7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 18-11-2024 முதல் 22-11-2024
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பள்ளி மறுதிறப்பு
2. ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம் பகாப்பதம்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø கதை படிக்கும் ஆர்வத்தை உருவாக்குதல்
@ மொழியில் உள்ள எழுத்துகள் சொற்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை அறிந்து பயன்படுத்துதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø நீங்கள் வருங்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
துணைப்பாடப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
பள்ளி மறுதிறப்பு
இளமை யில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும் . எந்தக் காரணத்திற்கா கவும் கல்வி கற்பதைத் தவிர்க்கக் கூடாது
42 ஓரெழுத்தொருமொழிகள் உள்ளன
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பள்ளி மறுதிறப்பு கதையை நாடக வடிவில் நடித்துக் காட்டுதல்.
12.கற்றல் விளைவு:
Ø 704 -தாங்கள் படித்தவற்றைப் பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்
@ 716 - மொழிமரபின் நுட்பமான பயன்பாட்டு கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல் சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருளை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்