வகுப்பு: 8.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: விரிவானம் -சொற்பூங்கா
கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு
நாள் : ஜூலை( முதல் வாரம்)
(04-07-2022 முதல் 09-07-2022 வரை)
1.அறிமுகம்:
மொழி கருத்தை அறிவிக்கும் கருவி மட்டுமன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.
தொல் பழங்காலத்திலேயே ,எவ்வித அறிவியல் கருவியும் இல்லாத காலத்திலேயே,எழுத்துகள் எந்த உறுப்பில் இருந்து பிறக்கின்றன என்று ஒரு அறிஞர் கண்டறிந்துள்ளார்.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
2.படித்தல்:
விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளை ஆசிரியர், சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளைப் படித்துக்காட்டுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
சொற்பூங்கா
எழுத்துகளின் பிறப்பு
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
சொற்பூங்கா:
ஓரெழுத்தொரு மொழிகள்
எழுத்துகளின் பிறப்பு:
அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன. •
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. •
உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன
க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தி ன் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ட், ண் - ஆகிய இருமெய்களும் நா வின் நுனி, அண்ணத் தி ன் நு னி யை ப் ப ொ ரு ந் து வ தா ல் பிறக்கின்றன.
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
ஓரெழுத்தொருமொழி என்றால் என்ன?
ஓரெழுத்தொருமொழிகள் மொத்தம் எத்தனை?
உயிரெழுத்துகளில் எவ்வெவை ஓரெழுத்தொருமொழிகளாக அமையும்?
இடப்பிறப்பு என்பது யாது?
உயிரெழுத்துகள் எங்கு பிறக்கும்?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.
9.தொடர்பணி:
ஓரெழுத்தொருமொழிகளின் பொருளை அகராதியின் உதவியுடன் அறிந்துவரச் செய்தல்.
எழுத்துகளின் பிறப்பு குறித்த கருத்துகளை அட்டவணை வடிவில் தயாரித்து வரச்செய்தல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்