இரண்டாம் இடைப்பருவத்தேர்வு - 2024
(தருமபுரி, திண்டுக்கல்,நாமக்கல்,உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பப் பயன்படுத்திக்கொள்ளலாம் )
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2024 தருமபுரி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக 7X1=7 |
||
வினா எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
2. |
இ. உழவு,ஏர்,மண்,மாடு |
1 |
3. |
ஆ. 12 |
1 |
4. |
இ. இடையறாது
அறப்பணி செய்தல் |
1 |
5. |
ஈ. செப்பல் ஓசை
|
1 |
6. |
அ. இகழ்ந்தால்
என்மனம் இறந்துவிடாது |
1 |
7. |
அ. கைமாறு கருதாமல்
அறம்செய்வது |
1 |
எவையேனும் 3 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 3X2=6 |
||
8 |
உரிய வினாத்தொடர்
அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
9 |
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும்
காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள்.
இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும். |
2 |
10 |
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர்
ம.பொ.சி. |
2 |
11 |
அவையம்=மன்றம் அல்லது
சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.அ. பாசனம்
ஆ, நம்பிக்கை |
2 |
12 |
இடையறாது அறப்பணி செய்தல் |
2 |
எவையேனும் 3 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 3X2=6 |
||
13 |
அ. காப்புரிமை ஆ. மெய்யியலாளர் |
2 |
14 |
அ. மயிலை ஆ. திருச்சி |
2 |
15 |
அ. முருகன் படிக்காமல் தேர்ச்சி பெறலாம் என மனக்கோட்டை
கட்டினான் ஆ. எனது அம்மா என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார் |
2 |
16 |
அ.
தொழில் ஆ. கூறியவுடன் பாடுவது |
2 |
17 |
மயங்கிய - மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு - பகுதி இ(ன்) - இறந்தகால இடைநிலை; 'ன்'
புணர்ந்து கெட்டது. ய் -உடம்படுமெய் அ - பெயரெச்ச விகுதி |
2 |
எவையேனும் 2 மட்டும் 2X3=6 |
||
18 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார். |
3 |
19 |
அ) சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித வாழ்வுக்குத்
தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
20 |
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும் |
3 |
எவையேனும் 2 மட்டும் 2X3=6 |
||
21 |
ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர்
மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற
தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில்
முடியும் |
3 |
22 |
ü வஞ்சித்திணை:
மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது. ü காஞ்சித்திணை:எதிர்த்துப்
போரிடுவது. |
3 |
23 |
வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை
ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும்
சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு
நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்… |
3 |
எவையேனும் 3 மட்டும் 3X4=12 |
||||||||||||
24 |
விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைச் செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது. காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||
25 |
சிந்திக்கத்
தூண்டும் காட்சி! சிந்தையில்
நின்ற காட்சி! எதிர்காலத்தேவை
இக்காட்சி! உண்மையை
உணர்த்தும் காட்சி! மனதில்
வைத்தால் நமக்கு நன்மையை
அளிக்கும் காட்சி! என் கவிதைக்கு இரையான காட்சி! |
5 |
||||||||||
26 |
மின்வாரியஅலுவலருக்குக்
கடிதம் அனுப்புநர் ப.இளமுகில், 6,காமராசர் தெரு, வளர்புரம், அரக்கோணம்-631003 பெறுநர் உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 ஐயா, பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து
வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து
இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை
சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி!!
இப்படிக்கு, தங்கள்
பணிவுடைய,
ப.இளமுகில். இடம்:அரக்கோணம், நாள்:15-10-2022.
|
5 |
||||||||||
27 |
|
5 |
விரிவான விடையளிக்கவும்: 1X8=8 |
||
28 |
அ) நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே
மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்
தூண்டினர். நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள்,
தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய
பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள்
மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை
சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு
வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆ) v பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான
திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல்
மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர். v குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து
சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார். v திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால்
நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள்
அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார். v அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப்
பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த
மகிழ்ச்சியைப் பெற்றார். v பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால்
"எம் பெருமான்" என்று அழைக்கப் பெற்றார். அது மட்டுமின்றி பூரணர் தன்
மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார். |
8 |