அரசுப்பொதுத்தேர்வு 2024
ஆயத்தத் தேர்வு வினாத்தாள்
ஆயத்தத் தேர்வு – 2024
பத்தாம் வகுப்பு - தமிழ் நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண்கள்
: 15 )
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்
15×1=15
1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். அடிக்கோடிட்ட பகுதி
குறிப்பிடுவது ___
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
2.
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ)
முல்லை,
குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ)
குறிஞ்சி,
மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
3.. மரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க. “ கண்ணும் கருத்தும் “
அ) வேகப்படுத்துதல் ஆ) கற்பனை செய்தல்
இ)
முழு
ஈடுபாட்டுடன்
செய்தல் ஈ)
ஆற்றில் இறங்குதல்
4.
"இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்இவ்வடிகளில்
கற்காலம் என்பது
அ)
தலைவிதி ஆ) பழைய காலம் இ) ஏழ்மை ஈ)
தலையில் கல் சுமப்பது.
5. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனித நேயம் ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
6. சிரித்துப் பேசினார் – இத்தொடருக்குரிய அடுக்குத் தொடரை தேர்க.
அ) சிரித்துக் கொண்டே பேசினார் ஆ) சிரிப்பதால் பேசினார்
இ) சிரித்துச் சிரித்துப் பேசினார் ஈ) சிரிப்புடன் பேசினார்
7
அருந்துணை என்பதைப் பிரித்தால்
அ)
அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருமை + இணை ஈ) அரு + இணை
8. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் - ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணம்----
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
9.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ)
துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா
10.
. "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன்
குன்றமாவது எங்களுக்கு வேண்டும்"- மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும்
குறிப்பவை முறையே-
அ)
திருப்பதியும் திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
11. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்___
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை
நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
"பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்"
12.
மோனைச் சொற்களைத் தேர்க.
அ)
பகர்வனர்,
கட்டு ஆ) வீதியும், நூலினும் இ) பருத்தி, காருகர் ஈ) பகர்வனர், பட்டினும்
13.
காருகர் என்னும் சொல்லின் பொருள்
அ)
நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்
14.
எதுகைச் சொற்களைத் தேர்க.
அ)
பகர்வனர்,
திரிதரு ஆ) பட்டினும், கட்டு இ) நூலினும், இருக்கையும் ஈ) திரிதரு, மயிரினும்
15.
செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்
அ.
நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம் இ. சிலப்பதிகாரம் ஈ. திருவிளையாடற் புராணம்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. குறிப்பு வரைக அவையம்..
17. வசன கவிதை - குறிப்பு வரைக.
18. விடைகளுக்கேற்ற வினாத்தொடர்
அமைக்க.
அ. ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருக்க வேண்டும்.
ஆ. மாணவர்கள் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
19. காலக் கழுதை
கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
20. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
21. “ செயல் “ என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. 'வேங்கை'
என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக்
காட்டுக.
23. சொற்களை
இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக. (தேன், விளக்கு, விண்,
மணி, மழை)
24. பழமொழியை
நிறைவு செய்க. அ) உப்பிட்டவரை
----- ஆ)
அளவுக்கு மிஞ்சினால் ------
25 எதிர்மறையாக மாற்றுக. அ) மீளாத் துயர் ஆ) அருகில் அமர்க
26. ஒலித்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
27. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
28. கலைச்சொல் தருக:- அ) STORM ஆ) PHILOSOPHER
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'.
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
30 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு
விடை
தருக.
சங்கப்பாடல்களின் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப் பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று இலக்கியங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர் என்றும் பாடப்பட்டுள்ளது.
அ)
அரசன் எதனைப் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்?
ஆ)
அரசனின் அறநெறி ஆட்சிக்கு யார் உதவினர்?
இ)
அரசனின் கடமையாக இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதைக்
குறிப்பிடுக.
31. "தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
33. 'முதல் மழை விழுந்ததும்'
என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?
34. அடிபிறழாமல் எழுதுக
அ) “ அருளை“ எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல் (அல்லது )
ஆ) “ நவமணி வடக்க யில் “ எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
36. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
37. தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக ( அல்லது )
ஆ) சிலப்பதிகார
மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடு ஒப்பிட்டு எழுதுக.
39. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற உன் தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
( அல்லது )
ஆ. உணவு
விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது
குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. படம் உணர்த்தும் திருக்குறள் கருத்தை கவினுற எழுதுக.
41. பாரதியார் நகர், வ.உ.சி.தெரு, நாமக்கல் – 5 என்ற முகவரியில் வசிக்கும் இளவேந்தன் என்பவரின் மகள் நிறைமதி, அரசு உயர்நிலைப் பள்ளி,ஏழூர், நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை நிறைமதியாகக் கருதி, கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
42. அ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள்
நடந்துகொள்ளும் முறைகளைப் பட்டியலிடுக.
. ( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க.
i) Tommorrow is often the busiest day of the week – Spanish Proverb
ii) Education is what remains after one has forgotten what one has
learned in school – Albert Einstein
iii) Language is the road map a culture it fells you where its people
come from and where they are going – Rita Mea Brown
iv) Its is during our darkest moments that we must focus to see the light
- Aristotle
v) Success is not final,failure is not fatal.It is the courage to
continue that counts – Winston Churchill
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
( அல்லது )
ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக
44. அ) அழகிரிசாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக. (
அல்லது )
ஆ) அன்னமய்யா
என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து
மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45. அ) முன்னுரை – பல்துறை அரங்குகள் – வண்ண விளக்குகள் – புத்தக விற்பனையகங்கள் – விளையாட்டுகள்- உணவுப்பண்டங்கள் – முடிவுரை . குறிப்புகளைக் கொண்டு “ அரசுப்பொருட்காட்சி “ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு ”சுற்றுச்சூழல்
பாதுகாப்பு
”என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை
–. நிலம்,நீர் மாசு – காற்று, வளி மாசு – சுற்றுச்சூழல் மாசும் மனித குலத்திற்கான கேடும் – விழிப்புணர்வு - முடிவுரை
இவ்வினாத்தாளுக்கான விடைகள் கீழ்கண்ட கற்றல் கட்டகத்தில் இடம்பெற்றுள்ளது. தேவையானோர் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்👇