9 TH STD TAMIL-
4 TH WEEK MODEL LESSON PLAN
(22-11-21 TO 26-11-21)
நாள் : 22-11-2021 முதல் 27-11-2021
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஏறுதழுவுதல் 2. மணிமேகலை 3. அகழாய்வுகள்
![]() |
கருபொருள் :
Ø தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளை அறிந்து பின்பற்றுதல்
Ø விழாக்களின் நோக்கம் மற்றும் பண்பாட்டினை உணர்தல்.
Ø பட்டிமன்றம் என்ற கருத்துப் பரிமாற்ற வடிவத்தை நேர்த்தியுடன் பயன்படுத்துதல்
உட்பொருள் :
Ø ஏறுதழுவுதல் பற்றிய பண்பாட்டினை அறிதல்
Ø மணிமேகலையில் உள்ள இந்திர விழாவினைப் பற்றி அறிதல்
Ø அகழாய்வுகள் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் கொண்டு முன்னோர்கள் வாழ்ந்த காலத்தினையும், வரலாற்றினையும் அறிதல்
அறிமுகம் :
Ø வீடுகளில் பின்பற்றப்படும் மரபு பழக்க வழக்கங்களைப் பற்றி கேட்டல்.
Ø நமது ஊர்களில் கொண்டாடப்படும் பண்டிகை கால நிகழ்வினைக் கூறச்செய்தல்
Ø நமது வீடுகளில் முன்னோர்கள் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி வினவுதல்.
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,வரைபடத்தாள், ஒலிப்பெருக்கி,ஒளிப்பட வீழ்த்தி
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
Ø இலக்கியங்களில் காணப்படும் ஏறுதழுவுதல் குறித்த செய்திகள்
Ø ஏறு தழுவுதலுக்கான தொல் சான்றுகள்
Ø ஏறுதழுவுதல் எவ்வாறு பண்பாட்டின் அடையாளமாக உள்ளது.
Ø ஏறுதழுவுதலில் தமிழரின் அறம்.
Ø பண்பாட்டினை பேணிக்காப்பதில் தமிழரின் கடமை
Ø மணிமேகலை - நூற்குறிப்பு
Ø இந்திரா விழாப் பற்றி செய்திகள் – மணிமேகலை வாயிலாக அறிதல்
Ø எண்பேராயம், ஐம்பெருங்குழு – பற்றி அறிதல்
Ø அகழாய்வு மூலம் தமிழர் வாழ்க்கை முறை
Ø பட்டிமண்டபம் பற்றிய இலக்கிய செய்திகள்
ஆசிரியர் செயல்பாடு :
Ø ஒலி -ஒளி காட்சி மூலம் ஏறுதழுவுதல் பற்றிய படக்காட்சியைக் காண்பித்தல்
Ø தொல்சான்றுகள், இலக்கிய செய்திகள் பற்றி கூறல்
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø செய்யுளின் பொருளை விளக்குதல்.
Ø செய்யுளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்
Ø செய்யுளில் இடம் பெற்றுள்ள நயங்களை விளக்குதல்
Ø பாடல் கருத்துகளை அன்றாட வாழ்வியல் கூறுகளோடு தொடர்புப்படுத்தி கற்பித்தல்
Ø அகழாய்வு மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை சேகரித்து மாணவர்களுக்கு தொகுத்து வழங்குதல்.
Ø பாடப்பகுதி பட்டிமன்றம் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை மையமாகக் கொண்டு பட்டிமன்றம் அமைத்து தகவல்களை பரிமாறுதல்
கருத்துரு வரைபடம் : ஏறுதழுவுதல்
மணிமேகலை
அகழாய்வுகள்
மாணவர் செயல்பாடு :
Ø உரைப்பத்தியினை மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்
Ø நிறுத்தற்குறியீடு அறிந்து வாசித்தல்
Ø உரைப்பத்தியில் உள்ள மையக் கருத்தினை உணர்தல்
Ø மணிமேகலை – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø பாடலின் பொருளை வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபடுத்துதல்.
Ø பாடலில் காணப்படும் நயங்களை உணர்தல்.
Ø செய்யுளில் உள்ள இலக்கணக் கூறுகளைக் காணுதல்.
Ø அகழாய்வு மூலம் கிடைத்த செய்திகளை உணர்தல்
Ø பட்டிமன்றத்தில் பேசுவதற்கேற்ற நடைமுறைகளை அறிதல்
வலுவூட்டல் :
Ø பாடலை மீண்டும் இனிய இராகத்தில் பாடுதல், தொடர்ந்து மாணவர்களையும் பின் தொடர்ந்து பாட வைத்து வலுவூட்டல்
Ø பாடல் கருத்துகளை மீண்டும் கூறி வலுவூட்டல்
குறைதீர் கற்றல் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.
Ø மனப்பாடப்பாடலை மீண்டும் இனிய இராகத்தில் பாடுதல்
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø உரைப்பத்தியில் உள்ல வண்ணச் சொற்களைப் படித்தல்
Ø உரைப்பத்தியின் மையக் கருத்தினை உணர்தல்.
Ø செய்யுளிணை சீர் பிரித்து வாசித்தல்.
Ø செய்யுளில் கடினச் சொற்களை கண்டறிந்து அவற்றின் பொருள் காணுதல்
Ø பட்டிமன்றத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை உணர்தல்.
மதிப்பீடு :
Ø மாட்டின் கழுத்தில் கட்டப்படுவது _______________
Ø ஏறுதழுவுதலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை ?
Ø எண்பேராயம் என்பது யாது?
Ø ஐம்பெரும் குழுவில் இடம் பெறுவோர் யாவர்?
Ø அகழாய்வு என்பது யாது?
Ø அகழாய்வு மூலம் நாம் எவற்றை அறியலாம்?
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி, வணக்கம் – தமிழ்விதை மற்றும் தமிழ்ப்பொழில்