இயல்-4 வினாக்கள்
1)’உனதருளே பார்ப்பன் அடியேனே’-யார்,யாரிடம் கூறியது?
அ)குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ)இறைவனிடம்
குலசேகராழ்வார் இ)மருத்துவரிடம்,நோயாளி ஈ)நோயாளி,மருத்துவரிடம்.
2)குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா’என ஆண் தெய்வத்தை
அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்-
ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே
அ)மரபு வழுவமைதி, திணை வழுவமைதி ஆ)இடவழுவமைதி, மரபு வழுவமைதி
இ)பால் வழுவமைதி ,திணை வழுவமைதி
ஈ)கால வழுவமைதி,இட வழுவமைதி.
3)’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்-இவ்வடியில் மருத்துவர்,நோயாளன் முறையே
அ)குலசேகர ஆழ்வார்,இறைவன் ஆ)இறைவன்,குலசேகர ஆழ்வார்
இ) நப்பூதனார் ,இறைவன் ஈ) இறைவன், நப்பூதனார்
4)திருவித்துவக்கோடு எனும் ஊர்----மாநிலத்தில்,--------மாவட்டத்தில் உள்ளது.
அ) தமிழ்நாடு, திருவரங்கம் ஆ) கேரளா, கோழிக்கோடு
இ)கேரளா,
பாலக்காடு ஈ) தமிழ்நாடு, திருபுவனம்
5)குலசேகர ஆழ்வார்
உய்யவந்த பெருமாளை எவ்வாறு உருவகித்துப் பாடுகிறார்?
அ)அன்னையாக
ஆ) மருத்துவனாக இ) தந்தையாக ஈ)
நண்பனாக
6)பெருமாள் திருமொழி
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் எந்த ஆயிரத்தில் உள்ளது?
அ)இரண்டாயிரம் ஆ)முதலாயிரம் இ)மூவாயிரம் ஈ)
நாலாயிரம்
7)நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக இடம்பெற்றது
அ)திருப்பாசுரம் ஆ) திருப்பல்லாண்டு இ)
திருவருட்பா ஈ) பெருமாள் திருமொழி
8) பெருமாள் திருமொழி பாடியவர்
அ)பொய்கையாழ்வார் ஆ) நம்மாழ்வார் இ)குலசேகர ஆழ்வார் ஈ)பெரியாழ்வார்
9)
பெருமாள்
திருமொழியில்------- பாடல்கள் உள்ளன
அ) 105 ஆ) 104 இ) 205 ஈ) 106
10) குலசேகர ஆழ்வாரின் காலம்--------- நூற்றாண்டு.
அ)ஏழாம் ஆ)எட்டாம் இ)ஒன்பதாம் ஈ)ஆறாம்
11)’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்-இவ்வடிகளில்
இடம்பெற்ற நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) உருவகம் ஈ)
அந்தாதி
12)மாளாத காதல்நோயாளன் போல் மாயத்தால்’-இவ்வடியில்
மாயம் என்பதன் பொருள்
அ) பொய்மை ஆ)நிலையாமை இ) விளையாட்டு ஈ) அற்புதம்
13)மாயத்தால் மீளாத் துயர் தருபவர்----------
அ)குலசேகர
ஆழ்வார் ஆ)வித்துவக்கோட்டு இறைவன் இ) மக்கள் ஈ) மருத்துவர்
14)’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்-இவ்வடிகளில்
இடம்பெற்ற முரண் சொற்கள்
அ)வாளால்-
மாளாத ஆ)நோயாளன்-மாயத்தால்
இ) மருத்துவன்
- நோயாளன் ஈ)வாளால் - நோயால்
15)திணையின் உட்பிரிவு----------
அ) உயர்திணை ஆ)எண் இ)பால் ஈ)இடம்
16)உயர்திணைப் பால் பகுப்பில் அமைந்த சொல் வரிசையைத் தேர்ந்தெடுக்க
அ)வீரன்,புறா,மலைஆ)யானை,ஆடவர்,தலைவி இ)கல்,மண்,மரம்ஈ)ஆண்,பெண், மகள்
17)அஃறிணைக்குரிய பால்பகுப்புகள்-----------
அ)ஒன்றன்பால்,பலவின்பால் ஆ)ஆண்பால்,பலர்பால்
இ)பெண்பால், பலவின்பால் ஈ) பலர்பால், பெண்பால்
18)இடம்--------வகைப்படும்
அ)2
ஆ) 4 இ) 3 ஈ) 7
19) வந்தேன்,வந்தோம் என்பன---------
அ)தன்மை
பெயர்கள் ஆ)தன்மை வினைகள்
இ)முன்னிலைப்
பெயர்கள் ஈ)முன்னிலை வினைகள்
20)பொருத்துக
அ) நான், யான். நாம், யாம்
- 1. தன்மை வினைகள்
ஆ) செய்தேன், செய்தோம் - 2. தன்மைப் பெயர்கள்
இ) நீர், நீவிர், நீ, நீங்கள் - 3.முன்னிலை வினைகள்
ஈ) நடந்தாய்,வந்தீர்,கேளுங்கள்
- 4.முன்னிலைப் பெயர்கள்
21)இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும்
எழுதுவதும்--------- ஆகும் .
அ)வழு ஆ) வழாநிலை
இ) வழுவமைதி
ஈ) இயல்பு வழக்கு
22)இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும்
------------ஆகும்.
அ) வழு ஆ) வழாநிலை இ) இயல்பு வழக்கு
ஈ) தகுதி வழக்கு
23)வழு--------வகைப்படும்
அ)9 ஆ)8 இ)6
ஈ)7
24)ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று
கேட்பது------------
அ)ஐய வினா ஆ) வினா வழாநிலை
இ) வினா வழு ஈ) வழுவமைதி
25)தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுவது………..
அ) மரபு
வழாநிலை ஆ) மரபுவழு இ) வழுவமைதி ஈ) திணை வழு
26)இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு
காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது--------
அ) வழுவமைதி ஆ) வழாநிலை இ) வழு ஈ) மரபுவழி
27) என் அம்மை வந்தாள் என்று மாட்டை பார்த்து
கூறுவது
அ) திணை
வழாநிலை ஆ) திணை வழு இ) திணை வழுவமைதி ஈ)பால்வழுவமைதி
28)குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
என்பது--------
அ)திணை வழுவமைதி ஆ)பால் வழுவமைதி இ)இடவழுவமைதிஈ)கால
வழுவமைதி
29)’கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்-என்ற வரிகள் பாரதியார்
கவிதையில் இடம் பெற்றிருப்பது
அ)கால வழுவமைதி ஆ)மரபு வழுவமைதி இ)பால்வழுவமைதி
ஈ)திணைவழுவமைதி
TO ATTEND ONLINE EXAM