👉 சில மாவட்டங்களில் முதல் இடைப்பருவத்தேர்வு தொடங்க இருப்பதால், தேவையான மாவட்ட ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். முதல் இடைப்பருவத்தேர்வு நடைபெறும் மாவட்ட ஆசிரியர்கள், தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரத்திற்குரிய தேதியை மாற்றி எழுதிக்கொள்ளவும். பாடங்கள் விடுபடாமல் தொடர்ச்சியாக மாதிரி பாடக்குறிப்புகள் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப மாதிரி பாடக்குறிப்புகளை மாற்றி எழுதிக்கொள்ளலாம்.
👉 முதல் இடைப்பருவத்தேர்வு நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் திருப்புதல் திட்டத்தை எழுதிக்கொள்ளலாம். (மாதிரி வினாத்தாட்கள் தமிழ்ப்பொழில் புலனத்தில் பதிவிடப்படும்)
👉👉முந்தைய மாதங்களுக்கான பாடக்குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்.
10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 07-08-2023 முதல் 11-08-2023
மாதம் : ஆகஸ்டு
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.திருவிளையாடற்புராணம்
2. புதிய நம்பிக்கை
3.வினா விடை,பொருள்கோள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø கல்வி சார்ந்த கருத்துகளைச் செ ய்யுள் வா யிலாக அறியவும், சுவைக்கவும், இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.
Ø @ படித்துப் பொருள் உணர்வ துடன் கருத்துகளைத் தொகுத்து வ ரிசைப்படுத்தி எளிமையாக வழங்கும் திறன்பெறுதல்.
Ø # பொருள் கொள்ளும் முறையறிந்து செ ய்யுளின் பொருளைப் புரிந்து கொள்ளுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø திருவிளையாடல் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
# கல்வியின் அவசியம் குறித்த பழமொழிகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
# யாருக்கெல்லாம் கேள்வி கேட்பது பிடிக்கும்? என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
# இடைக்காடனார் குலேச பாண்டியனின் அவையில் பாடலைப் பாடுதல்
# பாண்டியன் இடைக்காடனாரின் பாடலை அவமதித்தல்
#இடைக்காடனார் இறைவனிடம் முறையிடல்
# இறைவன் பாண்டியனின் தவறை உணரச்செய்தல்
# கல்வி கற்கத்துடிக்கும் கருப்பினப்பெண்ணின் வாழ்க்கையில் கல்வி எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது? என்பதே “ புதிய நம்பிக்கை” என்ற சிறுகதையாகும்.
# வினா வகைகள் 6,விடை வகைகள் 8 ,பொருள்கோள் வகைகள் 8
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø ஆசிரியர் குறிப்பை விளக்குதல்
Ø நூல்வெளி பகுதியை விளக்குதல்
Ø பாடற்கருத்தை நயத்துடன் விளக்குதல்
# விரிவானப்பகுதியைச் சுருக்கி ,எளிமையாக மாணவர்க்குப் புரியும் வகையில் விளக்குதல்
# இலக்கணப் பகுதியைத் தகுந்த நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
திருவிளையாடற் புராணம்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
Ø 1024- புராண இலக்கியத்தின் மொழி, தொடர் அமைப்புகளை அறிதல், அறிவால் பெறப்படும் சமூகம் மதிப்பு காலந்தோறும் மாறாதிருப்பதைப் படித்துச் சுவைத்தல்
Ø @ 1025- மொழி பெயர்க்கப்பட்ட நிகழ்வை, கதையைப் படித்துப் பொருள் உணர்வதுடன் கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்குதல்.
Ø # 1026- மொழியில் வினாக்கள், விடைகள், கட்டமைக்கப்படும் தன்மையறிந்து மொழியைக் கையாளுதல், பொருள் கொள்ளும் முறையறிந்து செய்யுளைப் படித்து சுவைத்தல்.
கடந்த வார 10.ஆம் வகுப்பு பாடக்குறிப்புகளைப்பெற👇👇