7 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JULY WEEK 2

   7. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு 

வகுப்பு: 7.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: விரிவானம் (காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்)

நாள் : ஜூலை இரண்டாம் வாரம்

             (11-07-2022 முதல் 15-07-2022 வரை)


1.அறிமுகம்:

காட்டில் பயணம் செய்த அனுபவம் யாருக்கேனும் உண்டா? என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:
காடு

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
  @ காடு எனும் பாடலை இயற்றியவர் சுரதா ஆவார்.இவரது இயற்பெயர் இராசகோபாலன்.பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் தனதுபெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்
@ காடு எனும் பாடற்பகுதியில் காட்டின் நன்மைகள் மற்றும் காட்டில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை ஆகியனவற்றை விளக்கியுள்ளார்
@ மரங்களின் நன்மைகள் ,மற்றும் அவை அழிதலால் மனிதகுலத்திற்கு ஏற்படும் இழப்புகள் உள்ளிட்டவை இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளன

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • காடு எனும் பாடலை இயற்றியவர் யார்?

  • சுரதா என்பதன் விரிவாக்கம் என்ன?

  • கொல்லிப்பாவை என்ற இதழை நடத்தியவர் யார்?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

9.தொடர்பணி:

  • காட்டின் நனமைகளை எழுதிவரச்சொல்லுதல்.

 கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை  


கற்றல் விளைவு

@ காடுகளும்,காட்டுயிரிகளும் நாட்டின் முதுகெலும்பு என்பதைப் புரிந்துகொள்ளுதல்

@ செய்யுளின் வருணனைகளை படித்துச் சுவைத்தல்

மற்ற வகுப்புகளுக்கான பாடக்குறிப்புகளைப்பெற


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை