ஆண்டு இறுதித்
தேர்வு -மாதிரி வினாத்தாள்-3
10.ஆம் வகுப்பு தமிழ் நேரம்:3.00 மணி நேரம் 100 மதிப்பெண்கள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
15X1=15
1)காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு
நல்லஉரங்கள்.இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.
அ)
சருகும், சண்டும் ஆ) இலையும் சருகும் இ) தாளும் ஓலையும் ஈ) தோகையும் சண்டும்
2)
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ) எந்+தமிழ்+நா ஆ) எம்+தமிழ்+நா இ) எந்த+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா
3) தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன
_____ ஐ குறிப்பனவாகும்.
அ) மூன்று காலங்கள் ஆ) மூன்று பால்கள் இ) மூன்று இடங்கள் ஈ) மூன்று நிலைகள்
4) கோசல
நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ)
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ)
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ) அங்கு வறுமை இல்லாததால்
இ)நோயாளியிடம் மருத்துவர் ஈ) இறைவனிடம்
குலசேகராழ்வார்
5) மனக்கோட்டை என்ற மரபுத்தொடருக்கான
சரியான பொருளைத் தேர்க.
அ) இல்லாததைக் கற்பனை செய்தல் ஆ) பெரிய கோட்டை கட்டுதல்
இ) அதிகமாகச் செலவு செய்தல் ஈ) வேலையைத் தள்ளிப் போடுதல்
6)காலம்
கரந்த பெயரெச்சம் என்பது
அ)பண்புத்தொகை ஆ)வினைத்தொகை
இ)ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் ஈ)வேற்றுமைத்தொகை
7)கோயம்புத்தூர் – என்ற ஊர்ப்பெயரின்
மரூஉவைத் தேர்க.
அ) தஞ்சை ஆ) சைதை இ) கோவை
ஈ) மயிலை
8)“நாற்றிசையும் செல்லாத நாடில்லை
ஐந்து சால்பு ஊன்றிய தூண்”- என்ற செய்யுள்
அடிகளில் உள்ள எண்ணுப் பெயர்களுக்கான தமிழ் எண்ணுருக்களைத் தேர்க.
அ) அ, எ ஆ) க, ங
இ) ங, உ ஈ) ச, ரு
9) மாலவன் குன்றம்
போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்:-
மாலவன்
குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ)
திருப்பதியும் திருத்தணியும் ஆ)
திருத்தணியும் திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ)பழனியும் திருப்பரங்குன்றமும்
10) இளவேனிற் காலம் என்பது
அ) ஆனி, ஆடி ஆ) ஆவணி, புரட்டாசி இ) சித்திரை, வைகாசி ஈ) ஐப்பசி, கார்த்திகை
11) சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்
சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
அ) வெளிநாட்டு முதலீடுகள் ஆ) அறிவியல் முன்னேற்றம்
இ) அரசின் செயல்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஈ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
பாடலைப்படித்து வினாக்களுக்கு
விடையளிக்க:
பகர்வனர்
திரிதிரு நகரவீதியும்;
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்
12) இவ்வடிகள்
இடம்பெற்ற நூல் எது?
அ)
சிலப்பதிகாரம் ஆ)
நாலாயிரதிவ்யபிரபந்தம் இ)
கம்பராமயணம் ஈ) தேம்பாவணி
13) பாடலில் அமைந்த
மோனையை எடுத்து எழுதுக.
அ)
பகர்வனர், பட்டினும் ஆ) கட்டு,
தூசும் இ) பட்டி, கட்டு ஈ) பட்டினும் கட்டு
14) காருகர் - பொருள்
தருக.
அ)
நெய்பவர் ஆ) பொற்கொல்லர் இ) வணிகர்
ஈ) பரதவர்
15) இப்பாடலில்
காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
அ)
சந்தனம், அகில் ஆ) ஏலம், லவங்கம் இ) பட்டை, சாம்பிராணி ஈ) திரவியம், வாசனை
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)
16 வசன கவிதை – குறிப்பு வரைக.
17) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ) பூவின் தோற்ற நிலை அரும்பு எனப்படும்.
ஆ)“கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பாரதி பெருமைப்படுகிறார்.
18) தாவரங்களின் அடிப்பகுதியினைக் குறிக்கும் சொற்களை எழுதுக.
19) மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
20) வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதை
விளக்குக.
21) “கெடும்”- என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
22) அந்தமான்
என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
23)
கலைச் சொற்கள் தருக அ) Modern literature ஆ) Terminology
24)
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக்
காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும்
நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட
வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்
25)
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப் படுத்துக.
26)
விடுபட்ட எழுத்துக்களை நிரப்பி, அந்த எழுத்துக்களை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு
நூலின் பெயரை எழுதுக.
1.இ-கு-(பறவையிடம்
இருப்பது)
2.கு-தி-(சிவப்பு
நிறத்தில் இருப்பது)
3.வா-(மன்னரிடம்
இருப்பது)
4.அ-கா-(தங்கைக்கு
மூத்தவர்)
5.ம-(அறிவின்
மறுபெயர்)
6.பட-(நீரில்
செல்வது)
27)
வினா எத்தனை வகைப்படும். அவை யாவை?
28)
மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.
பகுதி-3(மதிப்பெண்:18)
பிரிவு-1
2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:.
29) பத்தியைப் படித்துப் பதில் தருக:-
தமிழர்,
போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர்,
புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின்
கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள்,
நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத்
தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ. போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?
ஆ. ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?
இ. போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன?
30)“புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது”. இதுபோல் இளம் பயிர்வகை மூன்றின்
பெயர்களைத் தொடர்களில் அமைக்கவும்.
31) “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்”- இடம் சுட்டிப் பொருள்
விளக்குக.
பிரிவு-2 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)
32) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலலேறு சுட்டுவனவற்றைச்
சுருக்கமாக எழுதுக.
33) “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை
சுட்டும் செய்தியை விளக்குக.
34)
அடிபிறழாமல் எழுதுக
அ.அன்னை மொழியே-
எனத்தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக (அல்லது)
ஆ.நவமணி-எனத்தொடங்கி ‘அழுவ போன்றே’ என
முடியும் பாடலை எழுதுக.
பிரிவு-3 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)
பின்வரும் திருக்குறளை அலகிட்டு வாய்பாடு காண்க:
இன்மையின் இன்னாத
தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா .தது.
36) தீவக அணி என்றால் என்ன?
37)
வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
5X5=25
38)அ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும்
பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
(அல்லது)
ஆ)
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிகவீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும்
ஒப்பிட்டு எழுதுக.
39) அ.உங்கள்
தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில்
சாலையில் நடந்துசெல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி, ஆவன செய்யும்படி
மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ. கொரோனா
பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் பெறோர் உற்றோர் நலன்களுக்காக உங்கள் நேரத்தினைசெலவிட்டதை
விவரித்து நண்பணுக்குக் கடிதம் எழுதுக.
40)காட்சியைக்
கண்டு கருத்தினை ஐந்து தொடர்களில் எழுதுக.
42)
அ.அன்றாட வாழ்வில் இன்சொல் பேசுவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுக.
(அல்லது)
ஆ)மொழி பெயர்க்க:
Among
the five geographical divisions of the Tamil country in Sangam literature, the
Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands.
The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal
rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight
was considered indispensible by the ancient Tamils. (குறிப்பு:
செவிமாற்றுத் திறனாளருக்கான மாற்று வினா)
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 3X8=24
43)அ)தமிழ்
மொழியின் தொன்மை,இலக்கிய வளம்,சொல்வளம் குறித்து விரிவான விளக்கம் தருக.
(அல்லது)
ஆ)நாட்டு விழாக்கள் -விடுதலைப் போராட்ட வரலாறு
-நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு- குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்
‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக
44)அ)பசித்தவருக்கு
உணவிடுதல் என்ற அறச்செயல், அன்னமய்யா புதிதாக வந்தவருக்கு உணவிட்ட செயலோடு ஒத்திருத்தலை
கோபல்லபுரத்து மக்கள் கதைவழி விளக்குக.
(அல்லது)
ஆ)ஒருவன் இருக்கிறான் என்ற எனும் சிறுகதையில் மனிதத்தை
வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
45)அ.குறிப்புகளைக் கொண்டு “சாலைப்பாதுகாப்பு”
என்ற என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
சாலைப்பாதுகாப்பு-உயிர்ப்பாதுகாப்பு-சாலை விதிகள்-ஊர்தி ஓட்டுநருக்கான
நெறிகள்-விபத்துகளைத் தவிர்ப்போம்-முடிவுரை.
(அல்லது)
ஆ.குறிப்புகளைக் கொண்டு “மழைநீர் சேகரிப்பு” என்ற என்ற தலைப்பில் கட்டுரை
எழுதுக.
முன்னுரை-விண்நீர்
உயிர்நீர்-விசும்பின் துளி பசும்புல் துளி-மழைநீர் சேகரித்தல் நமது கடமை-முடிவுரை.