் கதிர் 2. ஒப்புரவு நெறி
1.கற்றல் நோக்கங்கள் :
அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும், அறநெறிக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினை அறிதல்
ஒரு கருத்தை மையப்படுத்தியகட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
விளைநிலங்களை நேரில் சென்று பார்த்ததுண்டா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும பருவமாகும். இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாமல் பொது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேணடும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும்
பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படா வண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும் . அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெயநறியாகும் .
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வருக.
12.கற்றல் விளைவு:
Ø 704 - தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்
Ø 712 - பல்வேறுவகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள் சொற்றொடர்கள் ஆகியனவற்றையும் புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்