முதல் இடைப்பருவத்தேர்வு 2024
10.ஆம் வகுப்பு -தமிழ்
👉 நாமக்கல் மாவட்டம் , தருமபுரி மாவட்டம் (ஒரே வினாத்தாள்)
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
அ) வணிகக் கப்பல்களும் ,ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
2. |
இ) மலேசியா |
1 |
3. |
இ) அன்மொழித்தொகை |
1 |
4. |
ஆ) 3,1,4,2 |
1 |
5. |
ஈ) சிற்றூர் |
1 |
6. |
அ) வேற்றுமை உருபு |
1 |
7. |
ஈ)
இலா |
1 |
எவையேனும்
3 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
3X2=6 |
||
8. |
காலையிலேயே மாலையும் வந்து விட்டது.( மாலை பொழுதையும், பூவையும் குறித்தது) (மாதிரி) |
2 |
9 |
வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள் |
2 |
10 |
பொருள்: திருமால் இலக்கணக்குறிப்பு: செய்யுளிசை அளபெடை |
2 |
11 |
இயந்திரமனிதன், செயற்கைக்கோள் |
2 |
12 |
பல்லார் பகைகொளலிறன் பத்தடுத்த தீமைத்தே நல்லார்
தொடர்கை விடல் |
2 |
எவையேனும்
3 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 3X2=6 |
||
13. |
அ.
கற்குவியல் ஆ. பழக்க்குலை இ. புற்கட்டு ஈ. ஆட்டுமந்தை |
2 |
14 |
அ. மெய்யெழுத்து (அ) மெய்யொலி ஆ. புயல் |
2 |
15 |
அ.
ஐந்து – ரு ஆ. நான்கு - ச’ |
2 |
16 |
அ. புதுமை ஆ. காடு |
2 |
17 |
அ. மருந்தும் மூன்று நாளுக்கு ஆ. மிஞ்சினால் அமிர்தமும்(அமிழ்தமும்) நஞ்சு |
2 |
எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க
2X3=6 |
||
18 |
விடை அ)நாற்று-
நெல் நாற்று நட்டேன். ஆ)கன்று- வாழைக்கன்று
வளர்த்தேன் இ)பிள்ளை- தென்னம்பிள்ளை
அசைந்தது ஈ)வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
19 |
ü
நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு
கூத்தனை வழிப்படுத்துகிறான் ü
ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின்
நாட்டை அடைக. ü
அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü
அவர்கள்
உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. |
3 |
20 |
சிறுதாம்பு
தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், "கைய கொடுங்கோற்
கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே
வருகுவர், தாயர்" என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் |
3 |
எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க
2X3=6 |
||
21 |
அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை ,
தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை. |
3 |
22 |
ü
மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப்
பண்புத்தொகை ü
பூங்கொடி-
அன்மொழித்தொகை ü
ஆடுமாடு –உம்மைத்தொகை ü
குடிநீர்
– வினைத்தொகை ü
மணி பார்த்தாள்
– இரண்டாம்
வேற்றுமைத்தொகை |
3 |
23 |
-
இக்குறளில்
உவமை அணி பயின்று வந்துள்ளது அணி
இலக்கணம்:
உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை
அணி விளக்கம்: மக்களிடம் வரி வாங்குவது அரசன்
வழிப்பறி செவதற்குச் சமம். அணிப்பொருத்தம்: உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம் – அரசன் வரி வாங்குவது, உவம உருபு – போலும் |
3 |
எவையேனும் 3 வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க 3X4=12 |
||
24 |
இன்சொல் பேசுதல் 1.
நான் செல்லும் வழி இன்சொல் வழி. 2.
என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3.
தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4.
பிறர் மனம் மகிழும்படி நடப்பேன் 5.
பிறருக்கு நன்மை செய்வேன் |
4 |
25 |
வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி,
நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப்
போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது
மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2.. |
|
26 |
காட்சிக்குப்
பொருந்திய கவிதை வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
4 |
27 |
மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.
நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்.
தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து
மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது.
நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி
உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் நன்றி. |
|
விரிவான விடையளிக்கவும் 1X7=7 |
||
28 அ |
முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர்
,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்:
கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது
வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக
மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ
ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு
துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள்
சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. |
4 |
ஆ |
விருந்தினரை
வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து
வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர
வைத்தேன். வாழை இலையில்
விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில்
உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின்
குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை
விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச்
சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர்
ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன்.
பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை
மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என
விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த
இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன்
கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன். |
|