9 TH STD TAMIL MODEL LESSON PLAN -FEBRUARY 1 ST WEEK

 வகுப்பு: 9.ஆம் வகுப்பு

பாடம்:   தமிழ்

தலைப்பு: கற்கண்டு-புணர்ச்சி

         வாழ்வியல் இலக்கியம் -திருக்குறள்

நாள்:   01-02-22  TO 05-02-22வரை (ஜனவரி முதல் வாரம்)

பொது நோக்கம்:

  • புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்

  • திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறல்

சிறப்பு நோக்கம்:

@ சொற்கள் புணரும்,விதங்களையும் அதனால் சொற்களில் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்து கொள்ளுதல்

@  தமிழின் இலக்கணக் கூறுகளில் ஆழ்ந்த அறிவு பெறுதல்

@ திருக்குறள் கூறும் வாழ்வியல் நெறிகளை அறிதல்

@ இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

@  கற்பனை,அழகியல் இரண்டுமே கவிதைக்கு முக்கியம் என உணர்தல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  பாலொடு நீர் சேர்வதால் என்ன நிகழும் என மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

Ø  உங்களுக்குப் பிடித்த திருக்குறள் என்ன? என மாணவர்களிடம் கேட்டு,அதற்கான விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

      வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.

பாடப்பொருள் சுருக்கம்:

       புணர்ச்சி

  • புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். 

  • எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டு களோ , இன்னொரு சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு

 திருக்குறள்:

  • சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும்வரை உள்ள நோய்.

  • அறிவில்லாதவனுக் கு அறிவுரை சொல்பவன் அறிவில்லாதவனாக மாறிவிடுவான்! 

  • கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை

  • ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார் 

ஆசிரியர் செயல்பாடு:

§  சொற்களின் புணர்ச்சியைத் தக்க சான்றுகளுடன் விளக்க முற்படுதல்

§  புணர்ச்சி வகைகளுக்கு உள்ள வேறுபாடுகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

§  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்

§  இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

Ø  புணர்ச்சி ஆழ்ந்த மொழி அழிவுக்குத் துணைபுரியும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்

Ø  இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

கருத்துரு வரைபடம்

புணர்ச்சி


திருக்குறள்

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  புணர்ச்சி என்றால் என்ன?

Ø  புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

Ø  இயல்புப் புணர்ச்சி என்றால் என்ன?

Ø  உலகப்பொதுமறை எது?

Ø  குடிமை என்றால் என்ன?

Ø  சான்றோர் எனப்படுவோர் யாவர்?

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.







கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை