8 TH STD TAMIL HALF YEARLY MODEL QUESTION PAPER-2022

அரையாண்டுப் பொதுத் தேர்வு-மாதிரி வினாத்தாள்- 2022

  8.ஆம் வகுப்பு                                         தமிழ்                                          மதிப்பெண்கள்: 100

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                          15X1=15                                               

1)கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு                                                                                                         அ.வீரம்  ஆ.அச்சம் இ.நாணம்  ஈ.மகிழ்ச்சி                                                                                                         2)நீலகேசி கூறும் நோயின் வகைகள்                                                                                                                         அ.இரண்டு  ஆ.மூன்று  இ.நான்கு   ஈ.ஐந்து

3)செஞ்சொல் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது                                                                            அ)கடல் ஆ)ஓடை  இ)குளம்   ஈ)கிணறு

4)பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.

அ) கல்வெட்டுகள் ஆ) செப்பேடுகள் இ) பனையோலைகள் ஈ) மண்பாண்டங்கள்

5)கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம்

அ.படித்து  ஆ.எழுதி  இ.வந்து  ஈ.பார்த்த

6)ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்

அ.திருச்சி  ஆ.மதுரை   இ.சென்னை  ஈ.கோவை

7)தோட்டத்தில் தம்பி ஊன்றிய-----எல்லாம் முளைத்தன

அ) சத்துகள் ஆ) முத்துகள் இ) பித்துகள் ஈ) வித்துகள்  

8)இதம்+தரும் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

அ)இதம் தரும்   ஆ)இததரும்   இ)இதந்தரும்  ஈ)இதத்தரும்                                                                         9) சேரர்களின் தலைநகரம் அ)புகார்    ஆ)மதுரை    இ)வஞ்சி   ஈ)காஞ்சி

10)உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.

அ)தலை வலி ஆ) காய்ச்சல் இ) புற்றுநோய் ஈ) இரத்தக் கொதிப்பு

11)எட்டாம் வேற்றுமை------எனவும் அழைக்கப்படும்.

அ.எழுவாய்  ஆ.செயப்படுபொருள்  இ.விளி  ஈ.பயனிலை

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்                                                                                     திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்

12.இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ.பெரியபுராணம்   ஆ.தொல்காப்பியம்  இ.கலித்தொகை  ஈ.இராவண காவியம்

13.இப்பாடலை இயற்றியவர்

அ.தொல்காப்பியர்  ஆ.ஔவையார்   இ.மருதனார்  ஈ.குடபுலவியனார்

14.வளி என்பதன் பொருள்

அ.உடல்  ஆ.மரம் இ.காற்று   ஈ.உறவினர்

15. நிலம், தீ, நீர்,வளி, விசும்பு ஆகிய ஐந்தும்-----என்ற தொகைச்சொல்லால் குறிக்கப்பெறும்.

அ.ஐம்பொறி   ஆ.ஐம்புலன்   இ.ஐம்பூதம்   ஈ.ஐந்திறம்


PDF வடிவில் பதிவிறக்க


பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                       பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16)சோழனின் யானைப்படையைக் கண்ட வீரரின் செயல்கள் யாவை?

17)உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

18)மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

19)சான்றோர்க்கு அழகாவது எது?

20)மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

21)”இறைக்கு” என முடியும் திருக்குறளை எழுதுக.

                                                                    பிரிவு-2                                            5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22)சந்திப்பிழை என்றால் என்ன?

23)எழுத்துகளின் பிறாப்பு என்றால் என்ன?                                                                                              24)சரியான மரபுச்சொல்லால் நிரப்புக:

        அ.தண்ணீர்---(குடி/பருகு)     ஆ.சுவர்-----(கட்டு/எழுப்பு)

25)கலைச்சொல் தருக : அ.PHONEME ஆ.LOOM

26) வினைமுற்று என்றால் என்ன?.

27) மரபுத் தொடரின் பொருளை எழுதுக : உள்ளங்கை நெல்லிக்கனி போல

28)பிழை திருத்தி எழுதுக : பகைவர் நீவீர் அல்லர்

            பகுதி-3(மதிப்பெண்:18)                 

                                                                  பிரிவு-1                                             2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29)நோய்கள் பெருகக் காரணம் என்ன?

30) மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள் குறித்து எழுதுக.

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

     உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், மவரிசையில் ஆறு எழுத்துகளும், , , நஎன்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், , , வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார்;நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

1. ஓரெழுத்தொருமொழிகள் மொத்தம் எத்தனை?

அ.42   ஆ.45   இ.47   ஈ.49

2. ‘ம’ வரிசையில் எத்தனை எழுத்துகள் ஓரெழுத்தொருமொழியாக வரும் ?

அ.7   ஆ.6   இ.8    ஈ.5

3.ஓரெழுத்தொருமொழிகளைப் பற்றிக் கூறிய நூலாசிரியர் யார்?

அ.வள்ளுவர்  ஆ.கம்பர்   இ.நன்னூலார்  ஈ. இளங்கோவடிகள்

                                                                      PDF வடிவில் பதிவிறக்க

                                                                                   பிரிவு-2                                                   2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

33)தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

34)அ.”உடலின்”- எனத்தொடங்கி “பெறுவாயே” என முடியும் பாடலை அடிமாறாமல் எழுதுக.                                                                                          

                                                           பிரிவு-3                                                 2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)அன்மொழித்தொகையைச் சான்றுடன் விளக்குக.

36)எழுவாய் வேற்றுமையைச் சான்றுடன் விளக்குக.

37)தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                   5X5=25

38)அ)ஒடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

                                                            (அல்லது)

ஆ)கல்லாமையின் இழிவை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

39)அ. விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக

(அல்லது)

ஆ.உங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சாலைப்பழுதை நீக்குமாறு நகராட்சித் தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக

40) பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

    நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவைவளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்கமுடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்டநூலகம் கிளைநூலகம் ஊர்ப்புறநூலகம் எனக்குப் பிடித்தநூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவேநூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம் .

41)நீர்நிலைகளைத் தூய்மையாக வைத்திருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்?

42)பின்வரும் படத்தைப்பார்த்து உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதுக.


பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                  3X8=24

43)அ)எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

(அல்லது)

   ஆ)கொங்குநாட்டு வணிகம் குறித்து நீங்கள் அறிந்த செய்திகளைத் தொகுக்க.

44)அ) காலம் உடன் வரும் கதையைச் சுருக்கி எழுதுக.

(அல்லது)

    ஆ)திருக்குறளைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.

45)அ.கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

(அல்லது)

    ஆ. "நான் விரும்பும் கவிஞர்" என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

PDF வடிவில் பதிவிறக்க 


 

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை