அரையாண்டுப்பொதுத் தேர்வு-2023
இராணிப்பேட்டை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஈ.சிலப்பதிகாரம் |
1 |
2. |
ஆ.3,1,4,2 |
1 |
3. |
இ.கால்டுவெல் |
1 |
4. |
அ.
கருணையன்,எலிசபெத்துக்காக |
1 |
5. |
அ.கைம்மாறு
கருதாமல் அறம் செய்வது |
1 |
6. |
அ.வேற்றுமை
உருபு |
1 |
7. |
அ.வணிகக்
கப்பல்களும்,ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
8. |
அ.அருமை+துணை |
1 |
9. |
ஈ.
அங்கு வறுமை இல்லாததால் |
1 |
10. |
இ.குறிஞ்சி,மருதம்,நெய்தல்
நிலங்கள் |
1 |
11. |
ஈ.இலா |
1 |
12. |
ஆ.பெருமாள்
திருமொழி |
1 |
13. |
அ.குலசேகர
ஆழ்வார் |
1 |
14. |
இ.ஈறுகெட்ட
எதிர்மறௌப் பெயரெச்சம் |
1 |
15. |
அ.வாளால்-மாளாத |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
பெண்மை |
2 |
17 |
சித்தாளு |
2 |
18 |
சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி |
2 |
19 |
செய்யுளும்,உரைநடையும்
கலந்து எழுதப்பெறுவது. |
2 |
20 |
தினைச்சோற்றைப்
பெறுவீர்கள் |
2 |
21 |
பொருளல்
லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை
பொருள் |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
விடைக்கேற்ற வினா எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
2 |
23 |
அ.மனிதநேயம் ஆ.அமைச்சரவை |
2 |
24 |
8 வகை-சுட்டு,மறை,நேர்,வினா
எதிர் வினாதல்,ஏவல்.உற்றதுரைத்தல்,உறுவது கூறல்,இனமொழி |
2 |
25 |
நாகை,திருச்சி |
2 |
26 |
அ.மலையில்
மாலை சூடினான் ஆ.தோடு காதைத் தொட்டது. |
2 |
27 |
வா(வரு)+க
வா-பகுதி, வரு-எனத்திரிந்தது விகாரம், க-வியங்கோள் வினைமுற்று விகுதி. |
2 |
28 |
பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி,
சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி,
சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி,நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்குஅடிமைப்பட்டிருந்த சிறுமையையும்
நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட
வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன், - ம.பொ.சி.
|
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
முல்லை நிலம்-வரகு,சாமை,முதிரை ,மருத நிலம்-
செந்நெல்,வெண்ணெல் |
3 |
30 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, ஆந்திரத் தலைவர்கள் சென்னை தான் அதன் தலைநகராக இருக்க
வேண்டும் என்று கருதினர். இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் இராஜாஜி தனது
பதவியைத் துறந்தார்.அச்சமயத்தில்,செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று
முழங்கினார். |
3 |
31 |
அ.மொழிபெயர்ப்பு
ஆ.ஒருமொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது. இ.மொழிபெயர்ப்பு |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
|
33 |
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது. ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர். ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும் ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர். |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
கருவிளம் தேமாங்காய்
தேமா புளிமாங்காய் தேமா புளிமா
மலர். |
3 |
36 |
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன்உண்மையான இயல்புத் தன்மையினைக்
கேட்பவர்களின்மனம் மகிழுமாறு உரிய சொற்களை
அமைத்துப்பாடுவது தன்மையணியாகும். |
3 |
37 |
மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை பூங்கொடி- பண்புத்தொகை ஆடுமாடு -உம்மைத்தொகை ü நான்
உண்ட உணவில் காரம் கொஞ்சம் அதிகம். |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
38 |
ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் (அல்லது) ஆ) கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: ”பூமித் தாயே என்
அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” எனக் கருணையன் வேண்டினான்.
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன்
அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல் மலர்களையும் தன்
கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: என் தாய் கூறும் உண்மையான
சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில் ஒரு மணிமாலைபோல் அசைந்து அழகுற
வாழ்ந்தேன்.இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி
இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று
கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: ”எனது
மனம் பரந்த மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது.
தீயையும்,நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின்
வலியால் வருந்துவது போன்றது எனது துயரம்.துணையைப் பிரிந்த பறவையைப் போல்
நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே
விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். தனித்து
விடப்பட்ட கருணையன்: “எனக்கு
உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான்
உணர்கிறேன்.உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளை என்னால் அறிய
முடியவில்லை. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன். எனது தாய் தன்
கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு
விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே” என்று அழுது புலம்பினான் பறவைகளும்,வண்டுகளும்
கூச்சலிட்டன: நவமணிகள் பதித்த மணி
மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை மாலையாக அணிந்த கருணையன்
இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே
கூச்சலிட்டன. |
5 |
||||||||||||
39 |
ü இடம்,நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன.
அதனால் இரவில் சாலை யில்நடந்துசெல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன
செய்யும்படி மின்வாரியஅலுவலருக்குக் கடிதம் எழுதுக. மின்வாரியஅலுவலருக்குக்
கடிதம் அனுப்புநர் ப.இளமுகில், 6,காமராசர் தெரு, வளர்புரம், அரக்கோணம்-631003 பெறுநர் உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 ஐயா, பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல்
சார்பாக. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள்
வசித்து வருகின்றன. எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில்
இருள் மிகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்படுகின்றனர்.எனவே பழுதடைந்த
மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன் நன்றி!!
இப்படிக்கு,
தங்கள்
பணிவுடைய,
ப.இளமுகில்.
இடம்:அரக்கோணம், நாள்:15-10-2022.
|
5 |
||||||||||||
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
41 |
|
5 |
||||||||||||
42 |
கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி
நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாக “ கூத்து குழு “ ஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை ஆ)
|
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) ü அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை ü அரசியல் அறம் ü அறங்கூறவையம் ü போர் அறம் ü கொடை ü உதவி (அல்லது) ஆ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v தமிழ்மொழி
1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த
வேண்டும். மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்
|
8 |
44 |
ü
அ) அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று
மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü
கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü
வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü
மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü
கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து
இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று
கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். (அல்லது) வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி தான் காணப்படுகிறது.
ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து வரும் இவ்வுலகில்,
எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம் அரும்பத்தான்
செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட மேஸ்திரியாக
கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை ஒன்றில்
கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு குப்புசாமி
இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை மருத்துவமனையில்
சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும்
கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.
|
8 |
45 |
அ) நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி
பெருமை கொள்ள எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள்
விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது
நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள்
கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்காக தனியான
சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை
குடியரசுநாள் விழாவாக ஜனவரி 26இல் கொண்டாடுகிறோம். விடுதலைப்
போராட்ட வரலாறு: பதினைந்தாம் நூற்றாண்டு
காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில்
நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த
ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான
சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை ஆளத்தொடங்கினர்.இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை
ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர். எண்ணற்றோர்
சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன்,
தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன்,
சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி
ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது கடுமையான
போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது. நாட்டு
முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக
மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள்.
இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும்.
துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத
வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல்
கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப்
பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள்
மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை
நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக்
கொள்ள வேண்டும். மரம்
நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய
அறிவுறுத்தல் மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில்
மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.கல்வியறிவில் முக்கியத்துவத்தைப் பொது
மக்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், காந்தி பிறந்த தினம்,ஆசிரியர் தினம்,
குழந்தைகள் தினம், கொடி நாள், விடுதலை நாள், வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத்
தாமே முன்னின்று நடத்திய முனைய வேண்டும். (அல்லது) பொதுக்கட்டுரை: விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும் முன்னுரை: இந்தியாவில் பிறந்து
அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல்
இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில்
காண்போம். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு
பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி
ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும்
வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995
ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா
கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு
செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில்
இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது கடமை: அனைத்துக்
கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது
என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும்
மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல்
ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக
நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம்
அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் முடிவுரை: “வானை
அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும்.
இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.
|
8 |