7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 26-06-2023 முதல்01-07-2023
மாதம் : ஜூன்
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : கவிதைப்பேழை (காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்)
1.கற்றல் நோக்கங்கள் :
@ செய்யுளின் வருணனைப் பகுதிகளைப் படித்துச் சுவைத்தல்
Ø காடுகளும் காட்டு உயிர்களும் நாட் டின் உயிர்நாடி என்பதைப் புரிந்துகொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) @
காட்டில் பயணம் செய்த அனுபவம் யாருக்கேனும் உண்டா? என்ற வினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
5.மனவரைபடம் :
@ காடு எனும் பாடலை இயற்றியவர் சுரதா ஆவார்.இவரது இயற்பெயர் இராசகோபாலன்.பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் தனதுபெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்
8.மதிப்பீடு:
காடு மனிதர்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பாடப்பகுதிகளில் இடம்பெற்ற காட்டின் பயன்பாடுகளை எழுதிவரச் செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 709 - ஒன்றைப் படித்து முழுமையான பொருளை உணர்ந்து அதன் பயன்பாட்டினை கூறுதல்
Ø 701 - பல்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல்
8 7.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇