7 TH STD NOTES OF LESSON PLAN -AUGUST 1 WEEK

  7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 01-08-2022 முதல் 05-08-2022        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.புலி தங்கிய குகை (கவிதைப்பேழை)

                                             2. பாஞ்சை வளம் (கவிதைப்பேழை)

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø கதைப்பாடல் படித்து நயங்களை  அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்க காலத்தா ய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செ ய்தியை அறியலாம்.

      மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள் மற்றும் இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

புலி தங்கிய குகை


பாஞ்சை வளம்

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  @ புலி தங்கிய குகை எனும் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது
@ புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
@ இப்பாடலை இயற்றியவர் காவற்பெண்டு.
@ தமிழர் வீரம் பற்றிய செய்திகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன.
@ பாஞ்சை வளம் என்பது கட்டபொம்மனைப் பற்றிய கதைப்பாடல் ஆகும்.
@ இது ஓர் நாட்டுப்புறப்பாடல் வடிவம்.இதைத் தொகுத்தவர் நா.வானமாமலை
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.சிற்றில்என்பதன் பொருள் என்ன?
2.புறநானூறு------- நூல்களுள் ஒன்று.

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.காவற்பெண்டு யார்? 
2.கதைப்பாடல் என்றால் என்ன ?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.மகனைப்பெற்ற வயிற்றுக்குக் கூறப்பட்ட ஒப்புமை யாது?விளக்குக
2.பசுவும்,புலியும் ஒரு துறையில்- இவ்வரியைத் தொடர்ந்து விளக்குக
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

நாட்டுப்புறக் கதைப்பாடல்களை எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

:கதைப்பாடல் படித்து நயங்களை  அறிதல்

       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை