அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும்,
வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் படிவம் நிரப்புதல் என்பது மிக முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. 5 மதிப்பெண்கள் வழங்கப்படக் கூடிய இப்பகுதி மாணவர்கள் எளிமையாக மதிப்பெண் பெறும் பகுதியாக கருதப்படுகிறது. முறையான பயிற்சி இருந்தால் அனைத்து விதமான மாணவர்களும் இதில் முழு மதிப்பெண் பெறலாம் என்பதில் ஐயமில்லை. பள்ளிக்கல்வித்துறையால் 4 மாதிரிப் படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நான்கு மாதிரி படிவங்களில் நிரப்பப்படாத வெற்றுப் படிவங்களும் நிரப்பப்பட்ட மாதிரி படிவங்களும் இங்கே தொகுத்து PDF வடிவில் தரப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதை தரவிறக்கம் செய்து, நகல் எடுத்து பயன்படுத்தி அதில் உள்ளவாறு படிவங்களை நிரப்பி பயிற்சி செய்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண்ணை அனைத்து மாணவர்களும் பெற முடியும்