7 TH STD TAMIL THIRD TERM QUESTION ANSWER UNIT-2


7.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

மூன்றாம் பருவம் இயல் - 2

புதுமை விளக்கு (பக்க எண்: 24 மதிப்பீடு) 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “இடர் ஆழி நீங்குகவே ” – இத்தொடரில் அடிக்கோ டிட்ட சொ ல்லின் பொருள்_____.

அ) துன்பம் ஆ) மகிழ்ச்சி இ) ஆர்வம் ஈ) இன்பம்

2. ‘ஞானச்சுடர் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்ப து __________.

அ) ஞான + சுடர்  ஆ) ஞானச் + சுடர்  இ) ஞானம் + சுடர்  ஈ) ஞானி + சுடர்

3. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) இன்பு உருகு  ஆ) இன்பும் உருகு  இ) இன்புருகு  ஈ) இன்பருகு

பொருத்துக.

1. அன்பு - நெய்

2. ஆர்வம் தகளி

3. சிந்தை - விளக்கு

4. ஞானம் - இடுதிரி

விடை:  1- ஆ , 2 – அ , 3 – ஈ , 4 - இ

குறுவினா

1. பொய்கை யாழ்வாரும் பூதத்தாழ்வா ரும் அகல் விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?

விடை:  பொய்கையாழ்வார் அகல்விளக்காகப் பூமியையும், பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பையும் உருவகப் படுத்துகின்றனர்

2. பொய்கை ஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?

விடை:  பொய்கை ஆழ்வார் பெருந்துன்பம் நீங்குவதற்காகப் பாமாலை சூட்டுகிறார்

சிறுவினா

பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.

விடை:  ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர்விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.

சிந்தனை வினா

பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார் .நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்      படுத்துவீர்கள்?

விடை:  நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு, ஊக்கம், கல்வி, உயிர், உண்மை ஆகியற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவேன்.

                                   அறம் என்னும் கதிர்  (பக்க எண்: 25 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகள் எப்போதும் -----------ப் பேசினார்

அ) வன்சொற்களை  ஆ) அரசியலை  இ) கதைகளை  ஈ) வாய்மையை

2. ‘இன்சொல்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

அ) இனிய + சொ ல் ஆ) இன்மை + சொல் இ) இனிமை + சொல் ஈ) இன் + சொல்

3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொ ல் __________.

அ) அற கதிர் ஆ) அறுகதிர் இ) அறக்கதிர் ஈ) அறம்கதிர்

4. ’ இளமைஎன்னும் சொல்லின் எதிர்ச்சொல் _________.

அ) முதுமை  ஆ) புதுமை  இ) தனிமை  ஈ) இனிமை

பொருத்துக.

1. விளைநிலம் - உண்மை

2. விதை - இன்சொல்

3. களை - ஈகை

4. உரம் - வன்சொல்

விடை: 1 – ஆ , 2 – இ , 3 – ஈ , 4- அ

குறுவினா

1. அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?

விடை: அறக்கதிர் விளைய உண்மையை  எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்

2. நீக்கவேண்டிய  களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?

விடை: நீக்கவேண்டிய  களை என்று அறநெறிச்சாரம் வன்சொல்லைக் குறிப்பிடுகிறது.

சிறுவினா

இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப் பாடியார் கூறுவன யாவை?

விடை:

Ø  இன்சொல்லை விளை நிலமாகக் கொள்ள வேண்டும்.

Ø  அதில் ஈகை என்னும் பண்பை விதையாகக் கொண்டு விதைக்க வேண்டும்.

Ø  வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.

Ø  உண்மைபேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.

Ø  அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.

Ø  அப்போது தான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.

Ø  இளம்வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார்.

சிந்தனை வினா

இளம் வயதிலேயே  நாம் கற்றுக்கொள்ள வேண்டிய  நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?

விடை: அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி, கோபம் கொள்ளாமை, நேர்மை.

ஒப்புரவு நெறி  (பக்க எண்: 30 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாகும் ஒருவருக்காக என்பது நெறி

அ) தனியுடமை   ஆ) பொதுவுடமை   இ) பொருளுடைமை    ஈ) ஒழுக்கமுடைமை

2. செல்வத்தின் பயன் வாழ்வு.

அ) ஆடம்பர  ஆ) நீண்ட   இ) ஒப்புரவு   ஈ) நோயற்ற

3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை-------- என்றும் கூறுவர்.

அ) மருந்து   ஆ) மருத்துவர்  இ) மருத்துவமனை   ஈ) மாத்திரை

4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்

அ) பாரதியார்  ஆ) பாரதிதாசன்  இ) முடியரசன் ஈ) கண்ணதாசன்

எதிர்ச்சொற்களைப் பொருத்துக.

1. எளிது   -  புரவலர்

2.ஈதல்  -  அரிது

3.அந்நியர்  -  ஏற்றல்

4. இரவலர்  -  உறவினர்

தொடர்களில் அமைத்து எழுதுக.

1. குறிக்கோள்  -  வாழ்க்கை குறிக்கோள் உடையது.

2. கடமைகள்   -  ஒரு குடிமகளாக நம் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம்.

3. வாழ்நாள்   -  விடை வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் குன்றக்குடி அடிகளார்

4.சிந்தித்து  -  ஒரு செயல் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.

குறு வினா

1. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?

விடை:  பொருளீட்டுவதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

2. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?

விடை: மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.

சிறு வினா

1. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?

விடை:   

v  ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு. உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே  மதிப்பிடப்படுகிறது. தரத்தைக் காட்டுகிறது.

v  ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது, உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே! சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான்.

v  அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவிசெய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.

2. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?

விடை: 

ü  ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது, அதைத் தடுப்பார் யாருமில்லை.

ü  ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம்.

ü  பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல.

ü  மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை, நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம்.

ü  ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.

சிந்தனை வினா

ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்கும் வேறுபாடு யாது?

விடை:            

Ø  உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைத்து, உதவி செய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு.

Ø  இல்லை என்று கேட்போருக்கு நாமே அவருக்குத் தேவையானதைக் கொடுப்பது உதவி ரு செய்தல். ஒப்புரவில் பெறுபவர் உறவினர். உதவி செய்தலில் பெறுபவர் ஏழைகள் அனைவரும். மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.

உண்மை ஒளி  (பக்க எண்: 15 மதிப்பீடு)

உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் கருக்கி எழுதுக

முன்னுரை:

   சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள் அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள் அக்கதைகளும் ஒன்று உண்மை ஒளி.

குருவும் சீடர்களும்

   ஜென் குருவிடம் சிலர் பாடகற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளியது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தா? பசி, தாகம், தூக்கம் ஆகியவை அனைத்து உயிர்களுக்ஒன்றே இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாதி வரும் என்று குரு சொல்லிக் கொடுத்தார். பிறகு சீடர்களிடம் "இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது" என்று எப்படி அறிவீர்கள்? என்றான்.

உண்மை ஒளி:

     அதற்கு சீடன் ஒருவன், "தொலைவில் தெரிவது குதிரையா? கழுதையா? என்பதைக் காணக்கூடிய அளவு வெளிச்சம் நான் அறிவேன்" என்றான்.மற்றொருவன். "தொலைவில் தெரிவது ஆலமரமா? அரசமரமா? என்பதைக் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்ததை நான் அறிவேன்" என்றான் இவை எல்லாம் தவறு என்றார் குரு ஒரு மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு.

குருவை மாற்றிய திருடன்

     ஒரு நாள் குரு குதிரையில் அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றாம். சாலையோரத்தில் ஒருவள் மயங்கிக் கிடந்தான் குரு அவனிடம் தண்ணீர் கொடுத்து நீ யார்? என்று கேட்க, அவன் 'பக்கத்து ஊர் செல்ல வேண்டும். பசியால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றான் குரு இரக்கம் கொண்டு அவனை குதிரை மீது அரைச்செய்தான். குதிரையை அடித்து அவள் வேகமாகச் சென்று விட்டான் அவன் திருடன் என்பதையும் தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.

திருடனுக்கு அறிவுரை!

     குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தார். குரு யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றான் அதற்கு திருடன், இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கின்றாரோ? என்று மனதில் நினைத்தான். அதற்கு குரு, நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில் மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள் என்றார்.குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.

முடிவுரை

     ஒருவரை ஏமாற்றுவது மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைக்கூட தடுக்கும் என்பதை இக்கதை மூலம் அறியமுடிகின்றது. 

அணி இலக்கணம்  (பக்க எண்: 39 கற்பவை கற்றபின்)

(பக்க எண்: 39 மதிப்பீடு)

குறுவினா

1. உருவக அணியை விளக்குக.

விடை:   உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோ ன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.

   சான்று:

       வையம் தகளியா வார்கடலே நெய்யாக

      வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய

      சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

      இடர்ஆழி நீங்குகவே

           என்று இப்பாடலில் பூமி அகல்விளக்காக வும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்ப ட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.

2. உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

விடை:

                                உருவக அணி

ஏகதேச உருவக அணி

இரு பொருட்களையும் உருவகப்படுத்துதல்

ஒன்றை உருவகப்படுத்தியும், மற்றொன்றை உருவகப்படுத்தாமலும் விடுதல்

 

(பக்க எண்: 40 மொழியை ஆள்வோம்)

சரியான வினாச்சொ ல்லை இட்டு நிரப்புக.

1. நெல்லையப்பர் கோவில்  எங்கு  உள்ள து ?

2. முதல் ஆழ்வார்கள் எத்தனை  பேர் ?

3. எத்தகைய சொற்களைப் பேச வேண்டும் ?

4. அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர்  யார்?

5. அறநெறிச்சாரம் என்பதன் பொருள் யாது?

பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.

(எ.கா.) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?

விடை:

1. பூங்கொடி எங்கு சென்றாள்?

2. பூங்கொடி எப்போது பள்ளிக்குச் சென்றாள்?

3. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?

தலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.

(எ.கா.) தலைப்புச் செய்தி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் வானிலை மையம் அறிவிப்பு.   

             தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

1. சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு

விடை: சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்

2. தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் - மக்கள் ஆர்வத்துடன் வருகை

விடை:  தமுக்கம் மைதானத்தில்  தொடங்கிய புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.

3. தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி தமிழக அணி வெற்றி

விடை:   தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில்  தமிழக அணி வெற்றி பெற்றது

4. மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்

விடை:   மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில்  ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றான்.

5. மாநில அளவிலான பேச்சுப்போட்டி- சென்னையில் இன்று தொடக்கம்

விடை:   மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

கட்டுரை எழுதுக  : ஒற்றுமையே உயர்வு

முன்னுரை

   தனிமரம் தோப்பாகாது. அதுபோல தனித்திருந்தால் வெற்றி கிடைக்காது. ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உயர்வு கிடைக்கும்.

சான்றோர் பொன்மொழி

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார் திருமூலர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் திருவள்ளுவர். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்றார் பாரதியார். இப்படிப்பட்ட சான்றோரின் பொன்மொழிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

ஒற்றுமையின் உயர்வு

    வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்த இந்தக் குடும்பம் உயர்வடையும். அந்தக்குடும்பம் உயர்ந்தால், அந்த ஊர் உயரும், அந்தனர் உயர்ந்தால் அந்தநகரமே உயரும். ஒற்றுமையால் அந்த நகரம் உயர்ந்தால் தம் நாடே உயரும். நம் மக்கள் காந்தியடிகளுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டதால் தான் நமக்கு விடுதலையும் கிடைத்தது.

ஒற்றுமையின் விளைவு

     புயல், சுனாமி, வெள்ளப் பெருக்கு, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது எல்லாம் பல சமூக சேவை அமைப்புகள் ஒன்று கூடி ஒற்றுமையுடன் ஓடோடி மக்களைக் காப்பற்றினர். அதுமட்டும் அல்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்விடங்களை மீண்டும் கட்டமைத்துக் கொடுத்தனர்.

ஒருமையுணர்வு

    அல்லா, இயேசு, சிவன் ஆகிய மும்மதக் கடவுள்களும் மூன்றெழுத்தில் ஒன்றுபட்டு நிற்பதைப் பார்க்கும் போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு மதநல்லிணக்கத்தோடு வாழவேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

முடிவுரை

     மதம், சாதி, இனம் ஆகிய வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அப்பொழுது தான் நாட்டில் ஒற்றுமை நிலவும் என்பதை அறிந்து செயல்படுவோம்.

கீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.

விடை: கரும்பலகை, வகுப்பறை , ஆசிரியர், மாணவர், புத்தகம், குறிப்பேடு ,எழுதுகோல், விளையாட்டுத்திடல்



விடை: மரம், நடைபாதை , விளையாட்டு, உடற்பயிற்சி, பூங்கா , சிறுவர்கள், இளைஞர்கள்

கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொ ல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக.

(விதை, கட்டு, படி, நிலவு, நாடு, ஆடு)

விடை:

 

பெயர்ச்சொல்

வினைச்சொல்

கட்டு

புல் கட்டைத் தலையில் சுமந்தான்

வீடு கட்டினான்

படி

படியில் ஏறினாள்

நூலைப் படித்தாள்

நிலவு

இரவில் நிலவைப் பார்த்தனர்

கடும் வெப்பம் நிலவியது

நாடு

இந்தியா எனது தாய்நாடு

உணவகத்தை நாடினான்

ஆடு

ஆடு புல் மேய்ந்தது

சுமதி நடனம் ஆடினாள்

 

திருக்குறள் (பக்க எண்: 43 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. __________ ஒரு நாட்டின் அரணன்று.

அ) காடு  ஆ) வயல்  இ) மலை  ஈ) தெளிந்த நீர்

2. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்.

அ) பிறப்பால்  ஆ) நிறத்தால்  இ) குணத்தால்  ஈ) பணத்தால்

3.  ‘ நாடென்பஎன்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்ப து_________.

அ) நான் + என்ப  ஆ) நா + டென்ப  இ) நாடு + என்ப  ஈ) நாடு + டென்ப

4. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொ ல் _________.

அ) கணிஇல்லது  ஆ) கணில்லது  இ) கண்ணில்லாது  ஈ) கண்ணில்லது  

பின்வரும் குறட் பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறப்பொக்கும்  எல்லா  உயிர்க்கும்  சிறப்பொவ்வா

    செய்தொழில்  வேற்றுமை  யான்.

2. வினையால் வினையாக்கிக் கோடல் தனைகவுள்

    யானையால்  யானையாத் தற்று.

3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

    மிக்காருள்  மிக்க கொளல்.

விடை:

2. வினையால் வினையாக்கிக் கோடல் தனைகவுள்

    யானையால்  யானையாத் தற்று.

குறுவினா

1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண் டும்?

விடை: வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை , உரிய இடம்

2. ஒரு நாட்டுக்கு எவை யெல்லாம் அரண்களாக அமையும்?

விடை: : தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நா ன்கும் உள்ளதே அரண் ஆகும்.

3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

விடை: : பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

விடை:

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண் .

விடை:

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.

வினாவிடைகளை PDF வடிவில் பதிவிறக்க👇👇


 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை