8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 12-06-2023 முதல் 17-06-2023
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.உரைநடை உலகம் (தமிழ் வரிவடிவ வளர்ச்சி)
2.விரிவானம் (சொற்பூங்கா)
1.கற்றல் நோக்கங்கள் :
@ தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலைகளை அறிதல்
@ ஓரெழுத்து ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு சொல்லாட்சித் திறனை வளர்த்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு பதிவிறக்கம் செய்யலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# மனிதன் பேசத்தொடங்கும் முன் தனது எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்தினான் என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
# ஓரெழுத்தொருமொழிகள் சிலவற்றைக்கூறி,அவற்றுக்கு விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø எழுத்துகள் தொடக்கத்தில் படிப்படியாகத் தோற்றம் பெற்றன.அச்சுக்கலையே வரிவடிவம் விரைவாக வளர்ச்சிபெற உதவியது. வட்டெழுத்து,கண்ணெழுத்து முதலியன எழுத்துகளின் தொடக்கநிலையாக இருந்தன. வரி வடிவத்தில் காலப்போக்கில் உருவமாற்றமும்,சீர்திருத்தமும் ஏற்பட்டது.
Ø உயிரெழுத்து வரிசையில் 6 எழுத்துகளும், உயிர்மெய் வரிசையில் 36 எழுத்துகளும் ஓரெழுத்தொருமொழிகளாகும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சியைப் படிப்படியாக விளக்குதல்
Ø எழுத்து சீர்திருத்தஙகள் வரிவடிவ வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின எனபதை உணர்த்துதல்
Ø உரைப்பகுதியை உரிய ஏற்ற இரக்கத்துடன் படித்துக்காட்டுதல்
Ø ஓரெழுத்தொருமொழிகளின் பொருளை மாணவர்களுக்குக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø மாணவர்கள் தமிழ் வரிவடிவ வளர்ச்சி எவ்வாறு படிப்படியாக நிகழ்ந்துள்ளது என உணர்தல்.
Ø எழுத்துச்சீர்திருத்தததைப் பற்றி அறிதல்
@ எழுத்துகளின் உருவமாற்றத்தைப் பற்றி அறிதல்
@ ஓரெழுத்தொருமொழிகளின் பொருளறிதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
தமிழ்மொழி வாழ்த்தை இயற்றிவர் யார்?
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?
தமிழ்மொழி மரபு பாடல் எந்நூலில் உள்ளது?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 803- படித்தவற்றைப் பற்றி சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்துதல்
@ 814 - படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில்கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்.
@ 813- தேவைப்படும் பார்வை நூல்களாகிய அகராதி, கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் நிலவரைபடம், இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். (பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.)
திறன்கள்:
@ படித்தல்,பேசுதல்
8.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇