வகுப்பு: 9.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கற்கண்டு-புணர்ச்சி
வாழ்வியல் இலக்கியம் -திருக்குறள்
நாள்: 01-02-22 TO 05-02-22வரை (ஜனவரி முதல் வாரம்)
பொது நோக்கம்:
புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்
திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறல்
சிறப்பு நோக்கம்:
@ சொற்கள் புணரும்,விதங்களையும் அதனால் சொற்களில் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்து கொள்ளுதல்
@ தமிழின் இலக்கணக் கூறுகளில் ஆழ்ந்த அறிவு பெறுதல்
@ திருக்குறள் கூறும் வாழ்வியல் நெறிகளை அறிதல்
@ இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
@ கற்பனை,அழகியல் இரண்டுமே கவிதைக்கு முக்கியம் என உணர்தல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø பாலொடு நீர் சேர்வதால் என்ன நிகழும் என மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
Ø உங்களுக்குப் பிடித்த திருக்குறள் என்ன? என மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
புணர்ச்சி
புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும்.
எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டு களோ , இன்னொரு சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.
திருக்குறள்:
சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும்வரை உள்ள நோய்.
அறிவில்லாதவனுக் கு அறிவுரை சொல்பவன் அறிவில்லாதவனாக மாறிவிடுவான்!
கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை
ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார்
ஆசிரியர் செயல்பாடு:
§ சொற்களின் புணர்ச்சியைத் தக்க சான்றுகளுடன் விளக்க முற்படுதல்
§ புணர்ச்சி வகைகளுக்கு உள்ள வேறுபாடுகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
மாணவர் செயல்பாடு:
Ø புணர்ச்சி ஆழ்ந்த மொழி அழிவுக்குத் துணைபுரியும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
Ø திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
கருத்துரு வரைபடம்
புணர்ச்சி
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø புணர்ச்சி என்றால் என்ன?
Ø புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
Ø இயல்புப் புணர்ச்சி என்றால் என்ன?
Ø உலகப்பொதுமறை எது?
Ø குடிமை என்றால் என்ன?
Ø சான்றோர் எனப்படுவோர் யாவர்?
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.