இரண்டாம் திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2024
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஆ.
மணி வகை |
1 |
2. |
அ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
3. |
ஈ. சிற்றூர் |
1 |
4. |
ஈ. திணை வழுவமைதி |
1 |
5. |
அ. கருணையன் , எலிசபெத்துக்காக |
1 |
6. |
அ. வெண்பா |
1 |
7. |
அ.
சேரமான் காதலி |
1 |
8. |
ஈ. ஜப்பான் |
1 |
9. |
அ.
முல்லை |
1 |
10. |
ஆ. மோனை எதுகை |
1 |
11. |
ஆ.
க அ , ௪ |
1 |
12. |
அ. அருளை , பெருக்கி |
1 |
13. |
இ.
அருமை + துணையாய் |
1 |
14. |
ஈ.
நீதிவெண்பா |
1 |
15. |
இ. கா.ப.செய்குத்தம்பி பாவலர் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
சீவக சிந்தாமணி , வளையாபதி, குண்டலகேசி |
2 |
17 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
18 |
வாருங்கள்,நலமா? ,நீர்
அருந்துங்கள் |
2 |
19 |
◆
குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன்- திரைப்படம்) ◆
சாகித்திய அகாதெமி விருது – சில நேரங்களில்
சில மனிதர்கள் (புதினம்) ◆
சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்) ◆
ஞானபீட விருது ◆
தாமரைத்திரு விருது |
2 |
20 |
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது. ü மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர். ü உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது |
2 |
21 |
பொருளல்ல
வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல
தில்லை பொருள். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
அ. மதி ஆ. குருதி இ. அக்கா ஈ. படகு |
2 |
23 |
அ.
விதியால் வீதிக்கு வந்தான். ஆ. சிறு பூனை
சீறியது |
2 |
24 |
அ. ஆவணம் ஆ. அமைச்சரவை |
2 |
25 |
அமர்ந்தான்
- அமர்+த்(ந்)+த்+ஆன் அமர்
– பகுதி, த்- சந்தி , த் “ந்” ஆனது விகாரம், ஆந் ஆண்பால் விகுதி |
2 |
26 |
வெட்சி
– கரந்தை , வஞ்சி – காஞ்சி , நொச்சி
- உழிஞை |
2 |
27 |
"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு
நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் |
2 |
28 |
அ. மீண்ட
துயர் ஆ. புயலுக்கு
முன் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
ü சூம்பல்:
நுனியில் சுருங்கிய காய்; ü சிவியல்:
சுருங்கிய பழம்; ü சொத்தை:
புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி; ü வெம்பல்:
சூட்டினால் பழுத்த பிஞ்சு; ü அளியல்:
குளுகுளுத்த பழம்; ü அழுகல்:
குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்; ü சொண்டு:
பதராய்ப் போன மிளகாய். ü கோட்டான்
காய் அல்லது கூகைக்காய்: கோட்டான்
உட்கார்ந்ததினால்
கெட்ட காய்;
ü தேரைக்காய்:
தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
; ü அல்லிக்காய்
: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ü ஒல்லிக்காய்:
தென்னையில் கெட்ட காய். |
3 |
30 |
அ)
போர் அறம் என்பது வீரமற்றோர்.
புறமுதுகிட்டோர், சிறார்.
முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது ஆ)
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது
கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார். இ)
போரின் கொடுமையிலிருந்து பசு,
பார்ப்பனர்.பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் |
3 |
31 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று
முழங்கினார். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
32 |
இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்ட
“சித்தாளு” கவிதையின் வரிகள் இவை பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள்
செங்கற்களுக்குத் தெரியாது விளக்கம்: கற்களைச்
சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல்
உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது. |
3 |
|||||||||||||||
33 |
|
3 |
|||||||||||||||
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
அ.
நிரல்நிரையணி. சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது. ஆ.
உவமை, உவமேயம் ,உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது |
3 |
||||||||||||||||||||||||
36 |
மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை பூங்கொடி-
உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆடுமாடு
-உம்மைத்தொகை |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் (அல்லது) ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். |
5 |
39 |
அ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம் ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்.
|
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ) 1.
நான் செல்லும் வழி இன்சொல் வழி. 2.
என் நண்பர்களை இன்சொல் வழியில்
நடக்கச் செய்வேன். 3.
தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4.
பிறர் மனம் மகிழும்படி நடப்பேன் 5.
பிறருக்கு நன்மை செய்வேன் ஆ) ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில்
பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) (அல்லது) ஆ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். |
8 |
44 |
அ. முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. (அல்லது) ஆ. வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
8 |
45 |
அ.
அண்மையில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்த
கட்டுரை (மிக்ஜாம் புயல்) முன்னுரை: தமிழகத்தின் பதின்மூன்று
கடலோர மாவட்டங்கள் மிக அதிகமாக புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிப்பிற்கு
உள்ளாகின்றன. கடந்த காலத்தில் பல புயல் சீற்றங்கள் பெரும் சேதத்தை
ஏற்படுத்தியுள்ளன. புயல்: ஒரு புயலானது தோன்றும்
நிலை வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை என ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக
மூன்று நிலைகளில் நடக்கிறது. கடற்பரப்பில் 26° செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் போது காற்று
வேகமாக வெப்பமடைந்து மேல்நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின்
அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச
ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக் காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு
நிலையில் தங்குகிறது. இதன் காரணமாக தாழ்வுநிலை உண்டாகி அதனால் அங்கு காற்றின்
அழுத்தம் அதிகரிக்கும் நிலையே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி
காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது புயல் எச்சரிக்கை கூண்டுகள்: புயல் வீசும் போது பெரிதும்
பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப்பகுதிகளாகும். ஆகையால் துறைமுகங்கள், துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள்,
கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்கள் மற்றும் மீனவர்களுக்கு
புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்க பயன்படும் சிக்னல்களே புயல் எச்சரிக்கை
கூண்டுகள் ஆகும். இதற்காக கடலில் இருந்து
காண ஏதுவாக துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும்
இரவு நேரத்தில் சிவப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கை
கூண்டுகளில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம்
அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகும். இந்த நிலைக்கு இந்த கூண்
இந்த கூண்டு என்பதனை இந்திய வானிலை மையம் தீர்மானித்து வைத்துள்ளது. மிக்ஜம் புயல்: மிக்ஜம் புயல் என்பது
வங்கக் கடலில் உருவாகிய புயலைக் குறிக்கும். வங்காள விரிகுடாவில் உருவான
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிசம்பர் 3 அன்று புயலாக வலுப்பெற்றது. டிசம்பர் 5 அன்று
பகல் வேளையில் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டணத்துக்கும் இடையே கரையைக் கடந்தது.
மிக்ஜாம் என்று மியான்மர் நாடு பெயரிட்டது. பாதிப்பு: சென்னையின் முக்கிய
ஆறுகளான கூவம், கொசஸ்தலை ஆறு, அடையாறு
ஆகியவற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரையோரப் பகுதிகள் நீர் சூழ்ந்தது. குறைந்தது 17 நபர்கள் பலியானர் மேலும் சுமார் 32,158 மக்கள்
தமிழ்நாட்டிலும் 9,500 மக்கள் ஆந்திரப்பிரதேசத்திலும்
வெளியேற்றப்பட்டனர். சென்னை பன்னாட்டு
வானூர்தி நிலையத்தின் ஓடுபாதைகளில் நீர் சூழ்ந்ததால் டிசம்பர் 4 ஆம் நாள் முதல் டிசம்பர் 5 நாள் காலை வரை தனது
பயணச் சேவையை நிறுத்தியது. நிறுத்தியது. மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள
கல்லூரி, பள்ளிகள் தொடர்ந்து சில சில நாட்கள் விடுமுறை
அறிவித்தன. தென்னக இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம்
ஆகியவற்றின் பல் வேறு தொடருந்துகள் நிறுத்தப்பட்டன.சென்னையில் உள்ள
தொழிற்பேட்டைகள், சிறு மற்றும் குறு தொழில்கள் வெள்ள
நீராலும் மின்தடையாலும் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின ஆந்திராவில் பல விளை
நிலங்களும் பயிர்களும் இந்த புயலால் பாதிக்கப்பட்டன. புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள்: வானிலை மையம் புயல்
ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் போது பேரிடர்களில் இருந்து காத்துக்கொள்ள
அதற்கான முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியமாகிறது. புயல் எச்சரிக்கை
விடுக்கப்பட்டால் கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல
வேண்டும். புயல் தாக்கும் நேரங்களில் வீட்டில் உள்ள மின்சார உபகரணங்களை பொரு
நிறுத்தி விடுதல் வேண்டும். அத்துடன் அ அத்துடன் அத்தியாவசிய அத்தியாவசிய
பொருட்களை அருகில் வைத்து கொள்ளுதல் சிறந்தது. புயல் பாதிப்பு இல்லை என்று
அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிவுரை: புயலின் போது உண்டாகும்
பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் மற்றும் கனமழை
ஆகியவற்றினால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. புயல் ஏற்படின் பாதிப்பிற்கு
உள்ளாகும் மாவட்டங்கள் குறித்தும் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள்
குறித்தும் வானிலை ஆய்வு மையம் வழங்கும் தகவல்களை கருத்தில் கொண்டு செயற்படுவதனூடாக
பேரிடர் கால ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும். (அல்லது) ஆ) முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø தமிழின்
தொன்மையைக் கருதி கம்பர் “என்றுமுள
தென்தமிழ்” என்றார். Ø கல்
தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø ஆங்கில
மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø வீரமாமுனிவர்
தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø தமிழ்
தாத்தா உ.வே.சாமிநாதன்
அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.
தமிழின் சிறப்புகள்: Ø தமிழ்
இனிமையான மொழி. பல
இலக்கிய, இலக்கணங்களை
கொண்ட மொழி. Ø இயல்,இசை,நாடகம்
என முத்தமிழ் உடையது. Ø தமிழ்
மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம். |
8 |