6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 2 ND WEEK

   6 ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 09-01-2023 முதல் 13-01-2023         

மாதம்        ஜனவரி    

வாரம்     :   இரண்டாம் வாரம்  

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :   தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.வேலுநாச்சியார்

                                             2.நால்வகைச்சொற்கள்

1.கற்றல் நோக்கங்கள்   :

   @ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கை அறிந்துகொள்ளுதல்.

   @ சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • விடுதலைப் போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்களில் ஒருவரைப் பற்றி அறிவோம் வாருங்கள்” என்று கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

  • நம் அன்றாட வாழ்வில் பேசக்கூடிய அனைத்துச் சொற்களும் பொருள் தரக்கூடியவையா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள்கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • துணைப்பாடப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

வேலுநாச்சியார்


நால்வகைச்சொற்கள்

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர்.

  •  முத்து வடுகநாதர் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு வேலு நாச்சியார் அரசு பொறுப்பை ஏற்றார்.

  • தாண்டவராயன் மற்றும் மருது சகோதரர்கள் வேலு நாச்சியாருக்கு தளபதிகளாகச் செயல்பட்டனர்.

  • மைசூர் மன்னர் ஹைதர் அலி வேலு நாச்சியாருக்கு படைகளை அனுப்பி உதவினார்.

  •  குயிலி என்ற பெண் வேலு நாச்சியாரின் படைக்குத் தலைமை தாங்கினார். உடையாள் எனும் பெண் வேலுநாச்சியாருக்காக  உயிரையே துறந்தாள்.

  • இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல்,இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.வேலுநாச்சியாரின் கணவர் யார்?
2.சொல்------வகைப்படும்.
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.வேலுநாச்சியாருக்கு உதவி செய்த அரசர் யார்? என்ன உதவி செய்தார்?
2.சொற்களின் வகைகளை எழுதுக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.பெயர்ச்சொற்களைப்பற்றி விளக்கி எழுதுக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

அன்றாட வாழ்வில் பயன்படும் சொல் வகைகளைத் தொகுக்க

12.கற்றல் விளைவு:

   @ 610 - பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை

 (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள்

 போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான

 கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

             @ 620 - பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான

 சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப் 

 பயன்படுத்தி எழுதுதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை