10 TH STD -TAMIL PUBLIC EXAM MODEL QUESTION PAPER-2 (2021-22)

 

ஆண்டு இறுதித் தேர்வு -மாதிரி வினாத்தாள்-4

    10.ஆம் வகுப்பு                                        தமிழ்                                     100 மதிப்பெண்கள்

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                 15×1=15

                                                                             

1.திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது,------ வரிசை, தமிழ் அல்லாத பிற மொழிகளில் இல்லை.

அ) ஒரு பொருள் பல சொல்  ஆ) பலபொருள் ஒரு சொல் 

 இ) ஒன்றொழிப் பொதுச்சொல்   ஈ) ஓரெழுத்து ஒருமொழி

2. காந்தி இர்வின் ஒப்பந்தம் ----ஆம் ஆண்டு போடப்பட்டது.

) 1931    ஆ) 1932  இ) 1930  ஈ) 1935

3. சுதந்திர இந்தியாவின் மகத்தா ன சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்  ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

இ)அறிவியல் முன்னேற்றம்            ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

4. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’  என்று கூறியவர் யார்?

அ) அர்னால்டு   ஆ) ஏணிச்சேரி முடமோசியார் இ) ஜி.யு. போப்  ஈ) மாங்குடி மருதனார்

5. பெருமாள் திருமொழியில்----பாடல்கள் உள்ளன

) 110    ஆ) 105  )115  ) 125

6. சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ---------------.

அ) புதுமைப்பித்தன்  ஆ) ஜெயகாந்தன்    இ) தி.சோ.வேணுகோபாலன் ஈ) கண்ணதாசன் 

7. செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும் அளபெடை------ அளபெடை ஆகும்.

அ) இன்னிசை      ஆ) சொல்லிசை  இ) இசைநிறை  ஈ) ஒற்றளபெடை

8. குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மா’ என் று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.  பூனையார் 

   பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.   இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –-------

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி     ஆ) இட வழுவமைதி, மர பு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி     ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

9. காலங்கரந்த பெயரெச்சம் ----------.

) வேற்றுமைத்தொகை        ஆ) வினைத்தொகை         இ) உம்மைத்தொகை         ஈ) பண்புத்தொகை

10. முல்லை நில பறை ------------.

அ) மீன்கோட்பறை                 ஆ) ஏறுகோட்பறை           இ) தொண்டகம்                  ஈ)  துடி

11. தீவகம் என்னும் சொல்லின் பொருள்------------.

அ) விளக்கு                          ஆ) நெருப்பு                    இ) காற்று                         ஈ) வெம்மை

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடைதருக.        

வண்ணமும் சுண்ணமும்  தண்நறுஞ் சாந்தமும்

பூவும்  புகையும்  மேவிய விரையும்

பகர்வனர்  திரிதரு  நகரவீதியும் 

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 

கட்டு நுண்வினைக் காருகர்  இருக்கையும் .

12. இப்பாடலின் ஆசிரியர் யார்? 

அ)   கம்பர்         ஆ) இளங்கோவடிகள் இ) கண்ணதாசன்       ஈ) அதிவீரராம பாண்டியர்

13. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?  

அ) காசிக்காண்டம்           ஆ) கொய்யாக்கனி            இ) சிலப்பதிகாரம்        ஈ) கம்பராமாயணம்

14. வண்ணமும் சுண்ணமும் – இலக்கணக் குறிப்பு தருக .

அ) எண்ணும்மை        ஆ) வினைமுற்று        இ) பெயரெச்சம்          ஈ) தொழிற்பெயர்

15. விரை என்பதன் பொருள்------------.

அ) மனம்                ஆ) மணம்              இ) உள்ளம்              ஈ) மேகம்

 

பகுதி – II  (மதிப்பெண்கள் ) பிரிவு -1

எவையெனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                           4×2=8

(21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)              

16. விடைக்கேற்ற வினாவினை அமைக்க.

   அ. 1948 ஆகஸ்டு எட்டாம் நாள்,இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க புனித நாளாகும்.

   ஆ. முதலாம் இராசராசன் காலம் தொட்டு மெய்க்கீர்த்திகன் கல்லில் வடிக்கப்பட்டன.    

     17. செறுநர் செருக்கறுக்கும் ஆயுதம் எது?

     18. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

     19. குறிப்பு வரைக – ‘அவையம்’

    20. உலகத் தமிழ் மாநாடு குறித்து கா.அப்பாதுரையார் கூறுவன யாவை?

21. ’குற்றம்’ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                பிரிவு -2

எவையெனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வெண்டும்.                                      5×2=10

    22. இன்னாசியர்   புத்தகங்களை   வாரிசைப்படுத்தினார்.  அவற்றைப்   புத்தக  அடுக்கங்களில்      

      அடுக்கிவைத்தார்.   புத்தகங்களைக்  கேட்பவர்களுக்கு  எடுத்துக்கொடுத்தார்.

    (ஒரே சொற்றொடராக மாற்றுக)

    23. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

           அரசால் நிறுவப்படும் கட்டடங்களில் சிலைகளில் நிறுவியவர் பெயர் நிறுவப்பட்ட காலம் நோக்கம்   

   சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்  இவை நமது இன்றைய   

      வரலாற்றைப் புலப்படுத்துபவை  அதுபோலவே கோவில்களிலும் பழமையான நினைவுச்      

      சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம் பெற்றிருக்கும்.

   24. அகராதியைக் கண்டு பொருள் எழுதுக.

i)  கட்புள்               ii) அடவி

   25. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும்  எழுதுக.

      பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு  நன்றாக  வளர்ச்சிப் பெற்றிருக்கும். சுவைத்தல்   

      உணர்வுக் குறைவாகவும்,  நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறுமளவும் இருக்கும்.

       26.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு, மழைக்கால மாலையில் சூடாக உண்ண, சுவை மிகுந்து   

          இருக்கும். – இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

       27.தீவக அணியின் வகைகள் யாவை?

       28.நோக்கிய  – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

    பகுதி – III (மதிப்பெண்கள் 18)

பிரிவு - 1       

எவையெனும் இரண்டு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.                                  2×3=6

29.தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்போம்’ - இடம் சுட்டிப் பொருள் தருக.

30.தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பதை பாவாணரின் கட்டுரை வழி நிறுவுக.

31.பத்தியைப் படித்து விடையளிக்க

     பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. திருக்குறளில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.  ஊரூராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. தோற்பாவைக்கூத்தானது  கையுறைப்பாவைக்கூத்தாகவும், பொம்மலாட்டமாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

அ) மரப்பாவையைப் பற்றி குறிப்பிடும் நூல் எது ?

ஆ) பாவை குறித்த செய்திகள் தமிழ் இலக்கியங்களில் எப்போதுவரை காணப்படுகிறது?

இ) தோற்பாவைக் கூத்தின் மாற்று வடிவங்கள் எவை?

பிரிவு - 2       

எவையெனும் இரண்டு வினாக்களுக்குமட்டும் சுருக்கமாக விடையளிக்க.                              2×3=6

(34ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வெண்டும்.)

     32. பார்ப்பன் அடியேனே என்று குலசேகராழ்வார் கூறக்காரணம் யாது?

     33.”கொள்வோர் கொள்க:குரைப்போர் குரைக்க” எனும் கண்ணதாசன் கூற்றினை விளக்குக

     34.  “அருளைப் பெருக்கி” எனத் தொடங்கும் நீதிவெண்பாப் பாடலை எழுதுக.  (அல்லது)

  “வெய்யோன் ஒளி” எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.

                                                            பிரிவு - 3

எவையெனும் இரண்டு வினாக்களுக்கு  மட்டும் சுருக்கமாக  விடையளிக்க.                              2×3=6  35. தொகைநிலைத் தொடர்களைச் சான்றுடன் கூறுக.

36.இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

     இன்மையே இன்னா தது       - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

37.தீவக அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

பகுதி – IV  (மதிப்பெண்கள் (25)         

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக                                                                           5×5=25

     38. அ) நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக. (அல்லது)

ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக,

     39. அ) நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக .

மகளிர் நாள்விழா

இடம்: பள்ளிக் கலையரங்கம்                                    நாள்:08.03.2019.

      கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர்

      கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியுரை.  (அல்லது)

ஆ) நும் ஊருக்குக் குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.

     40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


     41. மேல்நிலை வகுப்பு – சேர்க்கை விண்ணப்பப் படிவம் நிரப்புக.

 

    42. அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி.

  திறன்பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை.

  காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்.

  எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி.

  இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்

இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.              (அல்லது)

ஆ) மொழிபெயர்க்க.

    Therukoothu is,  as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Raamayana, Mahabhartha and other ancient puranas . There are more songs in the play with dialogues improvised by the aritists on the spot. Fifteen to twenty atcors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has  singer,  the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes  and bright   makeup. Koothu is very popular among rural areas.

பகுதி - V        (மதிப்பெண்கள் 24)

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                            3×8=24

     43. அ) சங்க இலக்கியங்கள் கூறும் தமிழரின் கொடைத்திறம் பற்றிய கருத்துகளை எழுதுக.   (அல்லது)

           ஆ) தமிழ்ச்சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் 

            பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக.

     44. அ)இராமானுசர் நாடகத்தை சிறுகதை வடிவில் சுருக்கி எழுதுக. (அல்லது)

    ஆ) 'அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

    45. அ) தமிழ் இலக்கியவளம் - கல்வி மொழி- பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்-  

           அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழக்குச் செழுமை   -  மேற்கண்ட குறிப்புகளைக்  

           கொண்டு ’செம்மொழித் தமிழுக்கு வளம்  சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் வார 

           இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.      (அல்லது)

       ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.

           முன்னுரை - சுற்றுச்சூழல் பாதுகாப்பு – நிலம் மாசுபடுதல் – நீர் மாசுபடுதல் – காற்று மாசுபடுதல் –

           கட்டுப்படுத்தும் வழிகள் – இயற்கையைப் பாதுகாத்தல் – முடிவுரை.

 

PDF வடிவில் பதிவிறக்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை