6 TH STD TAMIL 3 RD TERM QUESTION AND ANSWERS -UNIT 2

 

6.ஆம் வகுப்பு-தமிழ்-மூன்றாம் பருவம்

வினா விடைகள்

இயல்-2 கவிதைப்பேழை- பராபரக்கண்ணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

அ) தம்முயிர் ஆ) தமதுயிர் இ) தம்உயிர் ஈ) தம்முஉயிர்

2. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------

அ) இன்புற்றிருக்க ஆ)இன்புறுறிருக்க இ) இன்புற்றுஇருக்க ஈ) இன்புறு இருக்க

3. தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------

அ) தான + என்று  ஆ)தான் + என்று இ)தா + னென்று ஈ) தான் + னன்று

4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ----------

அ) அழிவு ஆ) துன்􀁈ம் இ) சுறுசுறுப்பு ஈ) சோகம்

நயம் அறிக

பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.

எதுகை: தம் உயிர் ,செம்மையர்    

             ன்பர் , இன்பநிலை

             ல்லாரும் ,அல்லாமல்

மோனை : தானென்று , ண்டருள்

குறுவினா

1. யாருக்குத் தொண்டு செய்வேண்டும்?

விடை: னைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணைமிகுந்த சான்றோர்க்குத் தொணடு செய்வேண்டும்.

2.இன்பநிலை எப்போது வந்து சேரும்?

விடை: அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால் இன்பநிலை வந்து சேரும்.

சிறுவினா 􀁈

பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?

விடை:

ü  னைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணைமிகுந்த சான்றோர்க்குத் தொணடு செய்வேண்டும்.

ü  அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால் இன்பநிலை வந்து சேரும்.

ü  எல்லாரும் இன்பமாக வாழவேண்டும்.அதைத்தவிர வேறெதையும் நினைக்க மாட்டேன்.

சிந்தனை வினா

குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?

விடை:

ü  குளிரைத் தாங்கும் ஆடை தருவேன்

ü  உடலைக் கதகதப்பாக்க ஏதாவது சூடாகப் பருகச் செய்வேன்.

இயல்-2 கவிதைப்பேழை  நீங்கள் நல்லவர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 􀁈பரிசுபெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும்.

அ) கவலை ஆ) துன்􀁈ம் இ) மகிழ்ச்சி   ஈ) சோர்வு

2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.

அ) பேச ஆ) சிரிக்க இ) நடக்க ஈ) உழைக்க

குறுவினா

1. 􀁈பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?

விடை: கொடுப்பது பழத்தின் இயல்பு ,பெறுவது வேரின் இயல்பு.

2. உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?

விடை: ழைக்கும்போது புல்லாங்குழலாக ஆகிறோம்.

சிறுவினா

நீங்கள் நல்லவர் என்னும் இப்பாடல் விளக்கும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை:

v செய்ந்நன்றி மறவாமல் இருக்க வேண்டும்

v உழைப்பின் உன்னதம் அறிந்து செயல்பட வேண்டும்.

v சுயநலமின்றி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.கொடுப்பது நமது இயல்பாக இருத்தல் வேண்டும்.

v பிறரிடம் பேசும்போது கவனத்துடன் பேசவேண்டும்.

v குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர்கள் அனைவரும் நல்லவர்கள்.

சிந்தனை வினா

1. நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?

விடை:

ü  பேச்சைக் குறைக்க வேண்டும்

ü  மற்றவர்களைக் குறைகூறுவதைத் கவிர்க்க வேண்டும்.

ü  நமது கடமைகளில் மட்டுமே மூழ்கியிருக்க வேண்டும்

ü  அனைவருக்கும் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்

2. உங்கள் குறிக்கோளைடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.

விடை:

ü  இலக்கை முடிவுசெய்து செயல்படுதல்

ü  விடாமுயற்சியுடன் செயல்படுதல்

ü  கடமைகளில் மட்டுமே மூழ்கியிருத்தல்

ü  குறிக்கோளை அடையத் தேவையான அத்தனை முயற்சிகளையும் செய்தல். 

இயல்-2 உரைநடை உலகம்- பசிப்பிணி போக்கிய பாவை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு …………………

அ) இலங்கைத் தீவு ஆ) இலட்சத் தீவு இ) மணிபல்லவத் தீவு ஈ) மாலத்தீவு

2. மணிமேகலைகையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ………………

அ) சித்திரை ஆ) ஆதிரை இ) காயசண்டிகை  ஈ) தீவதிலகை

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

அ) செடிகொடிகள் – காட்டில் செடிகொடிகள் மிகுதியாக இருக்கும்.

ஆ) முழுநிலவு நாள் – முழுநிலவுநாளில் நிலவொளி மிகுந்திருக்கும்.

இ) அமுதசுரபி – ஆதிரை அமுதசுரபியில் உணவிட்டார்

ஈ) நல்லறம் – மணிமேகலை நல்லறத்தைக் கடைப்பிடித்தார்

குறுவினா

1. அமுதசுரபியின் சிறப்பு யாது?

விடை: அமுத சுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கப் பெருகிக்கொண்டே இருக்கும்.

2. ‘கோமுகி“ என்பதன் பொருள் யாது?

விடை:  பசுவின் முகம்போல் இருக்கும் பொய்கை

சிறுவினா

1. மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?

விடை:  எங்குபார்த்தாலும் வெண்மணல் குன்றுகள்,பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்களின் இடையே பொய்கைகள் என மிக அழகாகக் காட்சியளித்தது.

2. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?

விடை :

ü  சிறையில் உள்ளவர்களுக்கு நன்மை தீமைகளைப் பற்றி அறிஞர்களைக் கொண்டு எடுத்துரைக்க வேண்டும்.

ü  பெற்றோரை மதித்தல்,முதியோரைப் பாதுகாத்தல்,உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்று வேண்டினார்.

சிந்தனை வினா

அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?

விடை : பிறருக்கு உதவுதல், மூத்தோரை மதித்தல், வாய்மை, காலந்தவறாமை. 

இயல்-2 விரிவானம் -பாதம்

முன்னுரை:

    மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி அவர் பசியால் வாடிக்

 கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திர காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார்

 அதன் கதையை காண்போம்.
மாரி:
      திரையரங்கு வாசலில் அவர் காலடி தைத்துக் கொண்டிருப்பவர். அன்றைக்குப்

 பலத்த மழை. தேநீர் குடிப்பதற்கு கூட காசு இல்லை. அன்றுதான் அந்த அதிசயம்

 நடந்தது.


சிறுமியின் காலனி:

       திரையரங்கின் வலப்புற சந்துலிருந்து சிறுமி ஒருத்தி அவர் அருகில் வந்து ஒரு

 காலணியை கொடுத்து தைத்து வைக்கும்படி கூறிவிட்டுச் சென்றாள். காலனி குடித்து

 விட்டுச் சென்ற சிறுமி மாலை ஆகியும் வரவில்லை.


மாரியின் ஏமாற்றம்:
      மாரி அடுத்த நாளும் அந்த காலணியைத் துடைத்து திரையரங்குக்குக் கொண்டு

 சென்றார். அன்றும் அச்சிறுமி காலணியை வாங்க வரவில்லை. இப்படியே பல

 நாட்கள் கழிந்தன.


மாரியின் மனைவி:
       மாரியின் மனைவி ஒருநாள் அந்த காலணியை அணிந்து பார்த்தார். அளவில்

 சிறியதாக இருந்தாலும் அது அவரது கால்களுக்குப் பொருந்தியது. சிறுமியின்

 காலணி  அவரது மனைவிக்கு பொருந்தியதை எண்ணி வியந்தார்.

காலணி, செல்வம் சேர்த்தது:

      அக்காலணியை அணிந்தபோது ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்தியது.இதை

 அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விநோதமான காலணியை அணிந்து பார்த்து

 விட்டுச்சென்றனர். காலப்போக்கில் மக்கள் காலணியை அணிந்து பார்க்கப் பணம்

 தரத்தொடங்கினர்.மாரியிடம் செல்வம் பெருகியது.

சிறுமி மீண்டும் வந்தாள்:

     தனது செல்வ வாழ்விற்குக் காரணமான அச்சிறுமியை ஒருமுறையேனும் பார்க்க

 வேண்டும் என்று மாரி விரும்பினார்.ஒருநாள் இரவு காலணியைக் கொடுத்த அந்தச்

 சிறுமி சற்று வளர்ந்த நிலையில் மாரியிடம் காலணியைக் கேட்க,மாரியும் தந்தார்.

 ஆனால் அவளிடம் இருந்த பழைய காலணி சரியாக இருந்தது. மாரியிடம் இருந்த

 காலணி அவளது மற்றொரு பாதத்திற்குப் போதவில்லை.

முடிவுரை:

   நம்முடைய எண்ணங்களை பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது.

நாம் மகிழ்ச்சி தரும் எண்ணங்களை நினைத்து வாழ்ந்தால் நமக்கு மகிழ்ச்சி நிறைந்த

 வாழ்க்கையே கிடைக்கும். துன்பம் தரும் எண்ணங்களை நினைத்து

 வாழ்கின்றவர்களுக்கு துன்பமான வாழ்க்கையே கிடைக்கும்.

இயல்-2 கற்கண்டு -பெயர்ச்சொல்

சரியான விடையை த் தே ர்ந்தெ டுத்து எழுதுக.

1. இடுகுறிப்பெ யரை வட்டமிடுக.

அ)பறவை ஆ) மண் இ) முக்காலி ஈ) மரங்கொத்தி

2. காரணப்பெயரை வட்டமிடுக.

அ) மரம் ஆ) வளையல் இ) சுவர் ஈ) யானை

3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

அ) வயல் ஆ) வாழை இ) மீன்கொ த்தி ஈ) பறவை

குறுவினா

1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?

விடை: பெயர்ச்சொல் 6 வகைப்படும்.

அவை:

1. பொருட்பெயர்

2. இடப்பெயர்

3. காலப்பெயர்

4. சினைப்பெயர்

5. பண்புப்பெயர்

6.தொழிற்பெயர்

2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன ?

விடை: நம் முன் னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு

 வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.

   (எ.கா.) மண், மரம், காற்று

3. காரணப்பெயர் என்றால் என்ன ?

விடை: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர்.

 இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர்

 எனப்படும்.

(எ.கா.) நாற்காலி, கரும்பலகை

சிறுவினா

1. அறுவகைப் பெயர்ச்சொ ற்களை எழுதுக.

விடை:

1. பொருட்பெயர்

2. இடப்பெயர்

3. காலப்பெயர்

4. சினைப்பெயர்

5. பண்புப்பெயர்

6.தொழிற்பெயர்

2. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

விடை:

1.காவியா புத்தக ம் படித்தாள் - பொருட்பெயர்

2.காவியா பள்ளிக்குச் சென்றாள் - இடப்பெயர்

3. காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்

4.காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்

5. காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெ யர்

6. காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

இயல்-2 மொழியோடு விளையாடு

குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக.

    நாய்க்குட்டி-குழிக்குள்–கத்தும் சத்தம் –முகிலன் –முதலுதவி –பால் –தூங்கியது – வாலாட்டியது.

தலைப்பு: அன்பு

    அன்று ஒரு நாள் மாலைப் பொழுதில் முகிலன் தெருவில் நடந்து சென்று

கொண்டிருந்தான். அங்கு  ஒரு நாய்க்குட்டி கத்தும் சத்தம் கேட்டது. அவன் சுற்று

முற்றும் பார்த்தான் ஆனால், அவன் கண்ணில் நாய்க்குட்டி படவே இல்லை.

ஆனாலும், சத்தம் கேட்டது. அவன் அருகில் உள்ள குழிக்குள் எட்டிப் பார்த்தான். கத்தும்

 சத்தம் அங்கிருந்துதான் வந்தது. அதில் ஒரு நாய்க்குட்டி விழுந்து கிடந்தது. அதன்

 மேல் சிறிது அடிபட்டிருந்தது. அதனைக் கண்ட முகிலன் அந்தக் குட்டியை வெளியே

 எடுத்து அதற்கு முதலுதவி செய்தான் அந்தக் குட்டிக்கு உரிமையாளர் யாரும் அருகில்

 இல்லாமையால் அந்தக் குட்டியைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று பால் ஊற்றினான்.

அந்த நாய்க்குட்டியும் வயிறாரக் குடித்த பின் அங்கேயே தூங்கியது. சிறு நேரத்திற்குப்

பின் எழுந்து தன்னைப் பாதுகாத்த முகிலனைப் பார்த்து வாலாட்டியது.

அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக.

1. கருணை-இரக்கம்

2. அச்சம் -பயம்

3. ஆசை – விருப்பம்

கீழ்க்காணும் பெயர்ச்சொற்களை அகர வரிசையில் எழுதுக.

    பூனை , தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை: ஆசிரியர்,ஓணான்,கிளி,தேனி,தையல்,பழம்,பூனை,மனிதன், மாணவன் ,மான்,வௌவால்

பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.

1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர் -  சினைப்பெயர்

2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும் - தொழிற்பெயர்.

3. குழந்தை தெருவில் விளையாடியதுஇடப்பெயர்

4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார் - பொருட்பெயர்

5. மாலை முழுதும் விளையாட்டுகாலப்பெயர்

6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்  - பண்புப்பெயர்

பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.

விடியலில் துயில் எழுந்தேன்  காலப்பெயர்

இறைவனைக் கைதொழுதேன்  -  சினைப்பெயர்

நான் மதுரைக்குச் சென்றேன்  இடப்பெயர்

புத்தகம் வாங்கி வந்தேன்  - பொருட்பெயர்

கற்றலைத் தொடர்வோம் இனி  - தொழிற்பெயர்.

நன்மைகள் பெருகும் நனி  - பண்புப்பெயர்

கீழ்க்காணும் தலைப்பில் கட் டுரை எழுதுக.



ட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க .

1.வாய்மையே வெல்லும்

2.தீதும் நன்றும் வாரா

3.யாதும் ஊரே யாவரும் கேளிர்

 சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

1. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.

3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.

4. அமுதசுரபியைப் பெற்றாள்.

5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.

விடை:

1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.

2. அமுதசுரபியைப் பெற்றாள்.

3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.

4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.

5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக.

1. அரம் – அறம்   

ü  அரம் கூர்மையாக இருந்தது

ü  அறம் செய்தல் மனிதருக்கு அழகு

2. மனம் – மணம்

ü   மனம் – மனம் என்பது உள்ளத்தைக் குறிக்கும்.

ü  மணம்- பூவின் நறுமணம் நன்றாக இருந்தது.

இருபொருள் தருக.

(எ.கா.) ஆறு - நதி

ஆறு - எண்

1. திங்கள் – நிலா,கிழமை,மாதம்

2. ஓடு  - ஓடுதல்,மண் ஓடு

3. நகை – அணிகலன்,சிரிப்பு

ட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.

விடை:

1.     மாலையில் விளையாடுவோம்.

2.   பிறருக்கு உதவி செய்வோம்.

3.    பெரியோரை வணங்குவோம்.

4.    நூல் பல கற்போம்.

5.   உடற்பயிற்சி செய்வோம்.

6.   அதிகாலையில் எழுவோம்.

இயல்-2 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.

அ) பகை ஆ) ஈகை இ) வறுமை ஈ) கொடுமை

2. பிற உயிர்களின் .........................க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

அ) மகிழ்வை ஆ) செல்வத்தை இ) துன்பத்தை ஈ) பகையை

3. உள்ளத்தில் ..................... இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

அ) மகிழ்ச்சி  ஆ) மன்னிப்பு  இ) துணிவு  ஈ) குற்றம்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

வறியார்க்கு ஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்

குறியெ திர்ப்பை உடைத்து நீரது.

விடை:

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை  நீரது உடைத்து.

எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்

மாணாசெய் தலை யாமை.

விடை:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய்  யாமை தலை .

குறுவினா

1. அறிவின் பயன் யாது?

விடை: பிற உயிரின் துன்பத்தை தமது துன்பம்போல் எண்ணுதல்

2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?

விடை: தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண் டும்.

3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?

விடை: இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச்     செய்பவை ஆகும்.

பின்வரும் நிகைழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குள் எதுவெனக் காண்க

     நிறைமதி அவளுடைதோழிகளுடன் பூங்கைாவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக்

காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து தான்

கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் 􀁈பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே

பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

  ஆகுல நீர பிற.

2. னைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

    மாணா செய்யாமை தலை.

3. குத்துண்டு  ல்லுயிர் ஓம்புதல் நூலோர்

    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

விடை:

    குத்துண்டு  ல்லுயிர் ஓம்புதல் நூலோர்

    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

 

 PDF வடிவில் பதிவிறக்க

 

 

 

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை