சிறப்பு திருப்புதல் தேர்வு 2 – இயல்
4,5,6
விடைக்குறிப்புகள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே”
– யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
2. குலசேகர ஆழ்வார் “
வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.
– ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
3) பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும்,பாட்டையும்
ஆ)
வானத்தையும்,புகழையும்
இ)வானத்தையும்,பூமியையும்
ஈ) வானத்தையும்,பேரொலியையும்.
4) இடைக்காடனாரின்
பாடலை இகழ்ந்தவர்----இடைக்காடனாரிடம் அன்புவைத்தவர்---
அ) அமைச்சர், மன்னன் ஆ) அமைச்சர்,இறைவன் இ) இறைவன், மன்னன் ஈ) மன்னன், இறைவன்
5)
அருந்துணை
என்பதைப் பிரித்தால்-
-------------என வரும்
அ)
அரு+துணை ஆ) அருமை +துணை
இ) அருமை+இணை ஈ) அரு+இணை
6)’இங்கு
நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர்
கேட்பது----------வினா.
‘அதோ அங்கு நிற்கும்’ என்று மற்றொருவர்
கூறியது--------------விடை
அ)
ஐய வினா,வினா எதிர் வினாதல் ஆ) அறியா வினா,மறை விடை
இ) அறியா வினா,சுட்டு விடை ஈ) கொளல் வினா,இனமொழி விடை
7) “அருளைப் பெருக்கி
அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெருளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது
அ)
தமிழ் ஆ) அறிவியல்
இ) கல்வி ஈ) இலக்கியம்
8)’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம்
வைத்தும்’என்னும் சின்னமனூர்ச்செப்பேடு உணர்த்துவது
அ) சங்க காலத்தில் மொழி
பெயர்ப்பு இருந்தது ஆ) காப்பிய காலத்தில்
மொழிபெயர்ப்பு இருந்தது
இ) பக்தி
இலக்கியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது
9) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை,
குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி,
பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,
மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம்,
நெய்தல், பாலைநிலங்கள்
10) கோசல
நாட்டில் கொடையில்லாத காரணம் என்ன?
அ) நல்லஉள்ளம்
உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ)
அங்கு வறுமைஇல்லாததால்
11) பாரத ஸ்டேட் வங்கியில் உரையாடு மென்பொருள் யாது?
அ) துலா
ஆ) இலா
இ)
கலா
ஈ)
குலா
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக
செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை
12) நுதல்
என்ற சொல்லின் பொருள்
அ) கண் ஆ) நெற்றி இ) முகம் ஈ) செவி
13) பைம்பொன்
என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) விளித்தொடர் ஈ)
அடுக்குத்தொடர்
14) இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) பரிபாடல் ஆ) மலைபடுகடாம் இ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் ஈ) பெருமாள் திருமொழி
15) மோனை நயத்தைத் தேர்ந்தெடு
அ) பதிந்தாட – அசைந்தாட ஆ) செம்பொனடி – பைம்பொன் இ) கம்பி - கட்டிய ஈ) உரு - அறிவாரா
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)
16) மருத்துவத்தில்
மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
விடை:
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்
# நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்
# அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியப்பங்கு
வகிக்கிறது.
17) வருங்காலத்தில்
தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் இரண்டனை எழுதுக
விடை: இயந்திர மனிதன், தகவல் தொடர்புக் கருவிகள்
18)
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக
விடை: அருளைப்பெருக்க கல்வி கற்போம் , அறிவைத்திருத்த
கல்வி கற்போம்
19) உறங்குகின்ற கும்பகன்ன’எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே’உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை
என்னசொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
விடை:
ü பொய்யான வாழ்வு முடியப்போகிறது.
ü காலனின் தூதர் கையில் உறங்குவாய் என்கிறார்கள்
20) சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்
– இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக
விடை:.
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது.
ü மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர்.
ü உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது
21) ’உலகு’ என முடியு,ம் குறளை அடிமாறாமல் எழுதுக.
விடை:
குற்றம்
இலனாய்க் குடியசெய்து வாழ்வானைச்
சுற்றமாச்
சுற்றும் உலகு
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
22) “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக்
கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
விடை: "சீசர் எப்போதும் என்
சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக்
கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்
23)
இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ... இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
விடை:
# மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா
வினா
# மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? - ஐய வினா
24) கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே
பரதவர் கடலுக்குச் சென்றனர்.
விடை: உழவர்கள்
வயலில் உழுதனர். நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே
பரதவர் கடலுக்குச் சென்றனர்.
25) வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை: வினா 6 வகைப்படும் . அவை,
1.
அறிவினா
2.
அறியா
வினா
3.
ஐய
வினா
4.
கொளல்
வினா
5.
கொடை
வினா
6.
ஏவல்
வினா
26) கொடுக்கப்பட்டுள்ள
இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க. அ. இயற்கை-செயற்கை ஆ.விதி-வீதி
விடை: அ. செயற்கை இயற்கையை அழிக்கக் கூடியது ஆ. அவன் தலைவிதியால் வீதியில் நின்றான்
27) குறிப்பைப்
பயன்படுத்தி விடை தருக: குறிப்பு – எதிர்மறையான சொற்கள் 1. கொடுத்துச்சிவந்த 2.
மறைத்துக்காட்டு
விடை: அ. கொடுக்காமல் சிவந்த ஆ. வெளிப்படையாகக் காட்டு
28) கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க : 1. Nanotechnology 2. Thesis
விடை: 1.
மீநுண் தொழில்நுட்பம் 2. ஆய்வேடு
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) இன்றைய
அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா?என்பதை விளக்குக.
விடை:
# மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.
# செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
# மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.
30) உங்களுடன்
பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
விடை:
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும்.
ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும்.
ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும்.
31)
பத்தியைப் படித்து விடை எழுதுக
“போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும்
கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில்
நின்றுகொண்டும் குதிரைவடிவுள்ளகூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால்
குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும்
இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும்
அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக்கூறப்படுகிறது.
1.
“போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி
நிகழ்த்திக்காட்டும் கலை யாது?
விடை: பொய்க்கால் குதிரை ஆட்டம்
2.
மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கலை
எது?
விடை: பொய்க்கால்
குதிரை ஆட்டம்
3.
இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.
விடை: பொய்க்கால்
குதிரை ஆட்டம்
பிரிவு-2 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)
32) மாளாத
காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
விடை:
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.
# நோயாளியும் அதைப் பொறுத்துக் கொள்கிறார்.
# அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன்
என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.
33) மன்னன் இடைக்காடனார்என்றபுலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம்தருக.
விடை:
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.
ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்
ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.
ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
34) அருளைப் பெருக்கி
(அல்லது) வாளால் …. எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக.
விடை:
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
பிரிவு-3 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)அலகிட்டு வாய்பாடு
எழுதுக:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து.
விடை:
சீர் |
அசை |
வாய்பாடு |
தொழுதகை |
நிரை+நிரை |
கருவிளம் |
யுள்ளும் |
நேர்+நேர் |
தேமா |
படையொடுங்கும் |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
ஒன்னார் |
நேர்+நேர் |
தேமா |
அழுத |
நிரை+நேர் |
புளிமா |
கண்ணீரும்
|
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
அனைத்து. |
நிரைபு |
பிறப்பு |
இத்திருக்குறள் “ பிறப்பு” எனும் ஓரசைச்சீர் வாய்பாட்டில்
முடிந்துள்ளது
36) முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை
புகுத்தி விடும். இதில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக
விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள் – தொடக்கம் முதல்
இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது.
37) தற்குறிப்பேற்ற அணியைச் சான்றுடன் விளக்குக.
விடை:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை
ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.
சான்று:
“ போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“
அணிப்பொருத்தம்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது,
காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது கோவலன் கண்ணகியை,”மதுரை நகருக்குள் வரவேண்டாம்”எனக் கூறி, கையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது
தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.
பகுதி-4 (மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38) அ)
இறைவன்,புலவர் இடைக்காடனார் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன்
எழுதுக
விடை:
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.
ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்
ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.
ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.
ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்
ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
(அல்லது)
ஆ) சந்தக் கவிதையில்
சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும்
கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை
தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே!
வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப்
பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......
இவ்வுரையைத் தொடர்க.
விடை:
ü “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்
கம்பர்.
ü சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார்.
ü பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர்
பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.
ü இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில்
வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம்
39) அ) Kalaignar
Karunanidhi is known for his contributions to Tamil literature. His
contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies,
historical novels, stage-plays, dialogues and movie songs. He has written
Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many
poems, essays and books. Apart from literature, Karunanidhi has also
contributed to the Tamil language through art and architecture. Like the
Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the
construction of Valluvar Kottam he gave an architectural presence to
Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high
statue of Thiruvalluvar in honour of the
scholar.
விடை:
தமிழ்
இலக்கியத்திற்கு தான் செய்த படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது
படைப்புகளில்,
கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள்,
புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம்.
திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள்
மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாகவும் கருணாநிதி அவர்கள்
தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு, "குறளோவியம்"
எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர்
கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை
சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி
திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார்.
(அல்லது)
ஆ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள்
நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/
கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக
குறிப்பு - நூல் தலைப்பு-
நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.
விடை:
குறிப்புச்சட்டகம் |
நூலின்
தலைப்பு |
நூலின்
மையப் பொருள் |
மொழிநடை |
வெளிப்படுத்தும்
கருத்து |
நூலின்
நயம் |
நூல்
கட்டமைப்பு |
சிறப்புக்கூறு |
நூல் ஆசிரியர் |
நூலின் தலைப்பு:
பரமார்த்தகுரு கதை
நூலின் மையப் பொருள்:
சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.
மொழிநடை:
நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும்
வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
வெளிப்படுத்தும் கருத்து:
பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என
ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.
நூலின் நயம்:
விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும்
எழுதப்பட்டுள்ளது.
நூல் கட்டமைப்பு:
சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில்
நூலின் கட்டமைப்பு உள்ளது.
சிறப்புக்கூறு:
ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை
வெளிப்படுத்துவதாக உள்ளது.
நூல் ஆசிரியர்: வீரமாமுனிவர்.
40) அ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை
உங்களின் எண்ணங்களால் நிரப்புக.
1. வானம் கருக்கத் தொடங்கியது.
மழைவரும்போலிருக்கிறது.
2.அனைவரின் பாராட்டுகளால்,
வெட்கத்தில் பாடகரின் முகம் ..........
3. ............ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக்குளுமையாகஇருக்கும்
...........புல்வெளிகளில் கதிரவனின் ..............வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் ...................
விடை:
1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது
3. வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும் புல்வெளிகளில்
கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் கருத்து விடும்
(அல்லது)
ஆ)
நிகழ்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள்
செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
விடை:
1.பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம் நிகழ்த்துதல்
2.
எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல்
3.
கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம்
நிகழ்த்துதல்
4.
விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல்.
5.
விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல்.
41) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் படிவத்தை நிரப்புக.
விடை:
தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்
உறுப்பினர்
சேர்க்கை விண்ணப்பப்
படிவம்
1. மாணவரின் பெயர் : வா. நிறைமதி
2. பாலினம் : பெண்
3. பிறந்த நாள் : 27-12-2008
4. தேசிய இனம் : இந்தியன்
5. இரத்த வகை : O+
6. உயரம் மற்றும் எடை : 167 செ.மீ/52 கி.கி
7. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : வெ.க.வாசு
8. வீட்டு முகவரி :
949 கம்பன் வீதி, மதுரை-1
9. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210
10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு
: 10.ஆம் வகுப்பு
11. பள்ளியின் முகவரி :
அரசு
உயர்நிலைப்பள்ளி, மதுரை-1
12. சேர விரும்பும் விளையாட்டு : கால்பந்து
வா.நிறைமதி
மாணவரின் கையெழுத்து
வெ.க.வாசு
பெற்றோர்/பாதுகாவலர் கையெழுத்து
இடம்:
மதுரை
நாள்: 04-01-2024
42) காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக.
விடை:
அன்பைச் சொல்லும் காட்சி
ஆர்வம் தூண்டும் காட்சி
இன்பம் கூட்டும் காட்சி
ஈகை உணர்த்தும் காட்சி
உள்ளம் மகிழும் காட்சி
ஊக்கம் ஊட்டும் காட்சி
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43) அ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க்
கோப்பையைஎடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன்
நின்றுவிடுமா? இக்கருத்துகளைஒட்டிச் 'செயற்கை
நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக..
விடை:
# செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும்.
# மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும்.
# வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும்.
# செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.
# மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.
# பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன்
தனது சேவையை அளிக்கும்.
(அல்லது)
ஆ) போராட்டக் கலைஞர்
– பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக்கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக்
கொண்டு கட்டுரை வரைக.
விடை:
குறிப்புச்சட்டகம் |
முன்னுரை |
போராட்டக்
கலைஞர் |
பேச்சுக்
கலைஞர் |
நாடகக்
கலைஞர் |
திரைக்கலைஞர் |
இயற்றமிழ்க்
கலைஞர் |
முடிவுரை |
முன்னுரை:
பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போராட்டக் கலைஞர்:
தனது 14.ஆம் வயதில்
இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார்.
பேச்சுக் கலைஞர்:
பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு,
தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு
பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார்.
நாடகக் கலைஞர்:
கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார்.
தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு விழாவில் “ கலைஞர் ” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது.
திரைக்கலைஞர்:
எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான
வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார்.
இயற்றமிழ்க் கலைஞர்:
கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள்
மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார்.
முடிவுரை:
தமிழின் மெருமிதங்களையும்,
விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.
44) அ) "அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்" என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
விடை:
முன்னுரை:-
இலக்கியங்களில் நிலவிய
அறிவியல் கோட்டுபாடுகளைும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு
ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.
பேரண்டம்:-
பேரண்டப் பெருவெடிப்பு,
கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை.
இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல்
அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார்.
விண்மீன்கள்:-
ஒரு விண்மீனின் ஆயுள் கால
முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருக்கத்
தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே
சென்று அளவற்றதாகிறது என் விளக்கினார்.
கதிர்வீச்சும் துகளும்:-
“சில நேரங்களில் உண்மையானது, புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான்
கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம்.
திரும்புதல்:-
விண்வெளி ஓடம் பூமிக்கு
திரும்பிக் கொண்டிருந்தபோது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள்
போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே
பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.
முடிவுரை:-
விண்வெளிப் பயணம் மேற்கொண்ட
எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.
. (அல்லது)
ஆ) ’கற்கைநன்றேகற்கைநன்றே
பிச்சைபுகினும்கற்கைநன்றே’
என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட
புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரைஏற்றிய கதையைப்பற்றிய
உங்களின் கருத்துகளைவிவரிக்க.
விடை:
ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால.
கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.
ü கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.
ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது.
ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல்
எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.
ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து
இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று
கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.
45) அ)
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை– கலைத்திருவிழா - அரங்குகள்-அமைப்பு-உணவுப்பண்டங்கள்-நிகழ்த்தப்பட்ட கலைகள்- பொழுதுபோக்கு
– முடிவுரை.
விடை: முன்னுரை:
கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.
அறிவிப்பு:
நுழைவாயிலின் வழியாக
நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப்
படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும்
ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.
அமைப்பு:
ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த
வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும்
அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.
சிறு அங்காடிகள்:
கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும்
பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது
நிகழ்த்தப்பட்ட கலைகள்:
அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம்,
கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும்
வகையில் நிகழ்த்தப்பட்டன.
முடிவுரை:
.கூட்ட நெரிசல் மிக
அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது.
ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச்
சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.
(அல்லது)
ஆ) ஆ)
”விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
விடை:
முன்னுரை:
இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில்
விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை
கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:
விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா
ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண்
ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில்
மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.
நமது கடமை:
விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு
செய்யக்கூடாது.
முடிவுரை:
“வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவை
நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப்
படைக்க வேண்டும்.