6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 3RD WEEK

    6 ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 18-01-2023 முதல் 20-01-2023         

மாதம்        ஜனவரி    

வாரம்     :   மூன்றாம் வாரம்  

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :   தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.பராபரக்கண்ணி

1.கற்றல் நோக்கங்கள்   :

   @ எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல்,அனைவருக்கும் உதவி செய்தல் போன்ற நற்சிந்தனைகளைப் பெறுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • உதவி செய்வது யாருக்கெல்லாம் பிடிக்கும் என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

பராபரக்கண்ணி

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

  • அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

  • எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்கமாட்டேன்.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.பராபரக் கண்ணியை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.கண்ணி என்பது யாது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களைப்பற்றி விளக்கி எழுதுக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

1.வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களைப்பற்றி விளக்கி எழுதுக.

12.கற்றல் விளைவு:

   @ 612-பல வடிவங்களில் எழுதப்பட்ட  இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்றஇறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்

         

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை