10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 1 ST WEEK

            10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 18-11-2024 முதல் 22-11-2024       

மாதம்        நவம்பர் 

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.ஜெயகாந்தம் 

                                            2.சித்தாளு

1.கற்றல் நோக்கங்கள்   :

     மாற்றுச்சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.

Ø      @ மனித மாண்புகளையும் விழுமியங்களை யும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல் .

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  யாருக்கெல்லாம் சிறுகதை எழுதத் தெரியும்?

      Ø கட்டடத் தொழிலாளிகள் வேலை செய்வதைப் பார்த்துள்ளீர்களா?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ படைப்பாளர் ஜெயகாந்தன் அவர்கள் பல வெளிநாட்டு விருதுகள் உட்பட இந்தியாவின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

@  படைப்புச் செம்மை காரணமாக அவரது பல படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.

@  அவரது எழுத்துப் பணி எதை நோக்கியது என்பதை விளக்க அவரே சில காரணங்களைக் கூறுகிறார்.பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஜெயகாந்தன் அவர்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

@ கட்டிடத்தொழிலாளர்க்கும் உணர்வுகள் உண்டு என அறிதல்

5.ஆசிரியர் செயல்பாடு              :

     @  தர்க்கத்திற்கு அப்பால் என்ற ஜெயகாந்தனின் சிறுகதையைக் கூறி, அவரது படைப்பாற்றல் திறத்தை மாணவர்க்கு உணர்த்துதல்

§  விருது பெற்ற ஜெயகாந்தனின் படைப்புகள்,திரைப்படமாக்கப் பட்ட படைப்புகள்,அவர் பெற்ற விருதுகள் உள்ளிட்டவற்றை ஆசிரியர் பட்டியலிட்டு விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

ஜெயகாந்தம்

சித்தாளு

7.மாணவர் செயல்பாடு:

    Ø உரைநடைப் பகுதியை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்
   Ø  செய்யுளில் காணும் அருஞ்சொற்களை அடையாளம் காணுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. இமயத்துக்கு அப்பால் என்ற கதையை இயற்றியவர் யார்?
    2. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   4.ஜெயகாந்தன் இயற்றிய சிறுகதைகள் யாவை?
   5.கணையாழி என்பது யாது?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  6.தர்க்கத்திற்கு அப்பால் என்ற கதையைச் சுருக்கமாகக் கூறுக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       @ 1045 - மாற்றுச்சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.

Ø          @ 1046 - வெவ்வேறு தளங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை இலக்கியம் மூலம் படித்தல், அது போல படைத்தல்.





கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை