10.ஆம் வகுப்பு
தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 27-06-2022 முதல் 01-07-2022 மாதம் : ஜூன்
வாரம் : நான்காம் வாரம் வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் பாடத்தலைப்பு : 1. இரட்டுற மொழிதல்
2. உரைநடையின் அணிநலன்கள்
3.எழுத்து,சொல்
கருபொருள் :
Ø வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்
Øஉரைநடையின் அணிகலன்களை அறிந்து பயன்படுத்துதல்
@எழுத்து,சொல் இலக்கணத்தை அறிந்து கொள்ளுதல்
உட்பொருள் :
Ø தமிழழகனார் பற்றி அறிதல்
Ø தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி அறிதல்.
Ø அளபெடையின் வகைகளைத் தெரிந்து கொள்ளுதல்
Ø தொழிற்பெயர் மற்றும் அதன் வகைகளைப் புரிந்துகொள்ளுதல்
அறிமுகம் :
Ø சிலேடை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்
Ø உரைநடையில் அல்லது அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சில நயங்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
@ தமிழ், இயல் இசை நாடகம் எனமுத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடைஆகிய முச்ச ங்கங்களால்வளர்க்கப்பட்டது;
ஐம்பெருங்கா ப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
@ கடல் , முத்தினையும்அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு ,
சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான
சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;
Ø இலக்கணை,இணை ஒப்பு,எதிரிணை இசைவு, சொல்முரண், முரண்படு மெய்ம்மை
Ø அளபெடை,சொல்,தொழிற்பெயர்,வினையாலணையும் பெயர்
ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø இரட்டுற மொழிதலின் பொருளை உணர வைத்தல்
Ø தமிழும்,கடலும் ஒன்றென இரட்டுற மொழிதல்
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø உரைநடையின் அணிநலன்களைத் தற்காலச் சான்றுகளுடன் விளக்குதல்
Ø அளபெடை மற்றும் அதன் வகைகளைத் தக்க சான்றுகளுடன் மாணவர்களுக்குப் புரியவைத்தல்.
Ø தொழிற்பெயர்,வினையாலணையும் பெயர் வேறுபாட்டை மாணவர்க்கு எளிதில் விளங்குமாறு விளக்குதல்
மாணவர் செயல்பாடு :
Ø இரட்டுற மொழிதல்– பாடலை பிழையின்றி வாசித்தல்
Ø தமிழழகனாரின் சிறப்புகளை அறிதல்
@ இரட்டுர மொழிதல்- கவிதையில் உள்ள நயங்களை அறிதல்
Ø உரைநடையின் அணிநலன்கள் அறிதல்.
@ சொல் இலக்கணத்தைப்பற்றி விரிவாக அறிதல்
வலுவூட்டல் :
Ø கவிதையை மீண்டும் வாசித்தல்
Ø அன்றாய வாழ்வில் பயன்படுத்தும் மொழிக்கூறுகளைப் பற்றி உரையாடி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்
Ø சிலேடையைப்பற்றி அறிதல்
மதிப்பீடு :
Ø இரட்டுற மொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
Ø துய்ப்பதால் என்பதன் பொருள் யாது?
Ø கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?
Ø உரைநடையின் அணிநலன்கள் என்ற கட்டுரையை இயற்றியவர் யார்?
Ø அளபெடையின் வகைகளைக் கூறுக
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.