6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 25-11-2024 முதல் 29-11-2024
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.மயங்கொலிகள் 2. திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø மயங்கொலி வேறுபாடு அறிந்து மொழியைச் சரியாகப் பயன்படுத்துதல்
@ திருக்குறள் மூலம் அறநெறியைக் கற்றல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø காலை- காளை என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
மயங்கொலிகள்
- ன, ண, ந எழுத்துகள்
- ல, ள, ழ எழுத்துகள்
- ர,ற எழுத்துகள்
- விருந்தோம்பல்
- கள்ளாமை
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
மயங்கொலிச்சொற்களைத் தொகுத்துவரச்செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 603 - மாணவர்கள், தாம் படித்த, பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள் எழுதுதல், கேட்ட தலைப்புகள் பற்றித் தங்களின் சொந்த நடையில் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லல், கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்
@ 620- பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்