9 TH STD TAMIL HALF YEARLY MODEL QUESTION PAPER-2022

 

PDF வடிவில் பதிவிறக்க

அரையாண்டுத் தேர்வு-மாதிரி வினாத்தாள்(2022-2023)

      9.ஆம் வகுப்பு                                  தமிழ்                                          மதிப்பெண்கள்: 100

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                              

1)நரி விருத்தம் எனும் நூலை இயற்றியவர்-----

அ.இளங்கோவடிகள்  ஆ.திருத்தக்க தேவர்  இ.கம்பர் ஈ.குமரகுருபரர்

2)சமணர் படுக்கைகள் சிற்பங்களாகக் காணப்படும் இடம்----

அ.திருச்சி   ஆ.கோவை  இ.மதுரை  ஈ.ஈரோடு

3)ஞானம் என்ற சொல்லின் பொருள் யாது?

அ.கோபம்  ஆ.அறிவு  இ.ஆற்றல்  ஈ.வேகம்

4)தமிழ்நாடு அரசு கிராமப்புறமாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத்தேர்வு எது?

அ.தேசிய திறனறித் தேர்வு  ஆ.ஊரகத் திறனறி தேர்வு

இ.தேசிய திறனறி கல்வி உதவித்தொகைத் தேர்வு  ஈ.ஊரகத் திறனறி தேர்வு

5) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை

அ.கண்ணி  ஆ.சிற்றிலக்கியம் இ.குறள்   ஈ.சங்க இலக்கியங்கள்

6) மல்லல் மூதூர் வயவேந்தே – என்பதில் மல்லல் என்பதன் பொருள்

அ.வண்டு ஆ.வளம்   இ.பொய்கை  ஈ.குற்றம்

7) ஐம்பெருங்குழு,எண்பேராயம்-சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

அ.திசைச்சொற்கள் ஆ.வடசொற்கள்  இ.உரிச்சொற்கள்  ஈ.தொகைச்சொற்கள்

8) முத்தொள்ளாயிரம் எழுதப்பட்டுள்ள பாவகை

அ)வெண்பா  ஆ)ஆசிரியப்பா  இ)கலிப்பா  ஈ)வஞ்சிப்பா

9) வற்றல் தின்றான் என்பது-----ஆகுபெயர்

அ.பொருள்  ஆ.இடம்  இ.சினை   ஈ.தொழில்

10) மரவேர் என்பது-----புணர்ச்சி

அ.இயல்பு   ஆ.தோன்றல்  இ.திரிதல் ஈ.கெடுதல்

11) அடுபோர் என்பதன் இலக்கணக்குறிப்பு

அ.வினைத்தொகை  ஆ.பண்புத்தொகை இ.வேற்றுமைத்தொகை  ஈ.வியங்கோள் வினைமுற்று

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

சியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் .

12)இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?

அ.தமிழோவியம் ஆ.தமிழ்விடு தூது இ.மணிமேகலை  ஈ.குறம்

13)இப்பாடல் எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?

)தொடர்நிலைச் செய்யுள் )புதுக்கவிதை  )சிற்றிலக்கியம்  )தனிப்பாடல்

14)எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க

அ.குறம்-கொடுப்பாய்க்கு ஆ.வசியும் வளனும் இ.குறம்-சிந்து  ஈ.பசியும் வசியும்

15)சுரக்க-என்பதன் இலக்கணக்குறிப்பு

அ.வினைத்தொகை  ஆ.பண்புத்தொகை இ.வேற்றுமைத்தொகை  ஈ.வியங்கோள் வினைமுற்று

PDF வடிவில் பதிவிறக்க


பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                   பிரிவு-1                                               4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ) இடைச்சொற்களே மொழிப்பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.

ஆ)தமிழர் வரலாறு பண்பாட்டுத் தொன்மை வாய்ந்தது.

17)பகுத்தறிவு என்றால் என்ன?

18)இணையவழியில் இயங்கும் மின்னனு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தனை எழுதுக.

19)கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

20) பழமணல் மாற்றுமின்:புதுமணல் பரப்புமின் -இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

21) ‘உடைத்து’  என முடியும் திருக்குறளை எழுதுக.

                                                     பிரிவு-2                                            5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22)வல்லினம் மிகும் இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.

23)வீணையோடு வந்தாள்,கிளியே பேசு-தொடரின் வகையைச் சுட்டுக.

24)பொருள் எழுதித் தொடர் அமைக்க : புல்-புள்

25)மரபு இணைச் சொற்களைத் தொடரில்அமைத்து எழுதுக.

     1. மேடும் பள்ளமும் 2. நகமும் சதையும்

26) ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

      எண்ணெய் ஊற்றி----விளக்கு ஏற்றியவுடன்,இடத்தை விட்டு-----

27) உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

         கயல் விழி உணவு சமைத்தாள் ; உண்டவர் அமுது போன்ற சுவையில் நீந்தினர்.

28) அகராதியில்காண்க.  அ.இயவை, ஆ.சந்தப்பேழை

PDF வடிவில் பதிவிறக்க

              பகுதி-3(மதிப்பெண்:18)  

                                                      பிரிவு-1                                                 2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) குறிப்பு வரைக: டோக்கியோ கேடட்ஸ்.

30)சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

   தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

அ. போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

ஆ. ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

இ. போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?

                                                          பிரிவு-2                                                2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32)பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

33)ஆண்டாளின் கனவுக்காட்சிகளை எழுதுக.

34)அ.ஒன்றறிவதுவே- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக   (அல்லது)

ஆ.தித்திக்கும் - எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

                                                                          பிரிவு-3                                        2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)பண்பாகுபெயர்,தொழிலாகுபெயர்- விளக்குக.

36)தன்வினை,பிறவினை-எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்துக.

37)அகழ்வாரைத்  தாங்கும் நிலம்போலத் தம்மை

     இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                    - இக்குறட்பாவில் பயின்று வந்த அணியை விளக்குக

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:

38)அ)பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.

                                                            (அல்லது)

ஆ)தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

39)அ.சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக்கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.  

(அல்லது)

ஆ.உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

40)அ)நயம் பாராட்டுக:-

         

வயலிடைப்புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்

வளைந்துசெல் கால்களால் ஆறே!

அயலுளஓடைத்தாமரை கொட்டி

ஆம்பலின் இதழ்களைவிரித்தாய்

கயலிடைச் செங்கண் கருவரால் வாளை

கரைவளர் தென்னையில் பாயப்

பெயரிடைப்பட்டவானெனத் தோன்றும்

பெருங்குளம் நிறைந்து விட்டாயே!              - வாணிதாசன்

9th_ (அல்லது)

ஆ) பொன்மொழிகளை மொழிபெயர்க்க.

      1.A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

      2.The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

      3.The biggest problem is the lack of love and charity – Mother Teresa

      4.You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam

      5.Winners don’t do different things; they do things differently – Shiv Khera

41)உங்கள் நாட்குறிப்பில் இடம்பெற்ற ஒருவாரத்திற்கான மகிழ்ச்சியான செய்திகளை தொகுத்து எழுதுக.

42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                   3X8=24

43)அ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .

(அல்லது)

   ஆ) இந்திய தேசிய இராணுவத்தில் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை நிறுவுக.

44)அ) இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லைஎன்பதைச் ‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக.

(அல்லது)

    ஆ)தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கி எழுதுக.

45)அ.பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டி தொகுப்புரை எழுதுக.

                                                                 (அல்லது)

    .சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றைஎழுதுக.

PDF வடிவில் பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை