பத்தாம் வகுப்பு - தமிழ் அரசுப்பொதுத்தேர்வு ஒரு மதிப்பெண் வினாக்கள்
செப்டம்பர் - 2020
1.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்
கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ)
உதியன்: சேரலாதன் ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ)
பேகன்; கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
2.
'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
அ)
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஆ)
காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
இ)
பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஈ)
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
3.
'பெரிய மீசை' சிரித்தார் - இதில் அமைந்துள்ள
தொகையின் வகை எது?
அ)
பண்புத் தொகை ஆ) உம்மைத் தொகை இ) அன்மொழித் தொகை ஈ) வினைத்தொகை
4.
உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார்
கூறியது?
அ)
குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ)
மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
5.
திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக்
கூறுகிறார். இத்தொடருக்குப் பொருத்தமான நிறுத்தக் குறியிட்ட தொடரைத் தேர்க.
அ)
திருவள்ளுவர்,
'அறிவுடையார் எல்லாம உடையார்' என்று 'அறுதியிட்டுக்' கூறுகிறார்!
ஆ)
திருவள்ளுவர்,
'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று
அறுதியிட்டுக் கூறுகிறார்.
இ)
திருவள்ளுவர். அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்!
ஈ)
'திருவள்ளுவர்', 'அறிவுடையார் எல்லாம் உடையார்'
என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
6.
"உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள்
கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ)
உருவகம், எதுகை ஆ)
மோனை, எதுகை இ) முரண், இயைபு ஈ) உவமை, எதுகை
7.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து
எழுதுகிறேன்.- இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
அ)
தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ)
சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
இ)
அறத்தைக் கூறுவதற்காக எழுதினார் ஈ) அழகியலுடன் இலக்கியம்
படைத்தார்
8.
குயில்களின் கூவலிசை, புள்ளினங்களின்
மேய்ச்சலும் பாய்ச்சலும், இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்
அ)
மொட்டின் வருகை ஆ) வனத்தின் நடனம் இ) உயிர்ப்பின் ஏக்கம் ஈ) நீரின் சிலிர்ப்பு
9.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
1)
வினைமுற்று -
i) கெடு
2)
தொழிற்பெயர் - ii) கட்டு
3)
முதனிலைத் தொழிற்பெயர்
- iii)எய்தல்
4)
வினையடி - iv) வந்தான்
அ)
1-iv, 2-iii, 3-ii, 4-i ஆ) 1-iii, 2-i, 3-iv, 4-ii இ) 1-iv, 2-iii, 3-1, 4-ii ஈ) 1- i,2- iii, 3-ii, 4-iv
10.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேர்க. தராசின் இரண்டு
தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை ஈக்வலாக வையுங்கள்.
அ)
தங்க பிஸ்கட்டுகளைச் சரியாக ஆ) தங்கக் கட்டிகளை ஈக்வலாக
இ)
தங்கக் கட்டிகளை ஈடாக ஈ) தங்கக் கட்டிகளை முறையாக
11.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ---
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ)ஆநிரை கவர்தல் இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை
முற்றுகையிடல்
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14,
15) விடை தருக.
செம்பொ
னடிச்சிறு கிங் கிணியொடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு
மொளி திகழரை வடமாடப்
பைம்பொ
னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு
வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி
விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
12.
பாடலின் இலக்கிய வகை
அ)
பத்துப்பாட்டு ஆ) சிற்றிலக்கியம் இ) எட்டுத்தொகை ஈ) பதினென்கீழ்க்கணக்கு
13.
'கிண்கிணி' என்னும் அணிகலன்
அ)
இடையில் அணிவது ஆ) தலையில் அணிவது இ) காலில் அணிவது ஈ) நெற்றியில்
அணிவது
14.
குண்டலமும் குழைக்காதும் - இலக்கணக் குறிப்பு
தருக.
அ)
எண்ணும்மை ஆ) உம்மைத் தொகை இ) உவமைத்தொகை ஈ) வினைத்தொகை
15.
சீர் எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.
அ)
பட்ட, பொட்டொடு இ)
சரிந்தாட, பதிந்தாட
ஆ) செம்பொன், பைம்பொன் ஈ) பண்டி, குண்டலம்
செப்டம்பர் - 2021
1.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ)
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ)
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ) அங்கு வறுமை இல்லாததால்
2.
நீலச்சட்டை பேசினார் - இத்தொடரில்
'நீலச்சட்டை' என்னும் சொல்லுக்கான தொகையின் வகையைத்
தேர்க.
அ)
பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
3.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
4
. மேன்மை தரும் அறம் என்பது
அ)
கைமாறு கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம்
என்ற நோக்கில் அறம் செய்வது
இ)
புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்
செய்வது
5.
திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், புதுச்சேரி, திருநெல்வேலி - இவ்வூர்ப் பெயர்களின்
சரியான 'மரூஉ' வரிசையைத் தேர்க.
அ)
திருச்சி, புதுவை, நெல்லை, உதகை ஆ) திருச்சி,
கோவை, புதுவை, நெல்லை
இ
) நெல்லை, உதகை, திருச்சி, கோவை ஈ) உதகை,
திருச்சி, புதுவை, கோவை
6.
சுட்டுரையைப் படித்து, ஆசிரியர்
மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்- இத்தொடரில் இடம்
பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்
அ)
ஐ. ஆல் ஆ) ஆல், கு இ) ஐ, கு
ஈ) இன், கு
7.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள
நகரம்
அ)
மதுரை ஆ) புகார் இ) வஞ்சி ஈ) முசிறி
8.
"நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக்
குடித்தொரு கோல
வெறிபடைத்தோம்;" -பாரதியார்
இப்பாடலில்
இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அ)
வானத்து - வைத்தாங்கே ஆ) காற்றையும் குடித்தொரு
இ)
நிலாவையும் – குலாவும் ஈ) வைத்தாங்கே - வெறிபடைத்தோம்
9.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு
நல்ல உரங்கள். – இத்தொடரில் அடிகோடிட்டப் பகுதி குறிப்பிடுவது
அ)
இலையும், சருகும் ஆ)
தோகையும், சண்டும்
இ) தாளும், ஓலையும் ஈ) சருகும், சண்டும்
10.
கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவு தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
அ)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆ) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
இ)
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ஈ) ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்
11.
ஆண் குழந்தையை 'வாடிச்செல்லம்' என்று கொஞ்சுவது
அ)
பால் வழுவமைதி ஆ) திணை வழுவமைதி இ) மரபு வழுவமைதி ஈ) கால வழுவமைதி
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14,
15) விடை தருக.
"செந்தமிழே! உள்ளுயிரே
செப்பரிய நின் பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை
விரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த
இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார்
புகழுரையும்"
12.
எந்தமிழ்நா என்பதனைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ)
எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் +நா இ)
எம் + தமிழ் + நா ஈ) என்+தமிழ்+நா
13.
செந்தமிழ் என்பது
அ)
பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
14.
உள்ளுயிரே என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?
அ)
தம் தாயை இ) தாய் நாட்டை ஆ) தமிழ் மொழியை ஈ) தம் குழந்தையை
15.
வேறார் புகழுரையும் - இத்தொடரில் ‘வேறார்'
என்பது
அ)
தமிழர் ஆ) சான்றோர் இ) வேற்றுமொழியினர் ஈ) புலவர்
மே - 2022
1.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ)
குலைவகை ஆ) மணிவகை இ) கொழுந்துவகை ஈ) இலைவகை
2.
'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?" என்று
நூலகரிடம் வினவுதல்
அ)
அறிவினா ஆ ) கொளல் வினா இ) அறியா வினா ஈ) ஏவல் வினா
3.
'ஓரெழுத்தல் சோலை - இரண்டெழுத்தில் வனம்' - என்ற
புதிருக்கான விடையைத் தேர்க.
அ)
காடு ஆ) நாடு இ) வீடு ஈ) தோடு
4.
'தூசும் துகிரும் ஆரமும் அகிலும்' -இப்பாடலடி
இடம்பெற்றுள்ள நூல் –
அ)
மணிமேகலை ஆ) தேம்பாவணி இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
5.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன்
கருதுவது
அ)
அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப்
பேணிக்காத்தல்
இ)
அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
6.
மலர்விழி பாடினாள் இத்தொடர்
அ)
பொதுமொழி ஆ) தனிமொழி இ) தொடர்மொழி ஈ) அடுக்குத்தொடர்
7.
கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக்
காற்று வீசியது -என்ற நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பு
அ)
வனத்தின் நடனம் ஆ) மிதக்கும் வாசம் இ) மொட்டின் வருகை ஈ) காற்றின் பாடல்
8.
மெய்கீர்த்தி என்பது
அ)
புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லால் பொறிக்கப்படுபவை
ஆ)
மன்னர்களின் புகழை ஓலைச்சுவடிகளில் எழுதிவைப்பது
இ)
ஒருவரது புகழைப் புலவர்கள் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை
ஈ)
அறக்கருத்துகள் அடங்கிய நூல்
9.
அறிஞருக்கு
நூல்,
அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக
அமைவது
அ)
எழுவாய் ஆ) வேற்றுமை உருபு இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
10.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும்
இலக்கியமாக ம.பொ.சி கருதியது
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
11
. 'கானடை' என்பதைப் பிரித்தால் , பொருந்தாத தொடரைத் தேர்க.
அ)
கான் அடை-காட்டைச் சேர் ஆ) கான் நடை - காட்டுக்கு
நடத்தல்
இ)
கால் நடை - காலால் நடத்தல் ஈ) கால் உடை காலால் உடைத்தல்
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14,
15) விடை தருக.
"செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா
எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத்
தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை
நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்"
12.
எந்தமிழ்நா என்பதனைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ)
எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் +நா இ)
எம் + தமிழ் + நா ஈ) என்+தமிழ்+நா
13.
செந்தமிழ் என்பது
அ)
பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
14.
உள்ளுயிரே என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?
அ)
தம் தாயை இ) தாய் நாட்டை ஆ) தமிழ் மொழியை ஈ) தம் குழந்தையை
15.
வேறார் புகழுரையும் - இத்தொடரில் ‘வேறார்'
என்பது
அ) தமிழர் ஆ) சான்றோர் இ) வேற்றுமொழியினர் ஈ) புலவர்
ஜூன் - 2022
1.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு
நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
(அ) இலையும் சருகும் (ஆ) தோகையும் சண்டும் (இ) தாளும் ஓலையும் (ஈ) சருகும் சண்டும்
2.
'பெரிய மீசை' சிரித்தார் கோடிட்ட சொல்லுக்கான தொகையின்
வகை எது?
(அ) பண்புத் தொகை (ஆ) உவமைத் தொகை (இ) அன்மொழித் தொகை (ஈ) உம்மைத் தொகை
3.
'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார்
கூறியது ?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி (ஈ) நோயாளியிடம் மருத்துவர்
4.
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும்
தெருளை"
என்று
இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?
(அ) தமிழ் (ஆ)
அறிவியல் (இ) கல்வி ஈ) செல்வம்
5.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் (ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் (ஈ) அங்கு வறுமை இல்லாததால்
6.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்:
(அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ)
வெற்றி பெறுதல்
(இ) வலிமையை நிலைநாட்டல் (ஈ) கோட்டையை முற்றுகையிடல்
7.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் :
(அ) அகவற்பா (ஆ) வெண்பா (இ) வஞ்சிப்பா (ஈ) கலிப்பா
8.
வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி :
(அ) உவமை (ஆ)
தற்குறிப்பேற்றம் (இ)
உருவகம் (ஈ) தீவகம்
9
. 'சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேக
வேண்டும்' - என்று கூறியவர்
அ)
பாரதியார் (ஆ) க.
சச்சிதானந்தன் (இ)
நம்பூதனார் (ஈ)
தனிநாயக அடிகள்
10.
'மொழி ஞாயிறு' என்றழைக்கப்படுபவர் யார்?
(அ) தமிழழகனார் (ஆ) கம்பர் (இ)
தேவநேயப் பாவாணர் (ஈ)
வைரமுத்து
11.
எய்துவர் எய்தாப் பழி -இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது ?\
(அ) கூவிளம் தேமா மலர் (ஆ) கூவிளம் புளிமா நாள்
(இ ) தேமா புளிமா காசு (ஈ) புளிமா தேமா பிறப்பு
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14,
15) விடை தருக
"காற்றே, வா
மகரந்தத்
தூளைச் சுமந்து கொண்டு,
மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன்வா
இலைகளின்
மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து,
மிகுந்த
ப்ராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு"
12.
'மயலுறுத்து' என்பதன் பொருள்:
(அ) விளங்கச் செய் (ஆ) மயங்கச் செய் (இ) அடங்கச் செய் (ஈ) சீராக
13.
ப்ராண ரஸம் பொருள் தருக.
(அ) உயிர் வளி (ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு (இ) ஹைட்ரோ கார்பன் ஈ) கந்தக-டை-ஆக்ஸைடு
14.
'மிகுந்த' -இலக்கணக் குறிப்பு தருக.
(அ) வினையெச்சம் (ஆ) முற்றெச்சம் (இ) பெயரெச்சம் (ஈ) வினைத்தொகை
15.
நீரலைகளின் - பிரித்தெழுதுக.
(அ) நீர் + அலைகளின் (ஆ) நீரின் + அலைகளின் (இ) நீரலை + களின் (ஈ) நீர + அலைகளின்
ஏப்ரல் - 2023
1.
காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்'
நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி
குறிப்பிடுவது.
(அ) இலையும் சருகும் (ஆ) தோகையும் சண்டும் (இ) தாளும் ஓலையும் (ஈ) சருகும் சண்டும்
2.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
(அ) அங்கு வறுமை இல்லாததால்
(ஆ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
(இ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(ஈ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
3.
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) உழவு, மண், ஏர், மாடு (ஆ)
மண், மாடு, ஏர், உழவு (இ) உழவு, ஏர்,
மண், மாடு (ஈ) ஏர்,
உழவு, மாடு, மண்
4.
"பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க" என்று
வேண்டினார்.
(அ) கருணையன், எலிசபெத்துக்காக (ஆ) எலிசபெத், தமக்காக
(இ) கருணையன், பூக்களுக்காக (ஈ) எலிசபெத், பூமிக்காக
5.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்
(அ) துலா (ஆ)
சீலா இ) கலா (ஈ) இலா
6.
அருந்துணை என்பதைப் பிரித்தால்
(அ) அருமை + துணை (ஆ) அரு + துணை (இ) அருமை + இணை (ஈ) அரு + இணை
7.
தேர்ப்பாகன் இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.
(அ) வினைத்தொகை (ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(இ) பண்புத்தொகை (ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
8.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்
கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.
(அ) உதியன் ; சேரலாதன் (ஆ) அதியன் ; பெருஞ்சாத்தன்
(இ) பேகன்; கிள்ளிவளவன் (ஈ) நெடுஞ்செழியன் : திருமுடிக்காரி
9.
"நாற்றிசையும் செல்லாத நாடில்லை”
"ஐந்துசால்பு ஊன்றிய
தூண்" இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும்
அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.
(அ) நான்கு, ஐந்து - ச, ரு (ஆ) மூன்று, நான்கு - ங, ச (இ) ஐந்து, ஏழு - ரு, எ ஈ) ஆறு ,ஏழு - சு,எ
10.
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்" - பாரதியார்
இப்பாடலடியில்
இடம்பெற்றுள்ள வழுவமைதி.
(அ) திணை வழுவமைதி (ஆ) பால் வழுவமைதி (இ) மரபு
வழுவமைதி (ஈ) கால வழுவமைதி
11
. பாடி மகிழ்ந்தனர் எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ)
பெயரெச்சத்தொடர் (ஆ) வினையெச்சத்தொடர் (இ) வேற்றுமைத்தொடர் (ஈ) விளித்தொடர்
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14,
15) விடை தருக.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்:
பட்டினும் மயிரினும் பருத்தி
நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர்
இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும்
அகிலும்"
12.
இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது ?
(அ) நீதிவெண்பா (ஆ) புறநானூறு (இ) மணிமேகலை (ஈ) சிலப்பதிகாரம்
13.
பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
(அ) பகர்வனர் ; பட்டினும் (ஆ)
பட்டினும் : சுட்டினும் (இ) கட்டும் ; தூசும் (ஈ) பட்டினும்; மயிரினும்
14.
காருகர் பொருள் தருக
(அ) உழவர் (ஆ)
நெசவாளர் (இ)
பொற்கொல்லர் (ஈ) காவலர்
15.
இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் :
(அ) பூக்களும் சந்தனமும் (ஆ) பூக்களும்; அகிலும் (இ) அகிலும் ; சந்தனமும் (ஈ) பட்டும் ; சந்தனமும்
எழுதவும்.
ஜூன் - 2023
1.
'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார்
குறிப்பிடுவது:
(அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
(ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
(இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
(ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
2.
பின்வருவனவற்றுள் முறையான தொடர்
(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
(ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
3.
'செங்காந்தன்' என்ற சொல்லில் அமைந்துள்ள
தொகையைத் தேர்க.
(அ) உவமைத் தொகை (இ) உம்மைத் தொகை (ஆ) பண்புத் தொகை (ஈ) வேற்றுமைத் தொகை
4.
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்'
என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?
(அ) வானத்தையும் பாட்டையும்
(இ) வானத்தையும் பூமியையும்
(ஆ) வானத்தையும் புகழையும் (ஈ) வானத்தையும் பேரொலியையும்
5.
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும்
தெருளை" என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?
(அ) தமிழ் (ஆ)
அறிவியல் (இ) கல்வி (ஈ) இலக்கியம்
6.
கரகாட்டத்தைக் 'கும்பாட்டம்' என்றும் 'குடக்கூத்து' என்னும்
கூறுவர். இத்தொடருக்கான வினா எது ?
(அ) சுரகாட்டம் என்றால் என்ன ?
(ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?
(இ) கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் யாவை ? (ஈ) கரகாட்டத்தின் வேறு
பெயர்கள் யாவை ?
7.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
(அ) வேற்றுமை உருபு (ஆ) எழுவாய் (இ) உவம உருபு (ஈ) உரிச்சொல்
8.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது
(அ) திருக்குறள் (ஆ) புறநானூறு (இ) கம்பராமாயணம் (ஈ) சிலப்பதிகாரம்
9.
'எந்தமிழ்நா' என்பதைப் பிரித்தால் இவ்வாறு
வரும்
(அ) எந்+தமிழ்+நா (ஆ) எந்த+தமிழ்+நா (இ) எம்+தமிழ்+நா (ஈ) எந்தம்+தமிழ்+நா
10.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் :
(அ) அகவற்பா (ஆ) வெண்பா (இ) வஞ்சிப்பா (ஈ) கலிப்பா
11.
ஓர் ஆண்டின் மொத்த மாதங்களின் எண்ணிக்கையினைக் குறிக்கும் தமிழ்
எண்ணைத்
தேர்ந்தெடுக்க.
(அ) கரு (ஆ) க உ இ) எஅ ஈ) உரு
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14,
15) விடை தருக.
"சக்தி குறைந்து போய், அதனை அவித்துவிடாதே
பேய்போல
வீசி அதனை மடித்து விடாதே.
மெதுவாக, நல்ல
லயத்துடன்,
நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு
உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்."
12.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள 'லயத்துடன்'
என்ற சொல்லின் பொருள்:
(அ) சுழலாக (ஆ) கடுமையாக (இ) சீராக (ஈ) வேகமாக
13.
பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க.
(அ) அவித்து விடாதே. நெடுங்காலம்
(ஆ) மடித்து விடாதே, பாடுகிறோம்
(இ) மெதுவாக, லயத்துடன் (ஈ) பாடுகிறோம், கூறுகிறோம்
14.
இக்கவிதையை இயற்றியவர்:
(அ) திரு.வி.க. (ஆ) பாரதியார் (இ) பாரதிதாசன் (ஈ) மு. மேத்தா
15.
'நெடுங்காலம்' என்ற சொல்லைப் பிரித்தால்
கிடைப்பது
(அ) நெடுமை+காலம் (ஆ) நெடிய-காலம் (இ) நெடு+காலம் (ஈ) நெடுங்+காலம்
ஏப்ரல் – 2024
1.
'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'
-இத்தொடரில் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
(அ) பாடிய : கேட்டவர் (இ) கேட்டவர்; பாடிய (ஆ) பாடல்; பாடிய (ஈ)
பாடல்; கேட்டவர்
2.
'மலர்க்கை' தொகையின் வகையைத் தேர்க.
(அ) பண்புத் தொகை (இ) அன்மொழித் தொகை (ஆ) உவமைத் தொகை (ஈ) உம்மைத் தொகை
3.
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்'
என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?
(அ) வானத்தையும் பாட்டையும் (ஆ) வானத்தையும்
புகழையும்
(இ) வானத்தையும் பூமியையும்
(ஈ) வானத்தையும் பேரொலியையும்
4.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு
-இக்குறட்பாவில்
இடம்பெறும் அடி எதுகைச் சொற்களைத் தேர்க.
(அ) தாளாண்மை தகைமைக்கண் (ஆ) தாளாண்மை வேளாண்மை
(இ) தகைமைக்கண் தங்கிற்றே
(ஈ) வேளாண்மை செருக்கு
5.
"இங்கு நகரப் பேருந்து நிற்குமா ?" என்று
வழிப்போக்கர் கேட்டது வினா.
"அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது விடை.
(அ) ஐய வினா, வினா எதிர்வினாதல் (ஆ) அறி வினா, மறை விடை
(இ) அறியா வினா, சுட்டு விடை (ஈ)
கொளல் வினா, இனமொழி விடை
6.
'குழந்தை வந்தது' என்ற எழுவாய்த் தொடரின்
விளித் தொடரைத் தேர்க.
(அ) குழந்தையுடன் வா (ஆ) வந்த குழந்தை (இ) குழந்தையே வா! (ஈ) குழந்தை வந்தது
7.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்களைத் தேர்க.
(அ) முல்லை, குறிஞ்சி, மருத
நிலங்கள் (ஆ)
குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
(இ) குறிஞ்சி, மருதம், நெய்தல்
நிலங்கள் (ஈ)
மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
8.
மேன்மை தரும் அறம் என்பது :
(அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது
(ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
(இ) புகழ்கருதி அறம் செய்வது
(ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
9.
காசிக் காண்டம் என்பது:
(அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் (ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர்
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் (ஈ) காசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல்
10.
'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச்
செப்பேட்டுக்
குறிப்பு உணர்த்தும் செய்தி.
(
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
11.
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு
(அ) சிங்கப்பூர் (ஆ) மலேசியா (இ) இந்தியா (ஈ) இலங்கை
பாடலைப்
படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,
13, 14, 15) விடை தருக.
"நனந்தலை உலகம் வளைஇ
நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு
தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி,
வலன் ஏர்பு.
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு
எழிலி"
12.
பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
(அ) சிலப்பதிகாரம் (ஆ) காசிக்காண்டம் (இ) நற்றிணை (ஈ) முல்லைப்பாட்டு
13.
'நனந்தலை உலகம்' என்பதன் சரியான பொருளைத்
தேர்க.
(அ) சிறிய உலகம் (ஆ) குளிர்ந்த உலகம் (இ) அகன்ற உலகம் (ஈ) வெப்பமான உலகம்
14.
'தடக்கை' -இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத்
தேர்க.
(அ) உரிச்சொல் தொடர் (ஆ) பண்புத் தொகை (இ) வினைத் தொகை (ஈ) வேற்றுமைத் தொடர்
15.
பாடலின் ஆசிரியரைத் தேர்க.
(அ) தமிழழகனார் (ஆ) நப்பூதனார் (இ) கீரந்தையார் (ஈ) இளங்கோவடிகள்
ஜூன் – 2024
1.
வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை :
(அ) குலை வகை (ஆ) மணி வகை (இ) கொழுந்து வகை (ஈ) இலை வகை
2.
போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடிக்கொள்ளும் பூவைத் தேர்க.
(அ) கரந்தைப் பூ (ஆ) வாகைப் பூ (இ) தும்பைப் பூ (ஈ) நொச்சிப் பூ
3.
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும்
தெருளை" என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?
(அ) தமிழ் (ஆ)
அறிவியல் (இ) கல்வி (ஈ) இலக்கியம்
4.
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
(அ) முல்லை, குறிஞ்சி, மருத
நிலங்கள் (ஆ)
குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
(இ) குறிஞ்சி, மருதம், நெய்தல்
நிலங்கள் (ஈ) மருதம்,
நெய்தல், பாலை நிலங்கள்
5.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும், சவாலுமாக
ஜெயகாந்தன் கருதுவது
(அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் (ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்
காத்தல்
(இ) அறிவியல் முன்னேற்றம் (ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
6.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது. (ஆ) என்மனம் இகழ்ந்தால்
இறந்துவிடாது.
(இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம். (ஈ) என்மனம் இறந்துவிடாது
இகழ்ந்தால்.
7.
பின்வருவனவற்றுள் முறையான தொடர் :
(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
(ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
8.
'தானடை' என்பதைப் பிரித்தால் வரும் சரியான பொருளைத்
தேர்க.
(அ) காவலுக்குச் செல்லுதல் (ஆ) காட்டைச் சேர்தல் (இ) காலை ஊன்றுதல் (ஈ) காத்து இருத்தல்
9.
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்
(அ) தமிழழகனார் (ஆ) அப்பாத்துரையார் (இ) தேவநேயப் பாவாணர் (ஈ) இரா. இளங்குமரனார்
10.
நாலெழுத்தில் கண்சிமிட்டும்
கடையிரண்டில் நீந்திச்
செல்லும். இப்புதிருக்கான விடையைத் தேர்க.
(அ) விண்மீன் (ஆ) நறுமணம் (இ) புதுமை (ஈ) காற்று
11.
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
இத்தொடருக்கான வினா எது ?
(அ) கரகாட்டம் என்றால் என்ன ?
(ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?
(இ) கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் யாவை ? (ஈ)
கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?
பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடைதருக.
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்.
12.
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.
(அ) கரு வளர் – வானத்து (ஆ)ஊழி – ஊழ் (இ) விசும்பில் – கிளர்ந்த (ஈ) இசையில் - ஊழியும்
13.
இப்பாடல் இடம்பெற்ற நூல்
(அ) முல்லைப்பாட்டு (ஆ) பரிபாடல் (இ) நீதிவெண்பா (ஈ) திருக்குறள்
14.
இப்பாடலின் ஆசிரியர்
(அ) நப்பூதனார் (ஆ) பூதஞ்சேந்தனார் (இ) கீரந்தையார் (ஈ) குலசேகராழ்வார்
15.
விசும்பு, இசை, ஊழி
பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
(அ) காற்று, முறை, கடல் (ஆ) மேகம், இடி, ஆழம் (இ) வானம், பேரொலி, யுகம் (ஈ) வானம், காற்று, காலம்